ஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் அன்புடன் வணக்கம்,

 பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
 மக்கட் பதடி யெனல்.-[திருக்குறள்]


அதாவது,பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும் என்று கூறுகிறார்  திருவள்ளுவர்.
ஏன்,வீட்டினில் அவசியமற்று இருப்பனவற்றை குப்பைத்தொட்டியில் தானே எறிகிறோம்.அதேவேளை கூட இருப்போரிடம் பயனற்ற விதத்தில் அலம்பி எமது நேரத்தினையும்,அறிவு வளர்ச்சியினையும் வீணடிக்கலாமா!
அதேபோலவே,மனித சமுதாயத்திற்கு அவசியமற்ற விடயங்களை ஊடகங்களும் தவிர்த்துக் கொள்வது இவ் இயந்திர உலகின் கட்டாய தேவையாகும்.
அதனை நாம் என்றும் கவனத்தில் கொண்டே எமது சஞ்சிகையினை தினசரி வெளியிட்டு வருகிறோம். அதற்கு ஆதரவு நல்கும் அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகள்..
please click 'like' on theebam magazine-thanks 


0 comments:

Post a Comment