தின்றதனை எச்சில் என்று...{சிவவாக்கியர் -சிவவாக்கியம் 151}


உண்டகல்லை எச்சில் என்று உள்ளெரிந்து  போடுறீர்   


கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ

கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே


கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே!

புறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜைகளில் நிவேத்தியமாக படைக்கப்படும் பிரசாதங்களை ஒரு குழந்தை அறியாது எடுத்து தின்றுவிட்டால் அது எச்சில் பட்டுவிட்டது என்று சொல்லி யாருக்கும் பயனில்லாது கீழே எறிந்து விட்டு வேறு பிரசாதம் செய்து படைக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கைப்பட்டு எச்சிலான இவர்கள் கையால் செய்த பிரசாதங்களை மட்டும் இறைவன் ஏற்று உண்பானோ? எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது? அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா? குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே! சுத்தம் என்பது என்ன? இவ்வுடலில் பரிசுத்தனாய் ஈசன் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து மனமாகிய அகத்தை சுத்தம் செய்து இறைவனை தியானியுங்கள்.                                                                              


1 comments:


  1. I am really impressed together with your writing talents and also with the format to your blog. Is this a paid theme or did you modify it yourself? Anyway stay up the nice quality writing, it is rare to look a nice blog like this one these days.. netflix account

    ReplyDelete