மனிதனே……….வெற்றி நிச்சயம்



-------------------------------------------கவிஞர் ஞானசித்தன்
உன்
கண்ணாடி மனதில்
கவலைகளெனும் தூசி
படியாமல் பார்த்துக்கொள்

உன்
இரும்பு நெஞ்சத்தில்
சோம்பலெனும் துரு
பிடிக்காமல் பார்த்துக்கொள்

உன்
தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்
எதிர்மறைஎண்ணங்களான
பாசி படராமல் பார்த்துக்கொள்

உன்
வெள்ளை மனதில்
கர்வமெனும் கறைசேராமல்
பார்த்துக்கொள்

சோம்பலை சாம்பலாக்கு
அலைபாயும் மனதை அடக்கு
முடங்கி கிடக்கும்
உன் திறமையை முடுக்கிவிடு
கட்டிக்கிடக்கும்
உன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு
வெற்றி நிச்சயம்.

0 comments:

Post a Comment