சிரிக்க... சில நிமிடம்

                              சர்தார்ஜி ஜோக்ஸ்                                                                

 

டிப்ஸ் கொடுத்தேன் –

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார்.

சாப்பிட்ட பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம் சொன்னார்,

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்.....” என்று சொல்ல, குழம்பிப்போன சர்வர் கேட்டார்,

சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட சொல்றீங்க?”

நம் சர்தார்ஜி சொன்னார்,

மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு டிப்ஸ் கொடுத்தேன்”

 

-இரவில் தானே அனுப்பினோம்!-

சீனாக்காரர் ஒருவரும் ஒரு சர்தார்ஜியும் சந்தித்தனர்.

சீனாக்காரர்: நாங்கள் தான் முதலில் சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பினோம்

சர்தார்ஜி: இது என்ன பெரிய அதிசயம். நாங்க சூரியனுக்கே ராக்கெட்டை அனுப்பியிருக்கோம்.

சீனாக்காரர்: என்னது சூரியனுக்கு ராக்கெட்டா? அது சூரிய வெப்பத்தில் கருகி விடாதா?

சர்தார்ஜி: கருகாது. ஏன்னா நாங்க இரவில் தானே அனுப்பினோம்.


- NH 140 லே வந்தேன் –

வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?”

இல்லையே… 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு..”

யோவ்… அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..

சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?”

கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்… அதான்….”

 

- முதல் தடவை விமானத்தில் பயணம்-

ஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தார், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் .

பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.

விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் ,

அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது,அந்த இருக்கைதான்

(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.


- எங்க தொட்டாலும் வலிக்குது!-

டாக்டரிடம் சென்ற சர்தார்ஜி

சர்தார்ஜி: டாக்டர் எனக்கு உடம்பில எங்க தொட்டாலும் வலிக்குது. பாருங்க மூக்கை தொட்டா வலிக்குது. தோளை தொட்டா வலிக்குது. காலை தொட்டா வலிக்குது.

டாக்டர் (சற்று யோசித்த விட்டு): எங்கே உங்க கையை காட்டுங்க?. உங்க கையில புண் இருக்கு அதான் நீங்க எங்க தொட்டாலும் வலிக்குது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment