
நாம் இதுவரை கூறியதில் இருந்து அறிந்து கொள்வது என்ன வென்றால், திராவிடருக்கு என தனியான எழுத்து முறை உண்டு. அவர்களே சிந்து வெளிக்கான எழுத்தை அறிமுகப் படுத்தியவர்கள். பின் அதை தென் இந்தியாவில் தொடர்ந்து பானை ஓடுகளிலும் மற்றும் நாணயங்களி லும் எழுதியுள்ளார்கள். உதாரணமாக, உருசிய அறிஞரான யூரி நோரோசோவ் [Yuri Knorozov], சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் திராவிட மொழியாக...