தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:15‏

[தொகுத்தது:கந்தையா  தில்லைவிநாயகலிங்கம்]
நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமேரியர்கள் வாய்க்கால் முறையை பாவித்தார்கள்
உலகத்தில் மனிதனுடைய முதல் நாகரிகம் தோன்றிய இடம் என்றுஅழைக்கப்படுவது மெசெப் பொத்தோமியா[மேசொபோடமியா],இப்போதைய ஈராக் ஆகும்சுமேர் மக்களை,அதாவது சுமேரியனை
சிலவேளை  திடீர் நாகரிகம் என கூறுவர்மேசொபோடமியாவில் உள்ளடைகரிஸ்யூப்ரடிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும்[Tigris and Euphrates rivers]இடைப் பட்ட பகுதியில் கிறிஸ்துக்கு முன் கிட்டத்தட்ட 4000 வருடஅளவில் திடீர் என உண்டாகிய நாகரிகம் என்பதால் ஆகும்.  5000வருடங்களுக்கு முன் சுமேரியர்களே உலகின் முதல் எழுத்து வடிவத்தைஉண்டாக்கியவர்கள் என நம்பப்படுகிறது.இந்த எழுத்து வடிவம் ஆப்புஎழுத்து[Cuneiform script/
மெசெப்பொத்தோமியா கல்வி
கூனிபோம் எழுத்துக்கள் முக் கோண வடிவம்கொண்டவை ஆகும்.]வடிவம் ஆகும்.அவர்களே முற்காலத்திய  நகர்  சார்ந்தநாகரிகத்தை தெற்கு மேசொபோடமியாவில் அமைத்தவர்கள்இங்குதான்கிறிஸ்துக்கு முன் 3500 க்கும் 3000 வருடங்களுக்கும் இடையில் விவசாயகுடியிருப்பாளர்களான இவர்கள் இந்த நகர் சார்ந்த 
பண்டைய மெசெப்பொத்தோமியா
அமைப்பைநிறுவினார்கள்இதில் மிகவும் சிறந்து விளங்கியது ஊர் என்ற நகரமாகும்.ஆனால் குழப்பமூட்டும் ஒரு கேள்விக்கு அதாவது அவர்கள் எங்கிருந்துவந்தார்கள்என்பதற்கு நாம் விடை தேட  வேண்டி உள்ளதுஅப்போது தான்இந்த சுமேரியர்களைப் பற்றிய   மர்மம் தீர்க்கப் படும்.அவர்களுக்கு என்றுஒரு மொழி இருந்ததுஆனால் அது அவர்களை 
பண்டைய மெசெப்பொத்தோமியா
சுற்றிய பகுதி எதன் உடனும்ஒத்து போக வில்லைஅவர்கள் கிழக்கில் இருந்து வந்தவர்கள் எனநம்பப்படுகிறது .ஆனால் கடல் வழியாகவோ தரை வழியாகவோ எனதெரியாதுஎன்றாலும் சில உண்மைகள் அவர்கள் எங்கு இருந்து வந்தார்கள்என்பதை காட்டும்.உதாரணமாக சுமேரியன் கடவுள்
அடிக்கடி குன்றில் நிற்பது போலவே எடுத்துச் சொல்லப்படுகிறது.இதை தமிழ்கடவுள் முருகனுடன் ஒப்பிடலாம்.மேலும் அவர்களுடைய முன்னையகட்டிடங்கள் மரக் கட்டைகளை அடிப் படையாக கொண்டவை.ஆகவேமரங்கள் செறிந்து இருக்கும் ஓர் இடத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.

ஊர் நகரத்தின் மாதிரி.ஊரில் உள்ள அரச சுடுகாட்டில் இருந்து எடுக்கப்பட்ட கைவினை கலைப்பொருள் இதுவாகும்
தொல்பொருளியலின்படி,அவர்கள்[சுமேரியர்கள்தங்களை கறுத்ததலையினர் என அழைத்ததுடன்அவர்கள் நாடோடியினர் எனவும் எங்குஇருந்து வந்தார்கள் என சரியாக இன்னும் அடையாளம் காணப்படாதவர்கள்எனவும் அறியப்படுகிறது.அவர்கள் மேசொபோடமியாவில் இருந்த இரண்டுஆறுகளுக்குஅதாவது  யூபிரிடிஸ் டைகிரிஸ் ஆறுகளுக்கு [the Tigris and the Euphrates] இடையிலும் அருகிலும் குடியேறி சகல கூறுகளையும்கொண்ட சிறப்புடைய நாகரிகத்தை மேம்படுத்தினார்கள்அவர்கள்வேளாண்மையை  ஒரு ஒழுங்கு முறை படுத்திநீர்ப் பாசனத்தை விருத்திசெய்துமுதலாவது சக்கரத்தையும் குயவர் பயன் படுத்தும் சக்கரத்தையும்செய்து ஒரு தொழில்நுட்ப முன்னேற்றம் அடைந்தார்கள்.அது மட்டும் அல்லஒரு வித குடியாட்சி நிலை நாட்டி,கிறிஸ்துக்கு முன் 4000 ஆண்டளவில்நகரங்கள் அமைத்தார்கள்.பேராசிரியர் சாமுவேல் நோவா கிராமர்[Professor Kramer] அவர்களது வாழ் நாள் உழைப்பால் சுமேரியர்கள் நல்லதோர்கவிதைகளும் இலக்கியங்களும் எழுதியது தெரிய வந்ததுஎப்படியாயினும்அவர்களும் அவர்களை வென்று அங்கு வாழ்ந்தவர்களும் அதாவது பாபிலோன்,  அசிரிய மக்கள் போன்றோர்களும்[Babylon and Assyria]அந்த நாகரிகத்தை,நகரத்தை கைவிட்டு தீடீரென மறைந்து போனார்கள்.அவை அந்த நாகரிகம் 2000 ஆண்டுகளுக்கு முன் மண்ணுக்குள் மூடப்பட்டுவிட்டது.

சுமேரியன் படம் எழுத்துகளுடன் எழுத ஆரம்பித்தான்.அங்கு ஒவ்வொரு உருவடிவமும் ஒரு முழு சொல்லை குறித்ததுஉதாரணமாக,டு[du] என்றசொல்,பாதத்தின் படம்  மூலம் குறிக்கப்பட்டதுஆனால் பாதத்தின் படம்மேலும்  நில்,போ,வா,கொண்டு வாபோன்றவற்றையும் குறிக்கலாம்.ஒருவினைச் சொல்லை தெரிவிக்க ,இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்டசின்னம்/குறியீடு ஒன்றாக போடப்பட்டன . உதாரணமாக,ஒரு தலைகிண்ணத்திற்கு பக்கத்தில் இருந்தால் அது தின்/சாப்பிடு என்பதைகுறிக்கும்.சுமேரு எழுத்து மிகவும் சிக்கலானது.அதனால் ஒரு சிலஎழுத்தாளர்தான் அதில் தேர்ச்சியடைந்தார்கள்.கிட்டத்தட்ட  250 பேர்அளவில் இருக்கலாம் என மதிக்கப்பட்டுள்ளதுஇவர்களை சுமேரியஅறிஞர்கள்[sumerologist] என அழைப்பர்.

சுமேரியன் தனது நிலத்தை/நாட்டை "கி .என் .கிர்என அழைத்தார்கள்.இதன் பொருள் ஒளிமயமான கடவுளின் நாடு ஆகும்["Land of the Lords of Brightness,"]. சுமேரிய மொழியில் சமயத்தை  குறிக்கும் சொல்கிடையாது.ஏனென்றால் அங்கு ஆலயத்தின் வழிபாடு குடும்ப வாழ்வின்அடிப்படையாக இருக்கிறது.இயற்கை வழிபாடே அங்கு காணப்படுகிறதுஎன்றாலும் நாளடைவில் மனித உருவம் இந்த இயற்கை சக்தியுடன் இணைந்துவிட்டது.பண்டைய சுமேரியன் தனது பல நேரங்களை கடவுளுக்குஅற்பனித்தார்கள்.இதுஇந்த அற்பனிப்பு,  வழிபாட்டாலும் தியாகம்/பலியாலும் கையாளப்பட்டது.ஆலயம் பல நோக்கத்திற்க்காகவும்பாவிக்கப்பட்டதுமுக்கிய மானவை வழிபாடும் கல்வியும் ஆகும்.ஒவ்வொருஆலயமும் கல்வி நிலையம் வைத்திருந்தனஅங்கு மாணவர்கள் கணிதமும்எழுத்தும் படித்தார்கள்சுமேரியரின் ஆசிரியர் உம்மை[ummia] எனஅழைக்கப்பட்டார்.ஒரு துணை/ஒருதார மணம் அங்கு நிலவியது.என்றாலும்காமக்கிழத்தி/வைப்பாட்டி பொறுத்துக் கொள்ளப்பட்டது.பொதுவாககுடுப்பத்தின் மூத்தவர் மணவாழ்க்கையை ஏற்பாடு செய்தனர்.மேலும் சுமேரியரின் வீடுகள் பொதுவாக ஓர் அடுக்கு வீடு.இது சுட்ட  அல்லது சூரியஒளியில் காய்ந்த களிமண்-செங்கல்லால் கட்டப்பட்டது.இது நவீன வீட்டிற்குஉரிய எல்லா வசதியையும் கொண்டுள்ளது.மேலும் செல்வந்தர்கள்  ஈரடுக்குவீடு கட்டி வாழ்ந்தார்கள்.இசை அவர்களின் வாழ்க்கையுடன்ஒட்டியிருந்தது.அது மட்டும் அல்ல கடவுளுக்கு அர்ப்பணிக்கும் கவிதைகளும்பாடல்களும் தாராளமாக  காணப்பட்டன.

மேலும்  ஈராக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது 1889 ஆம் ஆண்டுஉலகின் முதல் காதல் கடிதத்தை கவிதை வடிவில் கண்டு பிடித்தார்கள்.ஆயினும் பல  வருடங்களுக்கு பின்புதான் Philadelphia பல்கலைக்கழகபேராசிரியரான Noah Kramer  இதன் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில்தந்தார் .இக்காதல் கணவனுக்காக  முதல் இரவில் சுமேரிய ஆப்பு வடிவத்தில்எழுதியது.இது ஷு-சின் அரசனுக்கு உரைக்கப்பட்டது இந்த காதல் கடிதகவிதை அற்புதமான அர்த்தங்களை கொண்டு உள்ளது.மேலும் இதுவேஉலகின் மிகப்  பழைய காதல் பாட்டும் ஆகும் . இது 2030 BC அளவில் ஊர்என்ற நகரத்தில், 4000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.இதனைஎன்னால் இயன்றவரை தமிழில் மொழி பெயர்த்து கிழே தருகிறேன்உங்களுக்கு இது  சங்க கால காதல் பாடல்களை ஒரு வேளைநினைவூட்டலாம்?அதனால் இரண்டு முதல் இரவு பாடல்களையும் இதனுடன்சேர்த்து[சிலப்பதிகாரம் ,அகநானுறுகிழே தருகிறேன்.  

"அன்பு மணாளனேஎன் பிரியமான தோழனே !!

உன் கவர்ச்சி இனிமையானதுதேன் போல்இனிமையானது
ஆண்மையுள்ள சிங்கமேஎன் இதயத்திற்கினியகாதலனே,
உன் வசீகரம் இனிமையானதுஅமுதம் போல்இனிமையானது

நீ என்னை வயப்படுத்தி விட்டாய்,எனவே 
எனது சுய விருப்பத்தில் நான் உன்னிடம் வருவேன்
ஆண்மையுள்ள வீரனேபள்ளி அறைக்குள் என்னை
உன்னுடன் கொண்டு போ
நீ என்னை மயக்கி விட்டாய்,எனவே 
எனது  கட்டற்ற துணிவில் நான் உன்னிடம் வருவேன்
காதல் தோழனே!  படுக்கையறைக்குள் என்னை
உன்னுடன் தூக்கி  போ

மணாளனேஉனக்கு என்னை இன்பம் கொடுக்க விடு
என்  மதிப்புள்ள காதற் கண்மணியேஉனக்கு என்னை தேன் தர  விடு
தேன் சொட்டும் பள்ளியறையில் உனது கவர்ச்சியை
மீண்டும் மீண்டும் நாம் அனுபவிப்போம்,இனிய இன்பமே
இளைஞனே!உனக்கு என்னை  மகிழ்வு கொடுக்க விடு
என் அரிதான காதலனேஉனக்கு என்னை அமிர்தம் ஊட்ட  விடு 

வீரனேநீ என்னை  கவர்கிறாய்,எனவே 
என் தாயிடம் கூறு நான் என்னையே தருவேன்
என் தந்தையிடம் கேள் அவர் பரிசாய் தருவார்
உன் ஆன்மாவை எங்கே மகிழ்ச்சி படுத்துவது என்பது எனக்கு தெரியும்
மணாளனேவிடியும் வரை எமது வீட்டில் உறங்கு
உனது இதயத்திற்கு எங்கே இன்பம் கொட்டுவது  என்பது எனக்கு தெரியும்
இளைஞனேவிடியும் வரை எமது வீட்டில் உறங்கு

வீரனே!நீ என்னை விரும்புவதால்,
நீயே எனக்கு இனியவை செய்வாய் என்றால்
எனது எஜமானே!கடவுளே!!பாதுகாவலனே!!!  
"என்லில்கடவுளின் இதயத்தை  மகிழ்ச்சிபடுத்தும்
எனது  "ஷு-சின்"  அரசனே!
உனது இன்ப ஊற்றை நீயே கையாளுவாய் ஆயின்,
தேன் போல் இனிய அந்த இடத்தை நீயே பற்றுவாய் ஆயின்,
அளவு சாடியின் மூடி போல
அங்கே உன் கையை எனக்காக மூடு[வை]
 மரச் சீவல் சாடியின் மூடி போல
அங்கே உன் கையை  எனக்காக விரி[பரப்பு ]" 

குறிப்பு :ஷு சின்' :கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர்.என்லில்:மழை மற்றும் காற்று கடவுள்"

சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி முதல் இரவு:“காதல் மொழிகள்
"மாசு அறு பொன்னேவலம்புரி முத்தே!
காசு அறு விரையேகரும்பேதேனே!
அரும் பெறல் பாவாய்ஆர் உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவாஇசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்நின்னைஒ-என்று
உலவாக் கட்டுரை பல பாராட்டி,
தயங்கு இணர்க் கோதை – தன்னொடு தருக்கி,"

[குற்றம் இல்லாத[24 கரட்?] பொன்னேவலம்புரி முத்தேகுறை இல்லாதமணம் நிறைந்த பொருளேகரும்பேதேனேசுலபத்தில் கிடைக்காதபெண்ணேஎன் உயிரைப் பிடித்துவைத்திருக்கும் மருந்தேபெரும்வணிகனாகிய மாநாயகன் பெற்ற மகளே!உன்னை நான் எப்படிப்பாராட்டுவேன்மலையில் பிறக்காத மணியே என்பேனாகடலில் பிறக்காதஅமுதமே என்பேனாயாழில் பிறக்காத இசையே என்பேனா? ..........]

முதல் இரவு -அகநானுறு  136
"தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
‘ உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற ‘ என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகிஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஔதத்தே."

[இவளை நன்கொடையாக வழங்கிஏற்படுத்திக் குடுத்த, “தலை நாள்இரவில்(முதல் இரவில்), என் உயிருக்கு உடம்பாக அமைந்த இவள் உடல்முழுதும் உடையால் போர்த்தி இருப்பதால்..  ஒரே புழுக்கமா இருக்குஅவளுக்கு !அவள்  நெற்றி இப்படி வேர்க்குதே?  கொஞ்சம் காற்று வரட்டும்என எண்ணி ,அவள் அழகை பார்க்கும் ஆவலுடன்,ஆடையை திறவாய் எனச்சொல்லி,ஆர்வம் ததும்பும் நெஞ்சோடுதுணியை  நான் கவர.அய்யோ..உறையில் இருந்து உருவிய வாளைப் போல,அவளின் அழகுவிளங்கும் உடல் ஆடையில் இருந்து நீங்கியது.அவள் தன் வடிவம் மறைக்கஅறியாதவள் ஆனாள்வெட்கப்பட்டாள்(ஒய்யாரம்?) ஏய்என்னை விடுடா-ன்னு இறைஞ்சுகிறாள்;வண்டுகள் மொய்க்கும்ஆம்பல் மாலையைக் கழட்டிவச்சிட்டுகூந்தலையே இருட்டாக்கிஅந்த இருட்டில் தன்னை,மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து மறைச்சிக்கிட்டு  வெட்கப்பட்டுவரா….]


பகுதி:16 /01வாசிக்க கீழுயுள்ள தலைப்பினை அழுத்துங்கள் 
Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி:1.

Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] /பகுதி:16.



0 comments:

Post a Comment