குழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….?

ஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பெற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும்போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது.

மாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோபூச்சாண்டி வருகிறான்என்று பயமுறுத்தி பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல். ‘இவனுடன் பேசாதே‘, ‘அவனுடன் பழகாதேஎன்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்

உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தைவிட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள்.

பெரிய மீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டுமல்ல, பயத்தை போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.

பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொள்வது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது.

மேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பஸ் விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து நம் தலையில் விழுந்துவிடுமோ என்றெல்லாம் நிறையப் பேர் பயப்படுவதுண்டு.

இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழகவிட வேண்டும். வீட்டுக்குள்ளே அடைத்துவைத்துவீடியோ கேம்ஸ்ஆட விடும்போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது.


அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பய குணம் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.

1 comments:

  1. சந்திரகாசன்Thursday, July 14, 2016

    கமலஹாசன் ப் ப் ப ய ய ம்!

    எல்லாம் சிவமயம்
    என்று சொல்லுவினம், ஆனால்
    எனக்கு எல்லாம் பயமயம். காலம்
    உன்னை காலால் உதைக்கும்
    என்று காலம் ஆன பாரதி சொன்னவர்.
    காலணி காலால் உதைத்தால் காலில்
    அடிபடும் என்ற பயம் எனக்கு.
    கவிதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு,
    பீம(ன்)னிண்ட கதைக்கும், அனும
    (ன்)னிண்ட கதைக்கும் பயம்,
    உதைக்கும் பயம், சிதைக்கும் பயம்.
    கதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த
    கதவும் பயம், முழுசா மூடின கதவும்
    பயம், பூட்டு போட்ட கதவென்றாலும்
    பயம் எனக்கு,
    காடு பயம் எனக்கு
    நாடு பயம் எனக்கு
    கூடு பயம் எனக்கு,
    குளம் பயம் எனக்கு, குளத்துக்குள்
    இருக்கும் நண்டு கண்டாலும் பயம்
    எனக்கு, பூச்செண்டு கண்டாலும் பயம்
    எனக்கு.
    செண்டு க்குள்ளார இருக்கும்
    வண்டு கண்டாலும் பயம் எனக்கு.
    கடிக்கிற நாயும், பூனையும்,
    பூனை திங்கிற எலியும் பயம் எனக்கு.
    வெடிச்சு சிதறுற செல்லும் பயம்
    எனக்கு, செல்லுகாக பதுங்குற
    பங்கரும் பயம் எனக்கு,
    பங்கருக்குள் இருக்கிற பாம்பும்
    கடிக்குமோ என்ற பயம் எனக்கு.
    சன கூட்டம் பயம் எனக்கு, தனிமை பயம்
    எனக்கு, தொங்க பயம், தாவ பயம்.
    இந்த காசு பயம், மாசு பயம்,
    தூசு பயம். அழுக்கு பயம், குளிக்க
    பயம், ஆடை பயம்,
    ஆடையில்லை என்றாலும் பயம்.
    இந்த இங்கிலீஸும் பயம் எனக்கு.
    சீனோ போபியா, ஏரோ போபியா, ஷுபோபியா,
    ஹீமோ போபியா, ஒரிட்டோ போபியா,
    செப்ரோ போபியா, டாபோ போபியா,
    சைக்ரோ போபியா, மைக்ரோ போபியா,
    கிளாசோ போபியா என பல போபியோக்கள்
    ஆங்கிலத்தில் உண்டு என
    சொல்லுவினம். இந்த
    எல்லா போபியாக்களும்
    உனக்கு உண்டடா கடவுள்தான்
    உன்னை காப்பாற்ற வேண்டும் என
    சொல்லி டாக்டர் பஞ்சபூதம்
    சாமி கிட்ட அனுப்பினார்.
    அங்கே போனால் செபிக்க பயம், சபிக்க
    பயம், எடுக்க பயம், கொடுக்க பயம்,
    சகிக்க பயம், சுகிக்க பயம்.
    எதையும் உயரத்தில்
    வச்சி அடுக்கபயம், யாரையும்
    கோவிச்சி அடிக்க பயம்.
    அண்டை மனுசரை அணுக பயம், அணுகிய
    மனுசரை இழக்க பயம்.
    உறவு பயம்,
    துறவு பயம்,
    இரவு பயம்,
    விடியும் பயம். புதியம் பார்க்க
    ஏனோ பயம், மதியம்
    தூங்கி எழுந்தாலும் பயம்.
    சோக பயம்,
    வேக பயம்,
    ரோக பயம்,
    நோக பயம்,
    போக பயம், வாரதும் பயம் எனக்கு.
    வாழ பயம், சாகவும் பயம் !

    ReplyDelete