பொறாமையெனும் தீயே ............




 கலியுகத்தில் மாந்தர்கள் இடையே
  தீ ப்பொறி போல அலை பாய்ந்து கொண்டு 
இருக்கும்  பொறமையே- நீ 

மனிதனின் வளர்சிக்கு  துணை புரியும் நீயே 
இறப்புக்கு காரணமாக வருவது  ஏன்?

கற்று க்கொள்ள துணையாக இருக்க வேண்டிய நீயே
மனிதனை விழுங்க துணை புரிவது   நியாயமா...!
மாந்தர்களின் மனங்களில்  பாவ செயல்களை
 தூண்ட வைக்கும்  பொறமையே..
உன் தீ  காயத்தால் எத்தனை மாந்தர்கள் 
வாழ்வு  இருளில் முழ்கி  போய் இருக்கிறது 
உனக்கு புரியுமா ?
காரணம் இன்றி வரும் பொறாமையே
மாந்தர்களை தீங்கு செய்யாது ஒதுங்கி கொள்
நீ குறுக்க வருவதால் உடைவது
 மனித வாழ்வு மட்டும் இல்லை 
 நல்ல உறவுகளின் நட்பும் அல்லவோ!
மனமே பொறமை சிந்தனை கொள்ளாது
தெளிவான சிந்தனை கொண்டால் 
வளமான வாழ்வு வாழலாம்
பொறமை தீயில் நீ விழுந்தால் -அது 
 உன்  வாழ்வை கொன்று விடும்.
                                                                         ஆக்கம்:அகிலன்,தமிழன் 

0 comments:

Post a Comment