மூளைக்குவேலை ....... சில நொடிகள்!



1🐞 . எனக்கு அம்மா இருக்கிறார், அப்பா இருக்கிறார் ஆனால் நான் அவர்களின் மகன் இல்லை. அப்படியாயின்  நான்யார் ?     
 2🏡 . நான்  என்னுடைய  வீட்டை  விட உயரமாய்ப் பாய்வேன். எப்படி?
3🔥 . மயானத்தில் பீட்டரை எரிக்க அனுமதிக்கவில்லையாம். ஏன்?
4𝍐 . சோதனைக் கேள்வியள் நல்ல சுகம் என்றாயே, அப்ப ஏன் பெயில் விட்டாய்?
5🌇 . நான் 50 வது மாடியில் இருந்து கீழை விழுந்தும் ஒரு காயமும் இல்லை. எப்படி?
6🍎 . எனது காதலியை ஒரு டொக்டரும் காதலிப்பதால் நான் அவளுக்கு தினமும்  அப்பிள் கொடுப்பேன். ஏன்?
7🌧 . கொட்டுற மழையில் அற நனைந்தும் ஒரு தலை முடிதானும் நனையவில்லை. எப்படி?
8 ⚁. குருடனுக்குத் தெரிவது, செவிடனுக்குக் கேட்பது; அதை உண்டால் மரணம் நிச்சயம். அது என்ன?
9🏇 .ஒரு குதிரைப் பயணி  ஹோட்டலுக்குசனியில் வந்து சனியிலேயே  திரும்பினான். அவன் 3 நாட்கள் தங்கினான். எப்படி?
10🚍 .அரைவாசித் தூரத்தை  40 வேகத்திலும், மிகுதியை 60 வேகத்திலும் சென்றால், எனது சராசரி  வேகம் என்ன?
விடைகள்:
1 . மகள். 2 .வீடு பாயவே மாட்டாதே. 3 . இன்னும் சாகாததால். 4 .கேள்வி விளங்கினது, பதில்தான் தெரியாது. 5 .விழுந்தது உட்பக்கம். 6 . An apple a day , keeps the doctor away . 7 . மொட்டை. 8 . வெறுமை. 9 . குதிரையின் பெயர் சனி. 10 . 48  
                                                                    --- செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment