ஒளிர்வு-(28) மாசி த்திங்கள்-2013


உண்மைகள் உரைக்கப்படும் தளம்-தீபம்மூடநம்பிக்கைகளின் முடிவிடம்.

தளத்தில்:சிந்தனைஒளிகனடாவிலிருந்து ஒரு கடிதம்.., கம்பனின் அறிவியல் ஆழம், ஆன்மீகம், , ஆராய்ச்சியாளரின் செய்திகள்யாரோநான் யாரோதொழில்நுட்பம்உணவின் புதினம் அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்கு தெரியுமா? ,சிரிக்க...!,சினிமாவிளையாட்டு.,நடிகையின் சதையை நம்பி…, !

உங்கள் படைப்பை சமர்ப்பிக்க: manuventhan@hotmail.com

சிந்தனைஒளி

தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளாத பெண்ணை
  வேறுயாரும் காப்பாற்றமுடியாது!
எளிதானதை சிக்கலாக்குவது எளிது.
  ஆனால் சிக்கலானதை எளிதாக்குவதோ சிக்கல்!
காதல் என்பது பரீட்சைமாதிரி இல்லை.
  ஒருதடவை  failஆனால் மறுதடவை எழுதி pass பண்ணுவதற்கு!
அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது!
  அவள் ஈடற்றவள்!
நீ துணிந்தவனாக இருந்தால்
  தோல்விகூட உன்னைக்கண்டு அஞ்சும்!

3 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, February 16, 2013

    படம்: போராளி
    இசை: சுந்தர் சி. பாபு
    பாடலாசிரியர்: கபிலன்
    பாடியவர்கள்: சின்மாயி
    இந்த பாடல் "யாறிவன்.. யாறிவனோ.." இரு "சிந்தனைஒளி" களை கூறிச் செல்வது போல் உள்ளது ,நீங்களும் கேட்டுப் பாருங்களேன்
    .........................................................
    1][காதல் என்பது பரீட்சை மாதிரி இல்லை.
    ஒருதடவை fail ஆனால் மறுதடவை எழுதி pass பண்ணு வதற்கு!]

    "ஒற்றை பார்வையில் உள்ளம் திறக்குமே
    தடுத்திட முடியாதே…
    காதல் என்பது விதையை போன்றது
    புதைத்திட முடியாதே..
    மனதை மோதியே மெள்ள முளைக்குமே
    உனக்கது தெரியாதே"…

    2][நீ துணிந்தவனாக இருந்தால்
    தோல்வி கூட உன்னைக் கண்டு அஞ்சும்!]

    உடைத்திடு இனி விதியெனும் சொல்லை
    உனக்கு இனி அந்த வானம் எல்லை..
    உலகினில் உனை வெல்ல யாரும் இல்லை
    வாடா வாடா…
    உழைப்பவன் விழி உறங்குவதில்லை
    துணிந்தவன் வழி இறங்குவதில்லை
    வேர்வையில் வரும் வெற்றிக்கு
    இங்கே அளவில்லை
    வாடா…

    பருந்தை போல தினம் மேலேறு..
    புலியை போல தினம் நீ சீறு…
    உனது பேரை சொல்லும் வரலாறு…
    முன்னேறு…
    தடையை பார்ப்பதில்லை காட்டாறு
    இடையில் எங்கும் அது நிற்காது…
    முடிவு உனக்கு இனி கிடையாது
    நடை போடு….

    உன் திசை வீசும் காற்றினை
    யாரும் திருப்பிட முடியாதே..
    (முடியாதே…)
    விசை உள்ள பந்து மேலே எழுமே
    அழுத்திட முடியாதே..
    (முடியாதே…)
    தசையினில் உனக்கு தேடல் இருந்தால்
    தோல்விகள் கிடையாதே…
    (கிடையாதே…)
    தக தக தகவென எரிவாய் நண்பா
    அணைத்திட முடியாதே…

    ReplyDelete
  2. தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளாத பெண்ணை
    வேறுயாரும் காப்பாற்றமுடியாது!
    பெண்களை மிக மிக பலவீனர்களாக காட்டும் மக்களைக் கவரும் திரைப்படங்கள் வெளிவரும்வரை பெண்கள் தங்களில் நம்பிக்கை உள்ளவர்களாக மாறப்போவதில்லை.

    ReplyDelete