
மறுமுனையில் அண்ணாமலைத் தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.
''இண்டைக்கு டொக்ரரிட்டை போகவேணும்.''
''ஏன்?என்ன விஷயம்?''
''கொலஸ்ரோல் குளிசையல் எல்லோ முடியப்போகுது.''
''எல்லாம் கொழுப்பெல்லே"
"குளிசையள் கொழுப்பல்ல பறுவதம்,கொழுப்புக்குத்தான் குளிசை தருகினம்."
"என்ன!அகராதி விடுறியள் போல! உந்த கூடாத கொழுப்புகளை சாப்பிடுவானேன்.மருந்துக்கு அலைவானேன்."
''என்ன பறுவதம்,மனிசர் ஆசைக்கு சாப்பிறேல்லையே? ஒரு நாளைக்கேல்லே சாகிறது.''
"ஓமோம்,உலகத்தில மனுஷனுக்கு எதைப் பார்த்தாலும் ஆசைதான்.அதுக்காய் எல்லாத்தையும் அடைய முடியுமே?உங்கட ஆசைக்கு சாப்பிடுங்கோ,சாகிற நேரம் சாகுங்கோ!அதை மாத்தேலாது.உயிரோட இருக்கும்வரை உபத்திரவம் உங்களுக்கு மட்டுமே!பிள்ளையளுக்குமெல்லெ குடுக்கிறியள்.மிருகங்கள், பறவைகளை விட கேவலம் இந்த மனிசசாதி."
"அதென்ன பறுவதம் கேவலம் எண்டு சொல்லுறாய்?"

வீட்டுக்கு உதவாத சாமான்களை வீட்டில் வைத்திருக்காமல் குப்பையிலை எறியிறோம்.ஆனால் உடம்புக்கு உதவாத கூடாத கொழுப்பையும், சீனியையும்,உப்பையும் வயித்துகுள்ள வீசுறோம். கடைசியில வயித்தை குப்பைத் தொட்டியாயே பாவிக்கிறோம்.அவை உடம்புக்கு விஷமா மாறாம என்ன செய்யும்?"
மேலும் விவாதித்து தன் பக்கம் நியாயமான கருத்துக்கள் இல்லை என உணர்ந்த தாத்தாவும்,
"நீ சொல்லுறது சரி,பறுவதம். உதுகளை முந்தி ஆர் யோசிச்சது. இனியாவது கவனமாய் இருப்பம்.நானும் வெளிக்கிட வேணும்.சரி."
என்றவாறே தன் உரையாடலை முடித்துக்கொண்டார் அண்ணாமலைத் தாத்தா.
அம்மாவின் வழமையான தேவாரம் ஆரம்பிக்கவே படுக்கையிலிருந்து நானும் எழுந்து பாத்ரூம் நோக்கி நடையைக் கட்டினேன்.
மேலும் விவாதித்து தன் பக்கம் நியாயமான கருத்துக்கள் இல்லை என உணர்ந்த தாத்தாவும்,
"நீ சொல்லுறது சரி,பறுவதம். உதுகளை முந்தி ஆர் யோசிச்சது. இனியாவது கவனமாய் இருப்பம்.நானும் வெளிக்கிட வேணும்.சரி."
என்றவாறே தன் உரையாடலை முடித்துக்கொண்டார் அண்ணாமலைத் தாத்தா.
அம்மாவின் வழமையான தேவாரம் ஆரம்பிக்கவே படுக்கையிலிருந்து நானும் எழுந்து பாத்ரூம் நோக்கி நடையைக் கட்டினேன்.
ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன்
0 comments:
Post a Comment