எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [அரியலூர்] போலாகுமா?



அரியலூர் (Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.

விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது என்பர்.

இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று. அத் தொழிச்சாலைகளாக

🏣டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.
🏣ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)  கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
🏣டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
🏣செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.
🏣அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
🏣இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.

கல்விக்காக 400 பாடசாலைகளும் அதில் 02 தொழில்நுட்ப கல்லூரிகள்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகாதுகேளாதவர் பாடசாலை என்பன குறிப்பிடத் தக்கதாகும்.

நிலத்தடி நீரினை நம்பி வாழ்ந்தும்  விவசாயிகளால் சோளம்,பருத்தி,வேர்க்கடலை ,உழுந்து, துவரை, மிளகாய், முந்திரி, சவுக்கு, eucalyptus, புளி , கரும்பு,  நெல், கொத்தமல்லி, ஆமணக்கு, முருங்கை என்பன பயிரிடப்படுகிறது. கரும்பு அதிகம் விளைவிக்கப்படுவதால் சர்க்கரை ஆலைகளும் இங்கு அமைந்துள்ளது. 



அரியலூரில் கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். இத்தாலி நாட்டிலிருந்து  வந்த  ஜோசெப் பெஸ்கி என்பவர் வீரமாமுனிவர் என்ற பெயரில் அரியலூரில் வாழ்ந்து தமிழுக்கு பெருமை சேர்த்தார். 

பல லட்ஷம் வருடங்களுக்கு முன்னர் இங்கு கொடிய விலங்கான டைனசோர் வாழ்ந்தமை அங்கு நிலத்தடியில் கண்டெடுக்கப்பட் ட முட் டைகள் , எலும்புகள் என்பன நிரூபித்துள்ளன.

1000 வருடங்களுக்கு முன்  இராஜேந்திர சோழமன்னனால் கட்டப்பட் ட கங்கை கொண்ட சோழபுரம் ஆலயம் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். மற்றும் 1000 வருடம் பழமை வாய்ந்த பெருமாள் கோவில்,  1000 கால் மண்டபம் என்பன குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறு தொழில்வளம் மிக்க அரியலூர் ,பெரும்பாலும் குடிசைவாழ் வறியவர்களைக் கொண்டிருப்பது , அரச சார் நிறுவனங்களின் கண்களில் தெரியாதவரை இந்நிலை நீடிக்கும் என்பது கவலையான செய்தியாகும்.

:தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்.

0 comments:

Post a Comment