நாம் தமிழர்


பாருக்குள்ளே பெருவீடு கொண்டிடல் வேண்டும்,
ஊருக்குள்ளே நாலுபேர் பேசிடல் வேண்டும்,அங்கே
சமையல் இல்லாத குசினி வேண்டும்,மேலும்
விருந்தினை விரும்பாத  விருந்தினர் வேண்டும்.
மேகங்கள் பார்த்திடும்  மேனியுடை வேண்டும். 
காகங்கள் காணாத வரமும் வேண்டும்.  
எரிபொருள் எரிக்காத  ஜீப்பும் வேண்டும்,அதை
நம்பி வாழாத உறவுகள் வேண்டும்.
முகநூலில் நுழைந்து மூழ்கிடல் வேண்டும்.
அகத்தாளிருக்க அடுத்தவளோடு குழைந்திடல் வேண்டும்   
கொண்டாடி மகிழ்ந்திட ஐயரும் வேண்டும்,அன்று
கடித்து சுவைத்திட இறைச்சியும் வேண்டும்.
முடமே இல்லாத பெற்றோர் வேண்டும்,
ஜடமாய் வாழவர் பழகிடல் வேண்டும்.
குடமாய் குடித்திட மதுவும் வேண்டும்,
கடனே கேளாத  நண்பர்கள் வேண்டும்,
சட்டங்கள் சொல்லாத தமிழீழம் வேண்டும்,அங்கே
பட்டங்கள் விலைப்படும்   கடைகள் வேண்டும்.
தலைவனா அதிகாரம் பேச  கட்சிகள் வேண்டும் 
பிரித்து ஆண்டிடப் பல  சாதிகள் வேண்டும்.
அடிக்கொரு ஆலயம் அமைந்திடல் வேண்டும்,அங்கே
அன்னத்தை அளித்திடும்  அருளும் வேண்டும்.
இறுதி யாத்திரைவரை உழைத்திடல் வேண்டும்.
இதென்ன வாழ்வென்று சலித்திடல் வேண்டும்.

😈😋😍😏🌞-மனுவேந்தன் -🌞😏😍😋😈

0 comments:

Post a Comment