இதயம் வரைந்த ஓவியமோ!



இதயம் வரைந்த காதல் ஓவியமோ!
நெஞ்சிலே இன்பம் பொங்க வைக்கிறதம்மா
இரக்கமின்றி
இதழாய் உதிர்ந்து போக செய்யாதே!
இமைகளை திறந்து ஒரு முறை பாரம்மா!
இதயம் பேசும் காதலை
இதயத்துடிப்பும் தன் தாகம் தனை
தணிக்கலாம்._
இளம் வயதினில் நீ
தந்த  காதல் சுகத்தில்
நான் மயங்க
நீ புன்னகையில் வாழ்ந்த
காலமும் மாறி போனதோ!
உன் பார்வையில்
நான் மயங்க வந்து போவாயா?

✎✎✎✎✎✎✎காலையடி,அகிலன் ✎✎✎✎✎✎✎


0 comments:

Post a Comment