ஒளிர்வு-(13) கார்த்திகை த்திங்கள்

சிந்தனை ஒளி:
·                ஒரு மனிதனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அவனிடம் அளவுக்கு அதிகமான பணத்தினைக் கொடுத்துப் பார்க்கத் தேவையில்லை.அப்பணத்தினை அவனுக்குக் காட்டினாலே போதுமானது.

·                ஒரு செயலில் குறைகள் கண்டு பிடிப்பது சுலபமானது.ஆனால் அச்செயலை குறையின்றிச் செய்து முடிப்பது கடினமானது.

·                எந்த ஒரு உறவும்,நாம் எதிர் பார்ப்பது போல் முழுமையாக நடந்து கொள்ள முடியாது.

·                நான் விரும்புகிறவன்,எனது எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர் பார்ப்பவன் முட்டாள்.

·                உண்மையாக நேசிப்பவன் பணத்திற்காக உறவுகளை உதறிவிட   மாட்டான்.

·                பிரச்சனைகள் உறவுக்குள் இருப்பது சகஜம்.அவை பிரிவுக்குக் காரணமாய் அமைவது சரியான தீர்வாகாது.

·                ஒருவரை நோக்கி தவறான வார்த்தைகளை சுலபமாகச் சிந்திவிடலாம்.ஆனால் அவற்றை திரும்பப் பொறுக்கி எடுத்து விட முடியாது.

·                உண்மையான நட்பு காதலாக மலர்ந்திடின்,இல்லறம் இனிமையாக இருக்க அது வித்திடும்.

·                காதலிப்போரில் பலர் தங்கள் காதல் உண்மையானது என்று எண்ணி ஏமாந்து,தங்கள் வாழ்வினை தொலைத்துக் கொள்கிறார்கள்.

·                நாடி வரும் உறவுகளை விட்டு ஓடி ஒளியாதே!ஓடி ஒளியும் உறவுகளை தேடி நாடிச் செல்லாதே!

·                கடவுளுக்கு உன்னால் எதனையும் கொடுத்து விட முடியாது.ஏனெனில் எல்லாமே அவனால் படைக்கப்பட்டது.

·                தமது பெருமைகளை மட்டும் வெளிப்படுத்தி பழகும் காதலர்கள்,கல்யாணத்தின் பின் சந்தோசமாய் வாழ அவர்களின் சிறுமைகள் இடமளிக்க மாட்டாது.

0 comments:

Post a Comment