ஒளிர்வு:77- - தமிழ் இணைய சஞ்சிகை -பங்குனி ,2017

  தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.
மீண்டும் ஒரு பங்குனித் திங்களில் புதிய ஆரோக்கியமான அம்சங்களுடன் உங்களை மகிழ்விக்க,பயனளிக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்வடைகிறோம்.
 ...ஆனால் அவன் வாழும்வரை வசைபாடிய வாய்களெல்லாம்   அவன்இறந்துவிட்டால்   அவன் பெருமைகளை  எடுத்துப் பேச வரிசையில் காத்து நிற்கின்றன. அது ஏனென்று புரியவில்லை. வாழும்போது அவனை வாழ்த்த முடியாதவர்கள் அவன் இறக்கும் வரை காத்திருப்பது எதற்காக?
தாம் நன்மைகள் செய்யாவிடினும் செய்தவனை புகழ்ந்தாவது புகழ் பெறலாம் என்ற  சுடலை ஞானமா?
அல்லது போய்விட்டான்தானே என்ற அலட் சியமா ?
அவன் வாழும்போது அவனை புகழ்ந்திருந்தால் அவன் மனம் சந்தோஷமடைந்து சமுதாயத்திற்கு மேலும் நன்மைகள் புரிந்திருப்பானே! அவனால் பயன் பெறும் சமுதாயத்தினுள் நீயும் ஒரு அங்கம் அல்லவோ! ஒரு மனிதனை இனிய சொற்களால் இன்பமடைய செய்வதுவும் புண்ணியம் அன்றோ! 
எனவே  சமுதாயத்தினை வளர்ப்போரை வாழும்போது வாழ்த்துவோம். நாமும் வாழ்வோம்.வளர்வோம்! ..[தீபம்]


0 comments:

Post a Comment