உயிர் சுமந்த மெய்யே!

கருவறையில் இடம் தந்து.
கண் அருகே கனவுகள்  சுமந்து.
வழியெங்கும் பயணம் நலம் பெற.
வழித்துணையாய் வழிகாட்டும்.
உயிர் சுமந்த மெய்யே!

கோபபட்டு  வீசினாலும்.
வேதனை   தந்திடாது .
இனிக்கும் விதத்தில் சுகம்
தரும் மனமே!

மனதில்
சங்கடங்கள்  புதைத்துத்தன்
மகிழ்வை விற்று
மகிழ்வு தரும்
மதியே!

தன் பிள்ளையின்
வாடிய முகம் கண்டால்.
தன்னில் உணர்வுகளை
அடக்கி வைத்து .
மதி மயக்கும் அழகி!

உயிர்களுக்கு அமுதமாகி.
உலகிற்கு காதல் கொடுக்கும்
வலிமையின் ஊற்றே.
இவள் பணி செய்யும்  தேவதையாய்
வாழவே விரும்பிய.
புன்னகையை  சிந்தும்
எம் தெய்வமே!

[ஆக்கம்:காலையடி,அகிலன்]

0 comments:

Post a Comment