"தேநீர்க் கடையும் நினைவழியாக் காலமும்"

 

"மனதின் மூலையில் ஒரு நினைவு

அணையா தீபமாய் இன்றும் எரிகிறது

தேநீரின் வாசனை காற்றில் வருகிறது 

வடையின் மெதுமை வாயில் ஊறுது!" 

 

"உரையாடல் மலர்ந்து நட்பு வளர்ந்தது

கிசுகிசு கதைகளும் இடையில் வந்தது

சிரிப்பும் சச்சரவும் முட்டி மோதின

வெற்றிலை பாக்கு வாயில் ஆடின!"

 

"விடைகள் புரியா வாங்கு அரசியல்

குடையில் போகும் பூவையர் மகிழ்ச்சி

இடையில் பறக்கும் ஈக்கள் ஒருபக்கம்

கடையின் நினைவு மறையா காலமே!"

 

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்

0 comments:

Post a Comment