மகிழ்வு.....:அகிலன் தமிழன்

மானுட வாழ்க்கையில்  மகிழ்வு  கொண்டால்  

வாழ்க்கையில்  குறை ஏது மானுடா ..!

நீயும்  சந்தோஷம் கொள்
  உனக்கு  வாழ்வில் தோல்வி ஏது?
வாழ்க்கையில்  எத்தனை  இடையூறு  இருந்தாலும்
 நீ  சந்தோஷ ஒளி உண்டாக்கு -மானுடா..!
உன் வாழ்வில் உள்ள குறைகளும் நீங்கி 
உன் வாழ்வில் சாந்தி உருவாகி
நிம்மதியையும் நிலையாக உருவாக்கிடும் 

 மனித  வாழ்க்கையின் உயிர் நாடி சந்தோஷம்
வாடிய பயிருக்கு நீர் கிடைத்ததை போல  
மானுடனின் வாழ்வில் சந்தோசம்    வந்தால் 
தோல்விக்கு இடம் இல்லை -மானு

டா ..!

நீ மகிழ்வு கொள்
 வாழ்வில் வெற்றி   வேணுமா -மானுடா ..!


சந்தோச மருந்தை தினமும் அருந்து 
உன் வாழ்கையிலும் தோல்வியும்   நெருங்காது
வாழ்வும் உயந்திடும். 
                                                     

0 comments:

Post a Comment