நடிகர் விஜய் [Vijay] ஒரு பார்வை

                                               
                                   
தமிழ்த்  திரைப்பட நடிகர் விஜய்  எனப்படும்  ஜோசப் விஜய் 1974 ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று  சென்னையில் பிறந்தார். இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தாயார் ஷோபா ஒரு பின்னணிப் பாடகி மற்றும் கருநாடக பாடகி ஆவார். விஜய்க்கு வித்யா என்ற பெயருடைய ஒரு தங்கை இருந்தார். அவர் இரண்டாவது அகவையில் இறந்து விட்டார். வித்யாவின் இழப்பு விஜய்யை மிகவும் பாதித்தது. விஜயின் தாயாரின் கூற்றுப்படி விஜய் ஒரு குழந்தையாக இருந்தபொழுது மிகவும் பேசக்கூடியவராகவும், குறும்பு செய்பவராகவும் மற்றும் விளையாட்டுத்தனத்துடனும் இருந்தார். வித்யாவின் இழப்பிற்குப் பிறகு அமைதியாகி விட்டார். இவரது தங்கை வித்யாவின் கதை 2005ம் ஆண்டுப் படமான சுக்ரனில் சொல்லப்பட்டிருக்கும். அப்படத்தில் விஜய் ஒரு நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

விஜய் தனது குழந்தைப் பருவம் முழுவதையும் சென்னையில் கழித்தார். விஜய் தொடக்கத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார். பின்னர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் இணைந்தார். லயோலா கல்லூரியில், காட்சித் தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்சில்) பட்டம் பெறச் சேர்ந்தார். இறுதியில் நடிப்பைத் தொடர ஆர்வமாக இருந்ததால் பாதியிலேயே படிப்பில் இருந்து வெளியேறினார்.
விஜய் பிரிட்டனில் பிறந்த இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 25 ஆகத்து, 1999 அன்று மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2000ல் லண்டனில் பிறந்த ஜேசன் சஞ்சய் என்ற மகன் மற்றும் 2005ல் சென்னையில் பிறந்த திவ்யா சாஷா என்ற மகள். ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் வேட்டைக்காரன் (2009) படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். திவ்யா சாஷா தனது தந்தையின் இளமை காலத்திற்கு முந்தைய அகவையுடைய மகளாக தெறி (2016) திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
1984–1988 குழந்தை நட்சத்திரமாக
பத்து வயதில், வெற்றி (1984) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக தந்தையின் இயக்கத்தில் விஜய் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் குடும்பம் (1984), வசந்த ராகம் (1986), சட்டம் ஓரு விளையாட்டு (1987) மற்றும் இது எங்கள் நீதி (1988) போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ரஜினிகாந்த் முன்னணி நடிகராக நடித்த நான் சிகப்பு மனிதன் (1985) படத்திலும் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1992–1996 துவக்கம்
விஜய் தன் பதினெட்டாம் வயதில் நாளைய தீர்ப்பு (1992) படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமானார். விஜய், விஜயகாந்த்துடன் செந்தூரப் பாண்டி (1993) , 1994 இல், இவர் ரசிகன், அஜித் குமாருடன் இணைந்து தேவா மற்றும் ராஜாவின் பார்வையிலே மற்றும் விஷ்ணு ,சந்திரலேகா , 1995 இல் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படங்களில் முன்னணி நடிகராக நடித்தார்.

1996–2003 திருப்புமுனை
1996 இல்- பூவே உனக்காகவே , வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா காலமெல்லாம் காத்திருப்பேன், 1997 இல்- லவ் டுடே மற்றும் ஒன்ஸ் மோர், நேருக்கு நேர்-  படங்கள் இவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நட்சத்திரமாகவும் ஆக்கியது. பின்னர் பாசில் இயக்கிய காதலுக்கு மரியாதை படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.  
1998 இல் விஜய் நினைத்தேன் வந்தாய், பிரியமுடன், நிலாவே வா  திரைப்படங்களிலும் , 1999 ஆம் ஆண்டில் விஜய், சிம்ரனுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும்  படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.இதன்பின் -என்றென்றும் காதல், நெஞ்சினிலே , மின்சாரக் கண்ணா ஆகிய படங்களில் நடித்தார்.
2000 மாவது ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து, இவரது போக்கில் ஒரு மாற்றமாக, பொழுதுபோக்குப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் கண்ணுக்குள் நிலவு, குஷி மற்றும் பிரியமானவளே , 2001 இல் சூர்யாவுடன் இணைந்து ஃப்ரண்ட்ஸ் சித்திக்கால் ,விஜய் பத்ரி ,ஷாஜஹான் ,2002 இல்  நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகம் ஆன தமிழன் மற்றும் யூத் , ஆகிய படங்களில் நடித்தார். விஜய் 2003ம் ஆண்டை வசீகரா ,புதிய கீதை ஆகிய படங்களுடன் தொடங்கினார்.

2003–2010 பரவலான வெற்றி
2003 இல்  விஜய் திருமலை , உதயா,   2004 இல் கில்லி வெளியானது. அன்று தமிழகத்தின் உள்மாநிலத் திரைப்படச் சந்தை வரலாற்றில் ₹50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த முதல் திரைப்படம் கில்லி ஆகும். இதன்பின் மதுர,  2005 இல்  திருப்பாச்சி, சுக்ரன் , சச்சின் ,  2006 இல் சிவகாசி , 2007 இல் போக்கிரி  , அழகிய தமிழ்மகன் படத்தில் வில்லன் மற்றும் கதாநாயகன் ஆக  நடித்தார். 2008 ஆம் ஆண்டு விஜய் டி.வி. விருது விழாவில் மக்களின் விருப்பமான சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் விஜய் கௌரவிக்கப்பட்டார்.2008 இல், குருவி , 2009 இல் வில்லு , வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். 2009 ஆம் ஆண்டின் மிக அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 இல், இவர் சுறா திரைப்படத்தில் நடித்தார்.
2011–2016 சர்வதேச புகழ்
2011 இல்   காவலன் படத்தில் இணைந்தார். சீனாவில் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் காவலன் திரையிடப்பட்டது. அடுத்த படமான  வேலாயுதம் 2011 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக ஆனது .பின்னர்  2012 இல் நண்பன் ,ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டது. பின்னர் பிரபுதேவா இயக்க அக்‌ஷய் குமார் நடித்த 2012 ஆம் ஆண்டு இந்தித் திரைப்படமான ரவுடி ரத்தோர் இல் இவர் ஒரு சிறப்பு தோற்றத்தில் தோன்றினார்.

அடுத்த திரைப்படமான துப்பாக்கி , சிவாஜி (2007) மற்றும் எந்திரனுக்குப் (2010) பிறகு விஜயின் திரை வாழ்க்கையில் ₹180 கோடிக்கும் அதிகமாக  வசூல் செய்த படமாக ஆனது. அடுத்த படம் 2013 இல் தலைவா,   2014ல்  ஜில்லா, கத்தி , 2015 இல்  புலி,  2016ல்  ₹172 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த தெறி  என வசூல்கள் தொடர்ந்தன.

2017–தற்போது
 2017 இல் பைரவா  வின் பின்  ₹250 கோடிக்கும் அதிகமான வசூல் செய்த மெர்சல்  கதாபாத்திரத்திற்காக 2018ல் ஐக்கிய இராச்சிய தேசிய திரைப்பட விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். மெர்சல் தென் கொரியாவின் புச்சியான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 2018 இல் இவர் நடித்த சர்கார், பின்னர் 2019 இல் வெளியான பிகில் உலக அளவில் அவ்  வருடம் தமிழ் சினிமாவின் அதிகவசூல் செய்த திரைப்படமாக மாறியது.

தெலுங்கு,இந்தித் திரைப்படங்களில்..
விஜயின் திரைப்படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. அவைகளில் பெரும்பாலானவை வெற்றியடைந்துள்ளன.
இவருடைய தமிழ் படங்களில் பெரும்பாலானவை இந்திக்கு  டப்பிங் செய்யப்படுகின்றன. இந்தித் திரைப்படத் தொலைக்காட்சி மதிப்பீட்டுப் புள்ளியில் 1,3,4 என மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றதால் அவை இந்தித் திரைப்படங்களுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்துள்ளது.
ரவுடி ரத்தோர் (2012) படத்தில் சிந்தா சிந்தா பாடலில் விஜய் தன் முதல் இந்திப்படக் கௌரவத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.

அறப்பணி
விஜய் ஒரு சமூக நல அமைப்பான விஜய் மக்கள் இயக்கத்தைத் ஜூலை 26, 2009 அன்று புதுக்கோட்டையில் தொடங்கினார். இவரது பெரும்பான்மையான அறப்பணிகளுக்கு இவ்வியக்கம்தான் பொறுப்பாக உள்ளது.
சமூக நல நடவடிக்கைகள் மூலம் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்தது மற்றும் திரைத்துறையில் தான் செய்த சாதனைகள் ஆகியவற்றின் காரணமாக 2007ல் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்) இருந்து விஜய் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர்/நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவ்வமைப்பு 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தது.

இன்று இளையோரை அதிகம் கவர்ந்துள்ள நடிகர் விஜய் தனது திரைக் கதைகளில் வன்முறைகளை அதிகரித்துக் கொண்டு செல்வது அது இளையோரை தப்பான வழியிட்டு சென்றிடுமோ என்று பெரியோர்கள் அச்சம் தெரிவிப்பது அப்பப்போ காதில் விழத்தான் செய்கிறது.இது அவர் காதில் விழுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

📂தொகுப்பு:செ .மனுவேந்தன் 

0 comments:

Post a Comment