ஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாடுவிட்டு நாடு வந்து இன்று எமது குடும்பங்களில் பிரிவுகள்  எனும் செய்திகள் கவலை தரக்கூடியதாகவே இருக்கின்றன.
அன்று கூட்டு வாழ்க்கையினை சந்தோசமாக கழித்த எமது சமுதாயம் இன்று ஒரு குடும்பமே ஒற்றுமையுடன் வாழ்வதென்பது அரிதாகிவிடட நிலையில் ஏன்  இந்த அவசரம் என்பது புரியாமேலே இருக்கிறது.
மனிதர்கள் பலவிதம்.அவர்கள் எவரும் கருத்துக்களில், குணத்தில் , விருப்பு, வெறுப்புக்கலில் ,அல்லது எதிர்பார்ப்புகளில் நூற்றுக்கு நூறு ஒத்துள்ளவராக ஒருநாளும் இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியருக்கிடையே ஒருவருக்கொருவர்   கருத்துக்களை  செவிமடுத்தலும், ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்தலும் விட்டுக்கொடுப்புகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல பிள்ளைகளின் எதிர்காலமும் ஒளிமயமாகும்.
பிரிவு என்பது மிக,மிக எளிது.ஆனால் மீண்டும் சேர்வது என்பது கடிதிலும் கடித்து.
கூடி வாழ்வோம். கூடியே  வளர்வோம்.


0 comments:

Post a Comment