நகைச்சுவை


காதலன்: என்னை காதலிக்கிறாயா கண்ணே !
காதலி : ஆமாம் அன்பே
காதலன் : அப்ப.. எனக்காக இறந்து போவாயா கண்ணே..
காதலி : மாட்டேன்..என்னுடையது இறவா காதல் அன்பே

—————————————————————————

நோயாளி : என் கண்ணுக்கு சித்திரகுப்தன் தெரிகிறான் டாக்டர்..
டாக்டர் : கவலையே படாதஇப்பதான் வைத்தியம் ஆரம்பிச்சிருக்கேன் !.. இன்னும் கொஞ்ச நேரத்தில எமதர்மன் தெரிவான்

————————————————————————

எமன் : அங்கே என்ன சத்தம்சித்திரகுப்தா ..?
சித்திரகுப்தன் : புதிதாக எமலோகம் வந்திருக்கும் மானிடர்களை இங்கே ஏற்கனவே இருப்பவர்கள்ராகிங்” (பகிடிவதை) செய்கிறார்கள் பிரபு..!!!

————————————————————————

சங்கீத வித்துவான் 1:  எனக்கு மேடை ஏறி கச்சேரி செய்கிறதைவிட வானொலியில் கச்சேரி செய்கிறதுதான் ரொம்ப பிடிக்கும்
சங்கீத வித்துவான் 2:  ஏன் அப்படி சொல்லுறிங்க..?
சங்கீத வித்துவான் 1:  அப்பதானே மேலே கல்லு வந்து விழாது.

—————————————————————————

கட்சி ஆதரவாளர்: தலைவரே ! … எப்போது பார்த்தாலும் மரத்து மேலே ஏறி இருக்கிறாரே.. யார் அவர்?
தலைவர் : அவர் நம்மகிளைச்செயலாளர் ” .

——————————————————————————

பிச்சைக்காரன் : ” பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள்என்ற புத்தகத்தை எழுதியது நான் தான்..!
ஒருத்தன் : பிறகு ஏன் பிச்சை எடுக்கிறாய்..?
பிச்சைக்காரன் : அந்த ஆயிரம் வழிகளில் இதுதான் முதல் வழி

——————————————————————————

ஆசிரியர் : “உங்க மகனின் கையெழுத்தை இன்று முழு நாளும் பாத்துக்கிட்டே இருக்கலாம் சார்!”
தந்தை: அடடா ! அவ்வளவு அழகா எழுதுவானா!”
ஆசிரியர்: சுத்தம்எழுத்து புரிஞ்சாத்தானே மேலே படிக்கறதுக்கு!..அதான் நாள் பூரா பாத்துக்கிட்டே இருக்கலாம் என்றேன் !

——————————————————————————

சுந்தரி : நாளுக்கு நாள் குண்டாகிட்டே போகிறாய்நீச்சல் அடித்தால் இளைத்து விடுவாயடி..
ராஜீ :அது எப்படி..? திமிங்கலம் கடலிலே தானே 24 மணி நேரமும் இருக்கு.. அது இளைத்தா இருக்கு

—————————————————————————

ஒருவன் : சின்ன முள் குத்திவிட்டது..என்னசெய்யலாம்
மற்றவன்: இன்னெரு முள்ளாகப்பார்த்து குத்திகொண்டு வாடா…. நேரம் பார்க்கலாம்

————————————————————————

சுரேஸ்என்ன சார் தலைகொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு..
ரமேஸ் :  “இனிமேல் அடிக்கமாட்டேன்என்று என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா !

————————————————————————

ராஜா : என் ஜாதகப்படி எனக்கு அறிவு கொஞ்சம் அதிகமாம்
மந்திரி : இப்போதாவது புரிகிறதா.. நான் ஏன் ஜாதகம் பார்ப்பதில்லை என்று..

—————————————————————————

சிலந்தி1: அந்த சிலந்தி பூச்சிக்கு ஏன் இவ்வளவு தற்பெருமை.
சிலந்தி2: “வெப் சைட்ஆரம்பிச்சிருக்காம்..அதானாலதான்

——————————————————————————

மனைவி : அத்தான்பல்லு வலி தாங்கமுடியல்ல..
கணவன் : ஏன் ?.. என்னத்தை அப்படி கடித்த  நீ..
மனைவி : உங்க அம்மாவைத்தான்

——————————————————————————

ஒருவன் : பொண்ணுகிளிமாதிரி இருக்காளே என்று தெரியாதனமா கல்யாணத்துக்கு
ஒத்துக்கிட்டது தப்பா போச்சுது
மற்றவன் : என்னாச்சுடா..?
ஒருவன் : பேசியதை திரும்பத்திரும்ப பேசி என் உயிரை வாங்கிக்கிட்டிருக்கா..

——————————————————————————

ராம் : கண்ணன் வீட்டுக்கு போயிடாதே.. அவன் சுத்த கஞ்சப்பையன்
கோகு : ஏன்டா மச்சான்
ராம் : அவன் வீட்டில இருக்கும் போதுடிரஸ்கூட போடமாட்டான்

——————————————————————————

நீதிபதி : “ஏம்பா, மூணாவது தடவையா இந்த கோர்ட்டுக்கு வந்துருக்கீயே……உனக்கு வெக்கமாயில்லே?”
குற்றவாளி : ” நீங்க தினமும் வர்றீங்களேஒங்களுக்கு வெக்கமாயில்லையா சார்?”

—————————————————————————

ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க
ரவி : பரவாயில்லையேநிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..

————————————————————————

முதலாளி: தோட்டத்துச் செடிகளுக்கு எல்லாம் தண்­ணீ  ஊத்திட்டியா?
தோட்டக்காரன்: ஐயா! நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.
முதலாளி: அதனால் என்ன? குடையைப் பிடித்துக் கொண்டு நீர் ஊற்ற வேண்டியதுதானே.

——————————————————————————

சங்கர் : படத்தின் முடிவில் தற்கொலை செய்து கொள்கிறார்
மற்றவர்: யார்..வில்லனா? கதாநாயகனா?..
சங்கர் : அட போங்க…    தயாரிப்பாளர்..

————————————————————————

0 comments:

Post a Comment