காய்களைத்தான் பறிக்காதீர்கள்


கனிந்த பழம் 
விழுவது போல்.
கனிந்த காதல்
கை வந்து சேரும்.
காத்திருந்து காதல் செய்,
கதவைத் திறக்கலாம் காதலில்.
காதல் மீது மோகம் கொண்டு.
காயங்களை உண்டாக்காதே.
காதல்கள் காயம் கண்டால்.
கண்ணீரில்  ஆழ  வேண்டும்.
கடுகளவு பொறுமையும்
இல்லையென்றால்
காண  முடியாது 
உந்தன் முகம் ஒளியிலே.
கனிந்த பழம் தானே 
விழும் மரத்திலே
காய்களைத்தான் 
பறிக்காதீர்கள்!

-காலையடி,அகிலன்.
💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌

0 comments:

Post a Comment