ஒளிர்வு-(41)- பங்குனி,2014 எம்மைப்பற்றி....,

அனைவருக்கும் வணக்கம்,
தீபம் சஞ்சிகையின் வாசகர்களை நோக்கிய பணலாப நோக்கமற்ற கலைப் பணி தொடரும் வேளையில், யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக எனும் எண்ணத்துடன் யாம் செயற்பட ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் அனைவரினையும் நன்றியுடன் நோக்குகிறோம்.
பொறாமை என்பதனை நாம் என்றும் எதிரியாகவே எண்ணுகிறோம்.அதன் பாதகமான விளைவுகளை அவ்வப்போது எமது சஞ்சிகையில் வெளியிட்டும் வந்திருக்கிறோம்.ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்த்தி எனும் கவியரசின் சிந்தனை கொண்டு அனைவரும் இணைந்து வளர அனைத்து ஊடகங்களுடனும் கைகோர்த்து நிற்கிறோம்.முதலில்,
 சிந்தனைஒளி
நன்மையையும் தீமையும் மனிதனுக்கு இறைவனால் அளிக்கப்படுவதில்லை. மனிதனால் மனிதனுக்கு கிடைக்கப்பெறுகிறது.
ஒருவரின் பாவமோ அல்லது புண்ணியமோ இன்னொருவர் சுமப்பதற்கு அவை அரிசியோ, மாவோ அல்ல.அவரவர்தான் சுமக்க வேண்டும்.

0 comments:

Post a Comment