ஆனந்தம் ஆனந்தமே




      
"புருவம் உயர்த்தி புன்னகை பூத்து
அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே
பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி 
நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே"

"விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி
பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே
உருக்கமாக பேசி நெஞ்சில் சாய்ந்து
வருடி முத்தமிட்டால் ஆனந்தம் ஆனந்தமே"

"பருவ எழிலில் பெண்மை பூரிக்க
நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே
பருத்த மார்பும் சிறுத்த இடையும் 
கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே"

"பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில்
உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே
திரும்பி பார்த்து வெட்க்கப் பட்டு
விருப்பம் என்றால் ஆனந்தம் ஆனந்தமே"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

0 comments:

Post a Comment