உரிமை வேண்டி....

Image result for உரிமை
உறக்கமாய் நீயும்
உறைந்து போவாய் எனின்
உரிமை வேண்டி
செத்துமடியும் இனத்தின் ..
உணர்வுகளும்
உணரப்படமுடியாமல்
மடிந்து போகும்..
உள்நோக்கம்  கொள்ளாது
விழித்து பார்..
உணர்ந்துவிடுவாய்
வலிகள் தம்மை.

உயிர்களைக் காக்கும்  இறைவனும்.
உனை முழுமையாக
புரிந்து கொள்வானென்று..
உணர்ச்சி இழந்து
உருக்குலைந்து போகாதே.

உன்னை முழுமையாய்
புரிந்து கொண்டு
மறுக்கப்படும்
நீதிகளை  வேண்டி
போராடி  விடு.
மறையாமல் இருந்துவிடும்
நிஜங்கள்
உன்னை வாழவைத்துவிடும்.

கடந்த, நிகழ், எதிர்
காலங்களும் நீயே.
காலத்தை
நோக்கமின்றி மறைக்காதே
கடமையே   உன்னை
உயர்த்தி வைக்கும்.
காலத்தை  விரயம் செய்யாது
கண் வைத்துவிடு.
கனிந்து வரும் நேரங்கள்.

-காலையடி, அகிலன்.

0 comments:

Post a Comment