சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

வீரம் படத்தை ஹிட்டாக்க படக்குழு புதிய திட்டம் தீட்டியுள்ளது.

அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளி அன்று ரிலீஸாகாமல் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. படமும் தமிழகம் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசூலில் ஒரு கை பார்த்துள்ளது. இதனால் ஆரம்பம் படக்குழுவினர் குஷியாகியுள்ளனர்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

இந்நிலையில் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் படம் வருகிறது. இந்த படத்தை ஹிட்டாக்க படக்குழுவினர் தீயாக வேலை செய்கிறார்கள். படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யாமல் 5 நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அப்படி செய்தால் நல்ல வசூல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

மேலும் விஜய்யின் ஜில்லாவும் பொங்கலுக்கு வருவதால் வசூலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த திட்டமாம்.  
-------------------------------------------------
300 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்' ரிலீஸ்

  300 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்' ரிலீஸ்
சென்னை, நவ.12 (டி.என்.எஸ்) தீபாவளி படங்களுக்குப் பிறகு ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் முக்கியமான படமாக 'இரண்டாம் உலகம்' உள்ளது. காரணம், இப்படம் ஒரு பேண்டசி படம் என்பதாலும், இப்படத்திற்கான பட்ஜெட் பெரியது என்பதாலும் தான்.

ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் அதே நாளில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. 
....................................................................
இவன் வேற மாதிரி டிசம்பர் 13ஆம் தேதி ரிலீஸ்

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, 'கும்கி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், 'இவன் வேற மாதிரி' படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யு.டி.வி மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக டெல்லி மாடல் அழகி சுரபி நடித்துள்ளார். இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதையடுத்து, இப்படத்தை வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
...................................................................
சரத்குமார் - பிரியாமணி நடிக்கும் 'அஞ்சாத சண்டி'
ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு 'அஞ்சாத சண்டி' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.

பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். அவருக்கு எல்லா விதமான சண்டை கற்றுத் தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் பயிற்சியாளராக சரத்குமார் நடிக்கிறார்.

சண்டை காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலில் ஸ்கேர்லெட் வில்சன் என்னும் லண்டன் அழகியை வைத்து படமாக்கியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியாமணி தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக மிகுந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
....................................................................
படங்களில் ‘பெண்களை கேலி செய்து படம் எடுப்பதா?’’ நடிகை தேவயானி ஆவேச பேச்சு
இப்போது வரும் படங்களில் ‘டாஸ்மாக்’ காட்சிகள் நிறைய இடம் பெறுகின்றன. பெண்களை கேலி–கிண்டல் செய்து படம் எடுக்கிறார்கள். இது தேவையா? என்று நடிகை தேவயானி ஆவேசமாக பேசினார்.

சினிமா படவிழா

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்த பாலாஜி மற்றும் ஜெய் குகேனி ஆகியோர் இணைந்து நடித்த மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.டிரெய்லரை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

தேவயானி பேச்சு

விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–‘‘இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி–கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக்காட்சிகள் வருகின்றன.பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் ‘டாஸ்மாக்’ காட்சிகள் இடம் பெறுகின்றன. பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்’’.இவ்வாறு தேவயானி பேசினார்.

சோனா

அடுத்து பேச வந்த நடிகை சோனா, ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை’’ என்று கூறினார்.டைரக்டர் விக்ரமன் பேசும்போது, ‘‘சிறு பட தயாரிப்பாளர்களை காப்பாற்றுவதற்காக புதிய சங்கம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன்’’ என்று கூறினார்.விழாவில் டைரக்டர்கள் பேரரசு, பத்ரி, பி.டி.செல்வகுமார், கோகுல், நடிகர்கள் மதன்பாப், பாலாஜி, இசை அமைப்பாளர் அபிஷேக் ஆகியோரும் பேசினார்கள்.பட அதிபர் ரிஷ்வான் ஜி வரவேற்று பேசினார். டைரக்டர் ஆர்.டி.ஜெயவேல் நன்றி கூறினார்.
....................................................................

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

 அஜீத் குமாரின் ஆரம்பம் படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆரம்பம் உலகம் முழுவதும் ரூ.91.63 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பம் படம் தெலுங்கில் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை ரூ.6 கோடிக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.................................................................
அடுத்த மாதம் இறுதிக்குள் 20 புது படங்கள் ரிலீஸ்
அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் 20 புதுப்படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. இந்த வருடம் இதுவரையிலும் சுமார் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. வருடம் முடிய இன்னும் 45 நாட்கள் மீதி உள்ளது. இந்த நாட்களில் மேலும் 20 படங்கள் வருகிறது. நாளை (14–ந் தேதி) ‘பீட்சா 2 வில்லா’, ‘ஆப்பிள் பெண்ணே’, ‘ராவண தேசம்’ படங்கள் ரிலீசாகின்றன. இவற்றில் ‘பீட்சா 2 வில்லா’ படம் விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான ‘பீட்சா’ படத்தின் 2–ம் பாகமாக தயாராகிறது. 

‘ராவணதேசம்’ படம் ஈழ தமிழர்களின் கஷ்டங்களை மையமாக வைத்து தயாராகியுள்ளது. வருகிற 22–ந் தேதி ‘இரண்டாம் உலகம்’, ‘மெய்யழகி’, ‘அப்பாவுக்கு கல்யாணம்’ படங்கள் வெளியாகின்றன. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கியுள்ளார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. 

வருகிற 29–ந் தேதி ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘மாயை’, ‘விழா’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை சேரன் இயக்கியுள்ளார். சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். 

அடுத்த மாதம் (டிசம்பர்) 6–ந் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘வேல்முருகன் போல்வெல்ஸ்’, ‘குற்றாலம்’ படங்கள் ரிலீசாகின்றன. ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்துள்ளார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் விமல் நாயகனாக வருகிறார். கரு பழனியப்பன் இயக்கியுள்ளார். ‘வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் கஞ்சா கருப்பு, மகேஷ் நாயகர்களாக நடிக்கின்றனர். 

கஞ்சாகருப்பே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். எம்.பி.கோபி இயக்குகிறார். டிசம்பர் 13–ந் தேதி விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி’, விஜய் சேதுபதியின் ‘ரம்மி’ மற்றும் ‘கோப்பெருந்தேவி’ படங்கள் ரிலீசாகின்றன. டிசம்பர் 20–ந் தேதி ஜீவா, திரிஷா ஜோடியாக நடிக்கும் ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘சுற்றுலா’ படங்கள் வெளியாகின்றன.
 .........................................................................

0 comments:

Post a Comment