நீ இல்லாத காதல் ..


நீ இல்லாத  தருணங்கள் 
உன்னோடு  வாழ்ந்த  
அழகிய காதல்  
எண்ணிப்பார்க்கையில் 
 என்  விழிகளில்
  கண்ணீர்    கசிந்து 
வலியுடன் உன்  நினைவை 
அசை போடுகின்றன -அன்பே
இருள் நிறைந்த  என் வாழ்வில்l
நீ காதல்  தென்றலாக  வந்து
  வாசம்  வீசினாய்
உன் காதல் வாசத்தால்
 ஈர்க்கப்பட்ட நானும் 
உன் சுவாசமே 
உயிர் எனக்கொண்டு உன்னை 
இதயத்தில் பூட்டி வைத்தேன் 


உன்னுடைய காதல் தென்றல் 
இதயத்தில் படும் போது
ன் தனிமையை மறந்து
 உறவுகளை மறந்து 
புது சுகம் கண்டு 
ஆனந்தம் கொண்டேன்
தென்றலாக வீசிய  காதலும் 
உன் மௌனத்தால் முடங்கி போனதால்   
 என் இதயமும் திசை தெரியாமல் 
தத்தளிக்குதே!

அகிலன்,தமிழன் 

0 comments:

Post a Comment