நவீன தொழில் நுட்பத்தில் விஸ்வரூபம் 2 படம்: கமலஹாசன் தகவல்

c06b07d3-d9ec-4071-aeb8-a427a74df0bc_S_secvpfகமலின் விஸ்வரூபம் 2 படவேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சீன்கள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய சீன்களை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.
‘விஸ்வரூபம் 2’ படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது.
மக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் போஸ்டரை கமல் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

நான் ரசிகர்களுக்காகவே படங்கள் எடுக்கிறேன். விளம்பரத்துக்காக இந்த தொழிலை செய்ய வில்லை. விஸ்வரூபம் படத்தின் கதையை ஆரம்பத்திலேயே இரண்டு பாகமாக எழுதினேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்த பிறகுதான் அதன் இரண்டாம் பாகம் பற்றி அறிவிப்பது வழக்கும். ஆனால் நான் படத்தின் முதல் பகுதியை எடுக்கும் போதே இரண்டாம் பகுதி பற்றி தெரிவித்து விட்டேன்.
முதல் பகுதி படப்படிப்பை நடத்தும் போதே இரண்டாம் பகுதியையும் படமாக்கினேன். என் நம்பிக்கை வெளிப்படுத்தும் படமாக இது இருக்கும். மனித உறவுகளின் உணர்ச்சிகள் இருக்கும். அத்துடன் அதிநவீன தொழில் நுட்பத்தில் இரண்டாம் பாகத்தை படமாக்குகிறேன். தண்ணீருக்கு அடியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் காதலும் இருக்கும்.
இவ்வாறு கமலஹாசன் கூறினார்.

0 comments:

Post a Comment