சிரிக்கச் சில நிமிடம் ........



01

ரசிகை:அண்ணே என் குழந்தைக்கு பெயர் வையுங்க ?

 விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.

ரசிகை: இது ஆம்பள புள்ளை சார்

விஜய்:  அப்போ நாற்காலி ன்னு வை

02

கருவறையும் இருட்டு

கல்லறையும் இருட்டு

நடுவுல உனக்கு எதுக்கு கரண்ட்டு?

பில்லை மட்டும் கரெக்டா கட்டு..

இப்படிக்கு

 தமிழ்நாடு மின்வாரியம்

03

ஆசிரியன்: எதுக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

ஆசிரியை: இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா 'கொசு'ங்கிறான் !

04

மூன்று நண்பர்கள் கோவில் சென்றார்கள்.

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.

ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.

கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.

சோமு - ராமு : ?!?!?!?!?!?

05

அப்பா: மகளே, முன்னாடி நீ என்னை அப்பானனு ஆசையோட கூப்பிட்டுகிட்டுருந்தியே..

ஏன் இப்பெல்லாம் டாடின்னு கூப்பிடுற???

மகள் : அப்பான்னு கூப்பிட்டா லிப்ஸ்டிக் கலங்சுடும் டாடி..

06

ஒருத்தர்: டாக்டர்.. உங்க சர்ட்பிக்கெட் கொடுங்க..

டாக்டர் பயந்து போய் : ஏன்??

நம்மாள் : நான் 1 வீக் ஆபீஸ் லீவு..அவங்க டாக்டர் சர்ட்பிக்கெட் கேட்குறாங்க..

டாக்டர் : !!!

07

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

08

கணவன் :- (மனைவியிடம் ) இன்னிக்கு நீ ஒரு கருப்பு நாய்க்கு சோறு வச்சியா?

மனைவி :- ஆமாங்க . ஏன் கேட்கிறீங்க ?

கணவன் :- அதுவா , தெரு ஓரத்தில ஒரு கருப்பு நாய் செத்துபோய் கிடந்தது . அதான் கேட்டேன்

மனைவி :- ???

09

நண்பன் 1:டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

நண்பன் 2:நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

10

வீட்டுக்காரம்மா:"யாரது, ராத்திரி 2 மணிக்கு ஏழெட்டுப்பேர்வந்துகதவைத்தட்டறாங்க...?"

விருந்தாளியம்மா:"என்வீட்டுக்காரரோடுதூக்கத்துலஎழுந்துநடந்துபோகிறப்ப 'பிரண்ட்ஸ்' ஆனவங்கலாம்...! கூப்பிடவந்திருக்காங்க...!"

11

இன்ஸ்பெக்டர்: என்னது... இருபது கான்ஸ்டபிள்கள் சேர்ந்துபோய் வெறும் ஆயிரம்ரூபா பெறுமானமுள்ள கள்ளச்சாராயத்தைத்தான் அழிக்கமுடிஞ்சதா ஏன்...?

கான்ஸ்டபிள்: இருபதுபேரால், அதுக்குமேலேயாசார் 'குடிக்க' முடியும்...?"

12

பாலு:""எங்கவீட்டுல குடியிருக்கிற குடித்தனக்காரருக்கு என்மனைவிதான் தினமும் சமைச்சுப் போடுறா''

பரமு; ""பரவாயில்லையே''

பாலு:""அவரை காலிபண்ணவைக்க இதைவிட்டா வேறவழிதெரியல''

13

காதலன்:""டார்லிங்! உனக்காக என்னோட உடல், பொருள், ஆவி எல்லாத்தையும் தரநான் தயாரா இருக்கிறேன்''

காதலி:""நீங்க என்ன தர்றது, கல்யாணத்துக்கப்புறம் நானே எடுத்துக்குவேன்''

14

இயக்குனர்:""கதாநாயகி முகத்தை அடிக்கடி க்ளோசப்ல காட்டாதீங்கன்னு சொன்னேன் கேட்டிங்களா?''

புகைப்பட கலைஞர்:""ஏன் சார் என்னாச்சு?''

இயக்குனர்:""பேய்படம்னு சொல்லி குழந்தைகள் வரமாட்டேங்குதே!''

15

 நோயாளி:""டாக்டர் ஏன் என்ரெண்டு கண்ணுக்கும் ஆபரேஷன் பண்ணியிருக்கீங்க?''

டாக்டர்:""இது பண்டிகைக் காலம் கிறதால புது ஆஃபர் போட்டிருக்கோம். ஒரு கண் ஆபரேஷன்செஞ்சா இன்னொரு கண் இலவசம்''

16

காதலி: டியர்! எனக்கு வேறஒருத்தரோட கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருச்சு

காதலன்: எனக்குத்தெரியும்

காதலி: எப்படி?

காதலன்: காலையில குடுகுடுப்பைக்காரன் "நல்லகாலம் பொறக்குது'ன்னு சொன்னான்!!

17

குப்பை லாரி கிளம்பிவிட்டது அப்போதுதான் என்மனைவி வேகமாகச்சென்றாள், குப்பையைக்கொட்ட. அந்தடிரைவரிடம்  " நான்ரொம்பலேட்டா?  என்றுகேட்டாள்.

அவர்சொன்னார். "பரவாயில்லை, உள்ளே குதித்துவிடுங்கள்."

18

திருடன் : (சிறுவனிடம்) தம்பி! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக்கடையிலே!

19

ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்பபணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்லகடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோகொட்டுன்னு கொட்டும்.

வந்தவர் : எதுபல்லா?

20

நோயாளி : என்னடாக்டர்இது, மருந்துசீட்டில்சா-வுக்குமுன், சா-வுக்குபின்அப்படினுபோட்டிருக்கீங்க.

டாக்டர் : அதுக்குஏன்இப்படிப்பதர்றீங்க! சாப்பாட்டுக்குமுன், சாப்பாட்டுக்குப்பின்அப்படின்னுஎழுதியிருக்கேன்.


தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment