ஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]

எற்றென்று இரங்குவது செய்யற்க செய்வானேன் 
மற்று அன்ன செய்யாமை நன்று [திருக்குறள்]

தவறு செய்யாத மனிதனே இருக்க முடியாது.
அது வள்ளுவருக்கும் தெரியும்.
 
எனவே,ஒரு வேளை தவறு செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்விக்கு விடை   தருகிறார்.
ஒரு தவறான செயலை செய்து விட்டு, செய்து விட்டோமே, செய்து விட்டோமே என்று  அதை நினைத்து இரக்கப்பட்டுக் கொண்டு இருப்பதில் ஒரு புண்ணியமும்  இல்லை. என்று வள்ளுவர் சொல்லுவதாக பரிமேலழகர் சொல்கிறார்.
அதாவது, அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து விடுபடச் சொல்கிறார். குற்ற உணர்வு  எதையும் சாதிக்க பயன்படாது.
இது அனைத்து மதங்களிலும் கடை பிடிக்கப் படும் ஒன்றுதான்.
மனிதனை அவனின் பாவச் சுமையை குறைக்க ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கிறது.
மீண்டும் அது போன்ற தவறுகளைச் செய்யக் கூடாது, செய்த தவறுக்கு வருந்திக் கொண்டே  இருக்கக் கூடாது . மேலே ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.
மற்றன்ன செய்யாமை நன்று.......


0 comments:

Post a Comment