ஔவையார் படம் பார்க்கவென்று
அப்புவிடம் அனுமதிபெற்று
ஆசை அறுபது நாள் ஓடிய
ஐங்கரன் திரையரங்கினுள்
ஆவலுடன் நுழைந்து
அரைமணி நேரம் அசைய
-நம்
அடுத்தவீட்டு தாத்தாவின்
இருமல் நெஞ்சில்
இடியோசையாய் என்
அருகில் காதில் விழ
எழுந்த பயத்தினால்
எழுந்து பதறி ப்பின்னே
அடிக்கக் குதிக்கால்
அலறிப் பறந்து வீடு
அடைந்தபோது
அவ்விருமல் தாத்தா
அப்பு,ஆச்சியை அங்கே
அறுத்துக்கொண்டு
இருந்தது கண்டு
அசடு வழிந்தது..
0 comments:
Post a Comment