தமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் !

இந்தியாஇலங்கைமலேசியாசிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்!

இது பல்பொடி விளம்பரம் அல்லதமிழன் புறக்கணிக்கப்படுகிறஅடிவாங்குகிறதேசங்களின் பட்டியல் தான் இது.

 

கேரளாகர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை.ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம்மராட்டியம்மும்பையில் தமிழன்என்றாலே எட்டிக்காய்கல்கத்தாவிலும்டில்லியிலும் தமிழனுக்கு எதிரானஅரசியல்ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன்என்றால் பிடிக்கவில்லை.

 

தமிழனுக்கு என்ன ஆச்சுஎல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவதுஏன்அவன் செய்த தவறுதான் என்ன?

 

*முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்!

எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல்அந்ததன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பதுஇல்லைஆனால்அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன்காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது.அதற்குத் தீர்வாக தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்துமற்றவர்கள் செயல்படுகின்றனர்.

தமிழன் அறிவாளிஆனால்புத்திசாலி அல்லஇரண்டுக்கும் வித்தியாசம் உண்டுதன்அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்தாமஸ் ஆல்வாஎடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும்இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றிகவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவதுஅதனால் ஒருநிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.

மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒருவினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.

ஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான்அது போலசக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும்.இது உண்மைஅதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப்பிடிக்காதுதன் இனத்தவனைக் கெடுக்கவோபோட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன்தயங்க மாட்டான்.

இந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர்பயன்படுத்திக்கொள்கின்றனர்பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதேதவறைச் செய்கிறான்கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறதுதமிழனைவைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.

அதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோதெலுங்கரோகன்னடரோ பிழைக்கவந்தால்தான் காலூன்றியவுடன்தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத்தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள்திட்டமிட்டு அழைத்துக்கொண்டும்வருகிறார்கள்இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் மலையாளவீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டுஅதுபோல கடை உரிமையாளர்களும்உண்டுகுறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும்தமிழனுக்கு அதிகவாடகைநடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்!

*பெண்ணாசை

பெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாதுஎன்றாலும் கூட , தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம் அதிகமாகஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் ,பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன்நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால் அழிந்தவர்கள் என்றுவரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக நிறுவனங்களை உருவாக்கி அதைபிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் .காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.

மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும்தங்கள் மொழிஇன உணர்வைக் காக்கசாதிமத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள்உதாரணமாக கிறித்தவரானகே.ஜே.யேசுதாஸின் குரல்தினசரி ‘அரிவராசனம்பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்கவைக்கும்அது மலையாளிகளின் ஒற்றுமைஆனால்தமிழனோ மதசாதிஉணர்வுகளுக்காகதமிழ் உணர்வையும்தமிழின உணர்வையும் தரையில் போட்டுமிதிப்பான்.

இலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும்முஸ்லிம்களுக்கும்தான்ஆனால்தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள்,புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ்முஸ்லிம்களை எதிர்த்தனர்அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.

வடக்கு மாகாணத் தமிழன்கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்என்று சொல்லிதாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான்.புறக்கணித்தான்அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனதுதமிழகத்தில் இருந்துஇலங்கை போன மலையகத் தமிழர்களைசிங்கள அரசு ஒடுக்கியபோதுஈழத் தமிழன்அதைக் கண்டுகொள்ளவில்லைஅங்கும் இன உணர்வில்லை.

தன் அடிப்படை அடையாளங்களைவிரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்டமனோபாவம் தமிழனின் இன்னொரு குணம்ஒரு வங்காளி எங்கு போனாலும்வங்காளியாகவே இருப்பான்ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசாரவேர்களைக் கைவிடுவது இல்லைஆனால்தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதேஇல்லைபொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால்மரியாதை கிடைப்பது இல்லைஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.

இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள்இரண்டுதெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள்இரண்டு கன்னடர்கள்சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள்இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால்..? ஆங்கிலத்தில் பேசுவார்கள்நீங்கள் அறிந்த விஷயம் இதுஆனால்தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை.அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறதுதாய்மொழியை தாய் மண்ணிலேயேபுறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவியசாட்சி!

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ளபல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள்தமிழின கலாசாரமாகசின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமானபகுதிகள்நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப்பிடுங்கப்பட்டனமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுஆந்திரகேரளகர்நாடகமாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர்.விரட்டப்பட்டனர்அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவதுதடுக்கப்பட்டதுஆனால்தமிழ்நாடோ தேசியம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்துஅனுமதித்ததுஇங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர்அதன் பின்னர்தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டேதங்கள் மாநிலத்துக்கு உண்மையாகநடந்தனர்தமிழனை சுரண்டினர்தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல்மீட்டிங்பார்ப்பதில் குறியாக இருந்தான்.

இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம் இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்தஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறதுஅவர் மராட்டியப் பெண்மணி.மராட்டியத்தில் காங்கிரஸும்சிவசேனாவும் எதிர்க்கட்சிகள்ஆனால் சிவசேனாதலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியானகாங்கிரஸ் ஆளாக இருக்கலாம்ஆனால் எங்கள் மண்ணின் மகள்மராட்டிய மாணிக்கம்.எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டுகூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபாபட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.

ஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை,அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக்கூட்டம் நடத்திபிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக்காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.

ஆந்திராவோகர்நாடகாவோகேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒருபிரச்னைக்காகஒரு போராட்டம் நடந்தால்அரசாங்கம்அரசியல் தலைவர்ஆள்வோர்அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும்போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும்அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறுதின்பதாலேயோ என்னவோநம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வுஅங்கு பலருக்கும் இருக்கும்அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல்செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும்பார்த்தோம்ஆனால் தமிழ்நாட்டில்நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்னசெய்தாலும் கவலை இல்லைஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்களமீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டுசுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு,சொடக்கெடுத்துதலைவாழை இழைபோட்டுஉணவு ஊட்டிபீடா மடித்துக்கொடுக்கும்தமிழக போலீஸ்தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காகதமிழனுக்காக போராடினால்மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.

காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும்,அது கட்சி அரசியலோடு நின்றுவிடும்கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள்ஓட்டுப்போட மாட்டார்கள்ஆனால்தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள்கொசுக்கள் போல நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்குகூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்ததமிழக வாக்காளர்கள்...

தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும்இப்படிப் பல காரணங்கள்....

பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லைஅழிக்கப்படும் வாய்ப்பை தானேதருபவன்அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன்மாறவேண்டும்.இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.

"Even a correct decision is wrong....,When it was taken too late .

👲நன்றி : சகோதரி யோகன்னா யாழினி.                                            

 



0 comments:

Post a Comment