கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும்....



 கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
     கடவுளை நம்பாமல் நான் ஆன்மீகத்தில் ஈடுபட முடியுமா?

 ஆம்! முடியும்! இந்திய தத்துவங்களைப் போதிக்கும் 6 தர்ஷணாக்களில் – நியாயம், வைசேஷிகம், சாங்க்யம் – என்ற முதல் மூன்றில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை. கௌதம மகரிஷியின் நியாய தர்ஷணா ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. உன் ஞானம் சரியா அல்லது தவறா என்று விளக்குகிறது. உதாரணத்துக்கு, உன் புலன்கள் (கண்கள்) மூலம் நீ சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்கிறாய். நியாய தர்ஷணத்தின் படி நீ காண்பதை எல்லாம் நம்பக் கூடாது. மேற்படி ஆராய்ந்து சூரியன் இருக்கும் இடத்திலேயே தான் இருக்கிறது என்றும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் சூரியன் உதிப்பது போலும், மறைவது போலும் தோற்றத்தை நீ பார்க்கிறாய் என்று தெரிந்து கொள்கிறாய்.

நாம் கோப்பர்நிகஸ் என்பவர் தான் பூமி தன்னைத் தானே தன் அச்சில் சுழல்வதைக் கண்டு பிடித்ததாக எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை அல்ல. அவர் கட்டாயமாக அதைத் தெரிந்து கொண்டார். ஆனால் இந்தியர்கள் பல காலம் முன்பாகவே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதை அறிந்திருந்தனர். நியாய தர்ஷணாவில் இவைகள் விவரிக்கப் படுகின்றன. நாம் மெய் என்று நினைப்பவைகளில் இருக்கும் பொய்யை நியாய தர்ஷணா விளக்குகிறது.

வைசேஷிக தர்ஷணம் என்பது இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறது. – நிலம், நீர், நெருப்பு, காற்று, வெட்ட வெளி, மற்றைய பொருட்கள், உயிர்கள் எல்லாவற்றையும் ஆராய்வது வைசேஷிக தர்ஷணம். இதில் மனம், ஆத்மா, அறிவு, சித்தம் இவற்றைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

சாங்க்ய தர்ஷணம்.இந்த மூன்று தர்ஷணங்களும் கடவுளைப் பற்றிப் பேச வில்லை. ஆனால் அவை ஆத்மாவைப் பற்றிப் பேசுகின்றன. யோக சூத்திரத்தில் (4வது தர்ஷணத்தில்) மட்டும் கடவுள் என்ற ஒரு தலைப்பு இருக்கிறது.எனவே நீ கடவுளை நம்பித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் எதன் மீதாவது நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். குறைந்த பட்சம், ஆன்மாவின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பொதுவாக, கடவுள் என்றால், யாரோ சொர்க்கத்தில் அமர்ந்திருப்பவர், இந்த உலகைப் படைத்தவர், உலகைப் படைத்த பின் இங்கிருந்து சென்று நம் எல்லோருடைய தவறுகளையும் கண்டு பிடிப்பதற்காக இருக்கிறார் என்று எண்ணுகிறோம். நாம் தவறு செய்யும் போதெல்லாம் ஒரு கோலை எடுத்து நம்மைத் தண்டிப்பார் என்று நினைக்கிறோம். நாம் பேசுவது இப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அல்ல.

கடவுள் என்பது இருப்பின் அடையாளம். இந்த உலகம் அன்பு என்ற பொருளால் ஆனது. அன்பு தான் கடவுள். நீ தனியானவன் அல்ல. உன்னை நீ கடவுளிடமிருந்து பிரித்து தனியாக்கிக் கொள்ள முடியாது.

கடவுளுக்கு அப்பால் எதுவுமே கிடையாது. எல்லாமே கடவுளுக்கு உள்ளே தான் இருக்கிறது. அது நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றையும் உள்ளடக்கியது. மகிழ்ச்சியும் வருத்தமும் அதற்குச் சமம். எது ஒன்று இருக்கிறதோ, பூரணமான ஒன்று எல்லாவற்றையும் உள் அடக்கியது எதுவோ அதை அழைக்க நாம் கடவுள் என்ற பெயர் வைத்திருக்கிறோம்.இதைப் பற்றி கவலைப் படாதே. நீ உன்னைப் பற்றி அறிந்து கொள்.

.........குருதேவர்


0 comments:

Post a Comment