"மனித மனம் "

 



"மனித மனம் திருப்தி அடையாது

மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது

மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது

மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது"

 👫

"கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான்

கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான்

கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான்

கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்"

 👪

"இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது

இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும்

இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை

இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்"

 👯

"சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை

சிலருக்கு வைக்க இடமே இல்லை

சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு

சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை"

 👭

"பணக்காரன் மூட்டை முடிச்சு பதுக்குகிறான்

பஞ்சம் பிடித்தவன் போல் அலைகிறான்

பட்டினி கிடக்கிறான் சாதாரண மனிதன்

பங்கிட்டு அதையும் கொடுத்து சாப்பிடுகிறான்"

 👵👴

"உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல

உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம்

உலோபியாக சேர்த்து வைப்பதை விட

உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி !"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment