தன்னம்பிக்கை

ஒருவர் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதை நான் எப்படி அடக்கி சரி செய்வதென்று ஞானியிடம் கேட்டார்.
அவர், “உன்னிடம் இருக்கின்ற அந்த கோபத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம் என்றார்.
இப்பொழுது என்னால் அதை காட்ட முடியாது
சரி, எப்பொழுது என்னிடம் காட்ட முடியும்
அது தானே எதிர்பாராமல் வருகிறது
அது இயல்பானது, உண்மையானது என்றால், அதை எந்தச் சமயத்திலும் என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது இல்லாததது பெற்றோர்களும் உன்னிடம் கொடுக்காதது எப்படி உன்னிடம் வந்தது நன்றாக யோசனை பண்ணிப்பார் என்றார் ஞானி.
எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தில் முடியும் போதுதான் கோபம் உண்டாகிறது என்பதை உணர்ந்தான். எதிர்பார்ப்பை குறைத்தான் ஏமாற்றம் இல்லாமல் கோபமும் போயே போச்சு.
எதிர்பார்ப்பை குறைத்தால் கோபம் இல்லை.

0 comments:

Post a Comment