பண்டைய தமிழர்கள் மழையை அளந்த முறைகள்



பண்டைய தமிழர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பது எல்லோரும் அறிந்த செய்தியே . அந்த வகையில் அவர்கள் அறிவியில் கருவிகள் , மற்றும் அளக்கும் முறைகள் இல்லாத காலத்திலேயே பெய்யும் மழையை அளக்கும் அறிவைப் பெற்றிருந்தனர் என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும் அவர்களுக்கு இந்த அறிவியல் பார்வை இருந்தது என்பதை .

பழந்தமிழரின் "ஆட்டுக்கல் மழைமானி " என்றால் என்னவென்று தெரியுமா ?

ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல , அந்த காலத்தில் அதுதான் மழைமானி . வீட்டு முற்றத்தில் தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும் . முதல் நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும் . அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஒரு உழவுக்கு ஏற்ற மழையா அல்லது இரண்டு உழவுக்கு போதுமானதா என்பதை அறிந்துகொள்வார்கள் .

மழைபொழிவின் பழைய கணக்கு முறை " செவி " அல்லது " பதினு " எனப்படும் . இது 10 மிமீ அல்லது ஒரு செ மீ இக்கு சமமானது . மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பத்தத்தின் அளவுக்கும் தொடர்பு உண்டு .இதனை "பதினை " என்றனர் . அறிவியல் கனக்குப் படி 18 மி மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சும் . ஆக எத்தனை *பதினு* மழை பெய்திருக்கிறது என தெரிந்துகொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள் .

மழைக்கு அதன் பேய்த்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது .

* தூறல் * -- பசும்புல் மட்டுமே நனைவது . விரைவில் உலர்ந்துவிடும் .

*சாரல் -* -- தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்

*மழை * -- ஓடையில் நேர்பெருக்கு இருக்கும் .

*பெருமழை * -- நீர்நிலைகள் நிரம்பும் .

*அடைமழை * --நாள் முழுவதும் அடைத்துப் பெய்யும் தொடர்மழை

*கனமழை * -- விடாமல் பெருமழையாய் தொடர்ந்து பியது கனத்த பொருட்களையும் அடித்துச் செல்லும் மழை .

இதையே அறிவியல் வேறு வகையில் கூறுகிறது ,

மழைத்துளியின் விட்டம் ௦.5 மி மீ க்கு குறைவாக இருந்தால் அது தூறல்

விட்டம் ௦.5 முதல் 4 மி மீ வரை இருந்தால் அது மழை .

விட்டம் 4 - 6 மி மீ க்கு மேல் இருந்தால் கனமழை ஆகும்

மழையைப் பற்றி திருவள்ளுவரும் கூட *மாறாநீர் * என குறிப்பிடுகிறார் .

இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூட குறையவுமில்லை கூடவும் இல்லை என்பதை நம் விஞ்ஞானிகள் விஞ்ஞான ஒளியில் தெளிந்து அறிவித்துள்ளனர் . அதையே உலகில் இதுவரையுள்ள நீர் நிலையானது , அளவு மாறாதது என்கிறார் வள்ளுவர் .

*கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி -- குறள் 701 .

இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையை குறிக்கும் எனச் சிலர் தவறான பொருள் கூறுகின்றனர் . திரு பழ . கோமதிநாயகம் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார் " நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவர் பிறிதோர் குறளில் கூறியிருக்கிறார் "

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு -- குறள் 452 .

எனவே மாறாநீர் என வள்ளுவர் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது .

பொதுவாக 5 செ.மீ அளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என் சொல்வது உண்டு . பூமியில் ஒரு ஆதி அழத்துக்குத் தண்ணீர் இறங்கிருந்தால் அது ஒரு உழவு மழை ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்திற்கு தண்ணீர் இறங்கியிருக்கும்.

எழுதியவர் : வசிகரன் .க

0 comments:

Post a Comment