மயிலே மயிலே என்றால் மயில் இறகு போடுமா?

பொதுவாக பழமொழி என்பதே ஒரு நற்செய்தியினை எடுத்துச் சொல்லும் நாசூக்கான வாக்கியம் ஆகும்.அதனை எடுத்துச் சொல்ல எத்தனையோ பறவைகளிருந்தும் மயிலை முன்னோர் தெரிவு செய்ததுவும் அதன் சிறகில் எம்மவர் கொண்டுள்ள ஈடுபாடாகவும் இருக்கலாம். மயில் என்றதும் அனைவருக்கும் அழகு தோகை விரித்து ஆடும் ஆண் மயிலே ஞாபகத்துக்கு வரும்.
கிளி என்றாலும் மனிதனின் பேச்சுக்களை புரிய வைக்கலாம்.  ஒரு பறவையான மயிலுக்கு அது சூடு  போட்டாலும் வராது.எனவே அதனிடம் ஒரு சிறகு தா என்றால் அது செவிடன் காதிலை ஊதின சங்குதான்.எனவே நாம் தான் முயற்சி செய்ய வேண்டும்.
அதாவது முயற்சி செய்தாலே கிடைக்கும் என்பதே இப்பழமொழி கூறும் சங்கதி ஆகும்.

0 comments:

Post a Comment