சிரிக்க...சில நிமிடம்

 நகைச்சுவை/காமெடி/ஜோக்ஸ் 



01-

அப்பா: டேய் உலகத்திலேயே காசுதான்டா முக்கியம். காசு இல்லைன்னா  எதையுமே வாங்க முடியாதுடா.

மகன்: ஏன் கடன் வாங்கலாமே....

 

02-

நண்பர்01: பொண்ணு வீட்டுக்காரங்க ஏன் கல்யாணத்தை தள்ளி தள்ளி வைத்துக் கொண்டே போறாங்கள்?

நண்பர்02: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிக்கணும்னு பெரியவங்க சொன்னதை சீரியஸா எடுத்துட்டாங்களாம். அதனால இன்னும் 300 பொய் சொன்ன பிறகுதான் கல்யாணமாம்.

 

03-

போலிஸ்: ஒவ்வொரு நாளும் போலீஸ் ஸ்டேசனில வந்து ரெண்டு வேளையும் கையெழுத்து போட்டுவிட்டுப்  போகணும், தெரியுதா?

திருடன்: கையெழுத்து போட்டுவிட்டு நான் வழக்கம் போலத்  திருடப்  போகலாமுங்களா  ஐயா?

 

04-

வேலு: யாரது ஒவ்வொருநாளும்  ராத்திரி ரெண்டு மணிக்கு வந்து உன்னை கூட்டிக்கிட்டு போறது?பாலு: என் நண்பன்  தான். அவனுக்கும் தூக்கத்தில் நடக்கிற வியாதி. எனக்கும் அதே வியாதி. அதனால் தான் நான் ஒரு கம்பெனிக்காக அவனை வந்து என்னை எழுப்ப சொல்லி இருக்கேன்.

 

05-

ராமு: நிலம், எங்கட மாமனார் சீதனமாய்  தந்தது. மச்சானாவை வெளிநாட்டில இருந்து அனுப்பின காசில வீடு கட்டினது. வீட்டில இருக்கிற சாமான் எல்லாம் ,மனுசி வேலை செய்யிற ஆபிஸில லோன் போட்டு வாங்கினது..... எப்பிடி இருக்கு என் வீடு?

சோமு:என்ன இது... உன் வீடா?

 

 

06-

ராமு: அவரு வியாபாரத்தில படிப்படியா உயர்ந்தவரு.

சோமு:எப்படி?

ராமு: முதல்ல செருப்பு வியாபாரம் பண்ணி, அப்புறம் பெல்ற் வியாபாரம் செஞ்சாரு. இப்போ தொப்பி வியாபாரம் பண்ணுறாரு.

 

07.

கமல்:குடி குடியைக் கெடுக்கும் எண்டு சொல்லுறது சரியாய் போச்சு.

விமல்:எப்பிடி?

கமல்: எனக்குக் கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னைக் குடிக்கக் கூடாது என்று சொல்லிட்டா.

 

08.

ராமு:நீ சினிமா டைரக்ரர் ஆவதுக்கு முன்னே ஊரில ரைஸ் மில் வைச்சு இருந்தது பத்திரிகைக் காரங்களுக்கு தெரிஞ்சிருக்கு போலிருக்கு.

சோமு:ஏன் ...என்ன ஆச்சு....?

எப்பவுமே அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டு இருக்கார் எண்டு விமர்சனம் எழுதுறாங்களே....!

 

09.

தாதி01: அந்த பேஷண்ட் ரஜனி ரசிகர் எண்டு நினைக்கிறன்.

தாதி 02: எப்பிடிச் சொல்லுறாய்?

தாதி 01:நான் ஊசி போட்டதும் 'என் வலி தனி வலி'எண்டு சொல்லுறாரே.

 

10.

அமலா:அவர் கோயிலுக்குப் போகும்போது பாய்ந்து பாய்ந்து தான் போவார்.

விமலா: ஏன்?

அமலா:அவர்தான் பக்திமான் ஆச்சே!

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment