ஒளிர்வு-(44)- ஆனி ,2014 .எமது கருத்து.......

வணக்கம்,
திருக்குறள் அதிகாரம் 71-குறள் 706
‘அடுத்தது   காட்டும்     பளிங்குபோல்     நெஞ்சம்
கடுத்தது     காட்டும்     முகம்.’
-திருவள்ளுவர்
பொருள்:கண்ணாடி, தனக்கு முன் உள்ளத்தைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.
-தெளிவுரை;கலைஞர் மு.கருணாநிதி
மனிதனை மனிதன் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவன் பொய்யாக  ச்செயற்படுகின்றவேளையில் அவனை அவன் முகம் காட்டிக்கொடுத்துவிடும்அதேவேளை அசுர வேகத்தில் வளர்ந்துவிட்ட,வளர்ந்துகொண்டிருக்கிற தற்கால தொழிநுட்பம் இன்னொரு சமூக தொடர்பு  சாதனமாக நமக்கு கை கொடுத்துள்ள கொடையான முகப்புத்தகம் (facebook ) கூட மனிதர்களை இனம்காண செய்துகொண்டிருக்கிறது.இதன்முலம் நாம் எம் வளர்ச்சியில் அக்கறை கொண்டோரையும், உண்மையான நட்புள்ளோரையும் உணர்ந்து கொள்வதினால் எதிர்காலத்தில் சந்திக்கக் கூடிய ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.
வள்ளுவன் மட்டும் இன்றிருந்தால்
''அடுத்தது  காட்டும்     பளிங்குபோல்     நெஞ்சம்
கடுத்தது     காட்டும்     முகப்புத்தகம்.’’
என்றே குறள் அமைத்திருப்பான் என எண்ணத் தோன்றுகிறது.(ஆனால் குறள் கவி விதிகளின்படி அவன் முகப்புத்தகத்தினை முகம் என்றே முடித்திருப்பான்.)
எப்படியோ முகப்புத்தகத்தினை கண்டுபிடித்தவனுக்கு வள்ளுவன் குறள் அறிந்திருக்க வாய்ப்பில்லை எனினும் அவன் பொருத்தமான பெயரினை அதற்கு வைத்தமையினை வள்ளுவன் குறள் ஆதாரப்படுத்தி யுள்ளமை பொய்யா மொழிப் புலவரின் குரல் எந்த நவீன காலத்திலும் மெய்யாகி மிளிர்வதினை களிப்புடன் உணரவைக்கிறது.எப்படியோ புலம் பெயர்ந்து சிதறி வாழும் எம்போன்றோரை இணைக்கும் உறவுப்பாலமாக விளங்கும் இன்றைய விஞ்ஞானத்தினை நன்றியுடன் நோக்கிகுகிறோம்.
மேலும்,
தீபம் மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள்   ஆரம்பிக்கப்பட்டதுதீபம்சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய

கட்டுரைகள்,
கவிதைகள்,
நகைச்சுவை(சிரிப்பு),
திரைப் பட விமர்சனங்கள்(திரை),
திரைச்செய்திகள்(திரை),
தொழில்நுட்பம்,
உடல்நலம்(உணவு),
ஆன்மீகம்
என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள்தொடர்பாக  சுவைபடக் கூறும்

பறுவதம் பாட்டி",(நடப்பு)
"கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
 கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,செல்வத்துரை சந்திரகாசன் அவர்களின் புதுமைகள்கூறும்  ஆய்வுக்கட்டுரைகள்  என்பன விசேட இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டுஇருக்கின்றன.
தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும்தீபத்தின்எழுத்தாளாருக்கும்வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறதுஉங்கள்ஆக்கங்களுக்கு:- s.manuventhan@hotmail.com
தமிழில் எழுதுவதற்கு:   click  http://www.typetamil.in  then Type in English and press space(add space) to get converted to tamil.
உங்கள் வருகைக்கு நன்றி.

0 comments:

Post a Comment