தொழில்நுட்பம்


2015 இல் உலகை சுற்றப் போகும் சூரிய மின் சக்தி விமானம்! 

முதன் முதலாக ஒரு சூரிய மின் சக்தி விமானம் 2015 இல் உலகை சுற்றப் போகிறது.   1999 இல் உலகை முதன் முதலாக பலூனில் உலகை சுற்றிய பெட்ரான்ட் பிக்கார்ட் இதை
வடிவமைத்துள்ளார்.சோலார் இம்பல்ஸ் என்றழைக்கப் படும் இந்த விமானத்தின் சிறப்பு என்ன என்றால் இது இரவிலும் பறக்கக் கூடியது. இதன் எடை குறைவான உருவாக்கமும் வலிமை மிகுந்த மின் கலன் திறனும் இதை சாத்தியமாக்குகிறது.
2009 இல் இந்த மாதிரி ஒரு சூரிய மின் சக்தி விமானம் உருவாக்க வேண்டுமென்று பிக்கார்ட் நினைத்து அதை செயல் படுத்தவும் செய்தார். இந்த விமானம் 2010 இல் சுவிட்சர்லாந்து  நாட்டு மீது 26 மணி நேரம் 9 நிமிடங்கள் பறந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஸ்பெயின் நாட்டில் இருந்து மொராக்கோ நாட்டுக்கு போய் ஒரு சாதனை படைத்தது.

ஏ.டி.எம் மில் பணம் எடுக்க கார்டு வேண்டாம்.. கை போதும்!

ஜப்பானின் கிஃபு பகுதியில் உள்ளது ஒகாகி கியோரிட்சு வங்கி. கார்டு இல்லா ஏடிஎம் சேவையை இந்த வங்கி நேற்று அறிமுகப்படுத்தியது. இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களது கை ரேகையை வங்கியில் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்களது பிறந்த தேதியும் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு பாஸ்வேர்டு வழங்கப்படும். ஏடிஎம்மில் பணம் எடுப்பதாக இருந்தால் முதலில் நமது பிறந்த தேதியை டைப் செய்து பின்னர் உள்ளங்கையை ஏடிஎம்மில் உள்ள ஸ்கேனர் கருவி மீது வைக்க வேண்டும்.மானிட்டரில் நமது பெயர் வந்த பிறகு, பாஸ்வேர்டு டைப் செய்து பணம் எடுத்துக் கொள்ளலாம். ஸ்டேட்மென்ட் பிரின்ட் எடுக்கலாம். டெபாசிட்டும் செய்ய முடியும். மழை, வெள்ளம், சுனாமி போன்ற ஆபத்துகள் நிறைந்த நாடு ஜப்பான். அசம்பாவித சூழ்நிலைகளில், ஏடிஎம் கார்டு இல்லாமலேயே மக்கள் பணம் எடுக்கும் வசதி வேண்டும் என்பதால் இத்திட்டத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. கிஃபு பகுதியில் உள்ள ஹஷிமா நகர் மற்றும் நடமாடும் ஏடிஎம் ஆகியவற்றில் இந்த சேவை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 18 கிளைகளில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் நவீன பிரா

மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவும் நவீன பிராஅமெரிக்காவில் ஒரு நவீன பிராவை உருவாக்கியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால், அணிந்தவருக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக்
கண்டறிய முடியுமாம்.

இந்த பிராவுக்குள் மார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாம். இதுதான் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய உதவுகிறதாம்.  வழக்கமான மாமோகிராம் செய்வதற்குப் பதில் இந்த பிராவை அணிந்தாலே மார்பில் புற்றுநோய் அறிகுறி இருக்கிறதா என்பதை இது காட்டிக் கொடுத்து விடுமாம்.
புற்றுநோய் கட்டிகள், மார்பகத்தில் இருக்கிறதா என்பதை இந்த பிரா கருவி துல்லியமாக காட்டி விடுமாம். இதன் மூலம் உடனடி சிகிச்சைக்கு வழி கிடைக்கிறது. தேவையில்லாத சிக்கல்களையும் தவிர்க்கலாமாம்.

இந்த பிராவுக்குள் பொருத்தப்பட்டுள்ள நவீன சாதனத்தில் அதி உயர் சென்சார் கருவி முக்கியமாக இடம் பெற்றுள்ளது. இது, மார்பகத்தில் உள்ள செல்களின் வெப்பநிலையை உணர்ந்து, அதில் கூடுதல், குறைச்சல் இருக்கிறதா என்பதை சொல்கிறது. இதை வைத்து செல்களில் தேவையில்லாத பெருக்கம் இருக்கிறதா அதாவது புற்றுநோய் திசுக்கள் உருவாகியுள்ளதா என்பதை அறிய முடியும்.

இந்த பிரா இன்னும் மார்க்கெட்டுக்கு வரவில்லை. 2013ம் ஆண்டுதான் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளனர்.

தமிழில் எழுதியதை வாசித்துக் காட்டும் இலவச மென்பொருள்!

நாம் ஆங்கிலத்தில் எழுதியதை ஒலி வடிவமாக மாற்றித்தரும் மென்பொருள்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆங்கிலத்தில் தட்டச்சிட்டதை வாசிக்க செய்யும் இத்தகைய மென்பொருள்களை நம்மில் ஒரு சிலர் பயன்படுத்தியும் இருக்கலாம்.

அதுபோலவே நம் தமிழ்மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக தமிழில் தட்டச்சிட்டதை வாசித்துக்காட்டுகிறது இந்த மென்பொருள். இந்த மென்பொருளை பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் பேராசிரியர்.ஏ.ஜி.ராமகிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.

தமிழில் எழுதியதை வாசித்துக்காட்ட இங்கு கிளிக் செய்யவும் http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/

மேற்காணும் இணைப்பைச்சொடுக்கி இந்த தளத்திற்கு செல்லவும். தமிழில் யுனிக்கோட் முறையில் எழுதப்பட்ட வரிகளை, கட்டுரைகளை, இங்கு இருக்கும் பெட்டியில் உள்ளிட்டு Submit என்பதை சொடுக்கினால் போதும்.

படுக்கையில் ‘உச்சா’ போனாலும் நோ பிராப்ளம் : வந்தாச்சு கருவி

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத வயதானவர்களுக்காக பிரத்யேக கருவியை ஜப்பான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிறுநீர், மலம் கழித்தால் ஆட்டோமேடிக் கருவி கழுவி துடைத்து சுத்தம் செய்துவிடும். ஜப்பானில் சீனியர் சிட்டிசன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயன்படும் கருவிகளை பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து தயாரித்து வருகின்றன.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் வகையில் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச கண்காட்சி நடந்தது. இதில், ‘மசில்கார்ப்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘ரோபோ ஹெல்ப்பர் லவ்’ என்ற கருவி பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இது ஆட்டோமேடிக் டாய்லெட் வாஷ் கருவியாகும். ஆங்கில ‘யு’ எழுத்து வடிவில் இருக்கிறது.

படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகள், முதியோரின் இரு கால்களுக்கும் நடுவே சிறுநீர், மல துவாரங்களை மூடும் வகையில் கவை போல இந்த கருவியை பொருத்த வேண்டும். சிறுநீர், மலம் வெளியேறுவதாக சென்சார் மூலம் தெரியவந்தால், உடனே பிரத்யேக குழாய் மூலம் அவை உறிஞ்சப்பட்டு, வெளியேற்றப்படும். கிருமிநாசினி கலந்த தண்ணீர் உடனே அப்பகுதியில் ஸ்பிரே செய்யப்படும். சூடான காற்று செலுத்தி அப்பகுதிகள் காயவைக்கப்படும்.



கணினி உலகம்



அப்பள் நிறுவனத்தின் பங்குகள் சரிவு: முன்னணியில் சாம்சங், கூகுள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அப்பிள் நிறுவனம்தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியது.
 சமீபகாலமாக அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக சாம்சங்கூகுள் நிறுவனங்கள் கைபேசிகள்,டேப்ளட்கள்மடிக்கணனிகள் போன்றவற்றை குறைந்த விலையிலும்அப்பிளின் தரத்திற்கு நிகராகவும் வழங்க ஆரம்பித்துள்ளன.
இதுதவிர சாம்சங்கூகுள் நிறுவனங்கள் விற்கும் கைபேசிகள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் எதை வேண்டுமானாலும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். ஆனால் அப்பளில் அவ்வாறு செய்ய முடியாது.
எனவே சாம்சங்கூகுள் நிறுவன தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இது அப்பிள் நிறுவன பங்குகளை வெகுவாக பாதித்துள்ளது.
இதனால் $ 705ல் இருந்த அப்பிள் நிறுவன பங்குகள் வெகுவாக குறைய தொடங்கிதற்போது $ 547 ஆக உள்ளது. மேலும் அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் $ 420 ஐ தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய அம்சங்களுடன் Gmail 2.0 வெளியானது

மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் இன்று முன்னணியில் இருக்கும் கூகுளின் Gmail சேவையானது iPhone மற்றும் iPad போன்றவற்றிற்கானApplication - இன் புதிய பதிப்பினை

அறிமுகப்படுத்தியுள்ளது.
 Gmail 2.0 பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Applicationஆனது முன்னைய பதிப்பினை விடவும் கவர்ச்சிகரம்இலகுவாக பயன்படுத்தக்கூடியவாறான பயனர் இடைமுகத்தினை கொண்டதாகக் காணப்படுகின்றது.
மேலும் மின்னஞ்சலுடன் அனுப்பியவரின் புகைப்படங்களை தோற்றுவித்தல்புத்தம் புதிய அனிமேஷன் தொழில்நுட்பம்போன்ற அம்சங்களையும் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளை கையாளுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடுதல் வசதி ஆகியவையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குரோம் உலாவியின் வேகத்தை அதிகரிப்பதற்கு உதவும் நீட்சி இணையத்தளப் பாவனையின் போது முக்கிய பங்கு வகிக்கும் உலாவிகளில் முதன்மையானதாக விளங்கும் கூகுள் குரோம் ஆகும்.

 இங்கு சேமிக்கப்படும் தற்காலிக கோப்புக்களின் காரணமாக அதன் உலாவல் வேகம் மந்தமடைந்து செல்லும். இதனால் அக்கோப்புக்களை அகற்றிவிடுவது அவசியமானதாகும்.
இதற்கான வசதி குரோம் உலாவியில் தரப்பட்டுள்ள போதிலும் இச்செயற்பாட்டை மேலும் இலகுவாக்கும் பொருட்டு நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Chrome History Eraser App எனும் இந்த நீட்சியின் உதவியுடன் Cache, Cookies, Download History, தட்டச்சு செய்யப்பட்ட URL-கள்மற்றும் Browsing Historyஎன்பவற்றை ஒரே கிளிக் மூலம் அகற்றி விட முடியும்.
இவை தவிர சேமிக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களையும் அகற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கான நவீன பாதுகாப்பான தேடியந்திரங்கள்

இன்றைய நவீன காலகட்டத்தில் 6 வயது முதலே இணையத்தை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.எனவே சிறுவர்களுக்கு ஏற்றாற் வகையில்பல தேடியந்திரங்கள் உள்ளன.Aga-Kidsஇந்த தேடியந்திரம் கொஞ்சம் விஷுவலானது. அதாவது படங்களாக தகவல்கள் தேவையா என்றும் தீர்மானித்து கொள்ளலாம்.

தேடுவதற்கு முன்பே தவல்கள் சாதாரணமாக தோன்ற வேண்டுமா அல்லது காட்சி ரீதியாக (விஷுவலாக)தோன்ற வேண்டுமா என தெரிவு செய்து கொள்ளலாம்.
இதை தவிர கார்ட்டூன்விளையாட்டுகள்பொம்மை செய்தல் ஆகிய தனிப்பகுதிகளும் இருக்கின்றன. இணையத்திலேயே வரைவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது.
அது மட்டும் அல்ல தேட கட்டத்திற்கு மேலேயே பல குறிச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கிளிக் செய்து பார்க்கலாம்.
இதே போலவே கிட்ரெக்ஸ்.ஆர்ஜி என்னும் தேடியந்திரம் அழகான டைனசோர் படத்தோடு வரவேற்கிறது.
இந்த தேடியந்திரம் கூகுளை பயன்படுத்தி சுட்டீஸ்களுக்கு பொருத்தமான தளங்களை மட்டும் தருகிறது.
இதில் குழந்தைகளுக்கு என்று தனிப்பகுதியும் பெற்றோர்களுக்கு என்று தனிப்பகுதியும் இருக்கிறது.
குழந்தைகளுக்கான பகுதியை கிளிக் செய்தால் குட்டீஸ் வரைந்த அழகான ஓவியங்களை பார்க்கலாம்.
KidsClick.org
கிஸ்கிளிக்.ஆர்ஜி தேடியந்திரம் சிறுவர்களுக்காக என்று நூலகர்களால் உருவாக்கப்பட்டது. எனவே ஹோம் ஒர்கிற்கு தேவையான தகவல்களை இதில் தைரியமாக தேடலாம்.
Ask Kids
ஆஸ்க்கிட்ஸ் தேடியந்திரத்தில் எந்த சந்தேகத்தையும் கேள்வியாக கேட்டு தேடலாம். நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கான பதில்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தவிர விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் பற்றியும் தேடலாம்.

இனிமேல் Facebook Messanger-ல் SMS அனுப்பலாம்

 இனிமேல் Facebook Messanger-ன் மூலம் SMS அனுப்ப முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த சேவையை பேஸ்புக் கணக்கு மற்றும் மின்னஞ்சல் கூட இல்லாமலும் பெறலாம்.
இந்த புதிய Facebook Messanger Application-னை முதலில் இந்தியா,இந்தோனேசியாவெனிசுலாஅவுஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவிலும் பின்னர் மற்ற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த சேவையைப்பெற பயனாளர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டும் போதுமானது என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
முதல் பேஸ்புக் கணக்கை மொபைல் போன் வழியாக தொடங்குபவர்களுக்குசிறப்பு சலுகையையும் பேஸ்புக் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அதிகமான பயனாளர்கள் இணைவதுடன்இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமென செல்போன் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு புதிய பதிப்பாக வெளிவரும் Angry Birds

உலகளாவிய ரீதியில் கணனி விளையாட்டு பிரியர்களை கட்டிப்போட்ட விளையாட்டுக்களில் Angry Birds ஆனது மிகவும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.

இக்கணனி விளையாட்டானது காலத்திற்கு காலம் மென்மேலும் மெருகூட்டப்பட்டு புதிதாக வெளியிடப்படுவதுண்டு.
இதன் அடிப்படையில் தற்போது கிறிஸ்மஸ் தினத்தினை முன்னிட்டு அதன் புதிய Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 25ம் திகதியை இலக்காகக் கொண்டு 25 Level - கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது இந்த Level - கள் நாள் ஒன்றிற்கு ஒன்று வீதம் அதிகரித்து 25ம் திகதி 25 Level - களை அடைந்துவிடும். மேலும் இப்புதிய பதிப்பில் 3 இரகசியமான Level - கள் காணப்படுவதுடன் ஒரு போனஸ் Level -இனையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கணனி விளையாட்டினை Android சாதனங்களுக்காக Google Play Store -இலிருந்தும்iOS சாதனங்களுக்காக Apple App Store - இருந்தும் தரவிறக்கம் செய்ய முடியும்.
4. சிக்கலான பொது விஷயங்களை பற்றிய ஆய்வு கட்டுரைகளை படிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு கண்காட்சிக்கு போகலாம். அங்கு அலசப்படும் சில விஷயங்களை பார்க்கும்போது பிரச்னையை தீர்ப்பதற்கான வழி கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.



/


சினிமா


2012-12-10      நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
நடிகர்கள்: விஜய் சேதுபதி, ராஜ்குமார், விக்னேஷ், பகவதி பெருமாள்
கதை: திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கிற நிலையில் கடந்த ஒரு வருட நினைவுகளை மறந்துவிடுகிற ஹீரோவின் சிந்தனையை சிந்தாமல் சிதறாமல் நமக்கும் அப்படியே தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாலாஜி தரணீதரன்.
கருத்து: முன்-பின் பாதிகளில் அலுப்புத் தட்டும் சில காட்சிகளில் பலமாகக் கத்திரி வைத்துஇருந்தால், இன்னும் தீப்பிடித்து ஓடியிருக்கும் இந்த கொமெடி எக்ஸ்பிரஸ்.
புள்ளிகள்:35
2012-12-06      நீர்ப்பறவை
நடிகர்கள்: விஷ்ணு,சுனைனா,வடிவுக்கரசி.
கதை: துப்பாக்கி, இரத்தமில்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை காதலோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
கருத்து: மீன் செத்தாலும் கருவாடுக்காகும் என்பது மாதிரி, படம் ஓடாவிட்டாலும் ஆங்காங்க தரப்படும் அவார்டுகளுக்காகும்! வேறென்ன சொல்ல?
புள்ளிகள்:40
2012-11-18      அம்மாவின் கைபேசி
நடிகர்கள்: சாந்தனு பாக்யராஜ்,இனியா
கதை: ஒன்பது பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை மிகவும் நீளமாகவும் உருக்கமாகவும் சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான்.
கருத்து: ரசிகர்களின் வேண்டுகோள், அழகி மாதிரியான அழியாத ஒரு படைப்பை மீண்டும் எடுக்க முடிந்தால் எடுங்க, இல்லைன்னா ஆளவிடுங்க
புள்ளிகள்:35
திரையுள்..
நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் – ரஜினி
14-rajini-kanth-speech--300.சென்னை: அரசியலுக்கு வருவேன் என்று பொய்யான நம்பிக்கை தர விரும்பவில்லை. ஆனால் நேரமும் காலமும் நல்லாருந்தாதான் அரசியலில் ஜெயிக்க முடியும் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 63வது பிறந்தநாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் ரஜினிகாந்த்தை வாழ்த்தி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், லாரன்ஸ், கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.வி.ரம ணன், பாண்டு, நமீதா, உட்பட பலர் பேசினர் ரஜினி அதிகநேரம் பேசிய அரசியல் மேடை இதுவே. விழாவில் ரஜினி பேசியதாவது: ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்க மாட்டேன். இதற்கு முக்கிய காரணம், 22 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு துயரமான சம்பவம்தான். அப்போது நடந்த என் பிறந்தநாள் விழாவுக்கு வெளியூரிலிருந்து வந்த 3 பேர் ஊருக்கு திரும்பிச் சென்றபோது, விபத்தில் சிக்கி இறந்தனர். அவர்களின் பெற்றோர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டனர். அதை இங்கே சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் இனி சென்னையில் இருக்க வேண்டாம், பிறந்தநாளன்று என்ற முடிவுக்கு வந்தேன். வெளியூருக்கு… என் பிறந்தநாளில் வெளியூருக்கு சென்றுவிடுவேன். அங்கு தனியாக அமர்ந்து, இதுவரை நான் என்ன செய்தேன்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இனி என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்துப் பார்ப்பேன். என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அது ஆண்டவன் கையில் இருக்கிறது. மிகப் பெரிய பிளான் போட்டால், அது நடக்காது. மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று ஒருவன் நினைத்தால், அப்படியே நடந்து விடாது. 500 ரூபாய் சம்பாதிக்கலாம். அல்லது 2000 சம்பாதிக்கலாம். ஆனால் 1000 சம்பாதிக்க முடியாது. நேத்து என் பிறந்த நாள் அன்று நான் உங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. 12.12.12 என்பதை அவாய்ட் பண்ணக்கூடாது, அது நல்லாருக்காது. அதுவும் நான் உடம்பு சரியில்லாம இருந்து வந்த பிறகு ரசிகர்கள்லாம் பார்க்க ஆவலா இருக்காங்க. அவர்களை சந்திக்காம இருந்தா நல்லாருக்காதுன்னு சொன்னாங்க. சரி இப்ப சந்திக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தபோது, என்னுடைய அருமையான நண்பன், உயிர் நண்பன், எப்படி சொல்றதுன்னு தெரியல. அவனை வெளிய நெறய பேருக்கு தெரியாது. ரொம்ப சிலருக்குத்தான் தெரியும். அந்த நண்பன், எனக்கு அனுமான் மாதிரி இருந்த காந்தி… மாரடைப்பால் 10-ம் தேதி இறந்துபோனான். 11-ம் தேதி அடக்கம் பண்ணிட்டு வந்தேன். அந்த சோகத்தை மைன்ட்ல வச்சிருந்து வருத்தத்தோட இருந்தேன். என் அப்பா இறந்திருக்கார், அண்ணா இறந்திருக்கார், அம்மா இறந்திருக்காங்க… ஆனா அதைவிட எனக்கு அதிக வேதனையைத் தந்தது காந்தியின் மரணம். அப்பா இறந்த போது ரொம்ப வயசாகியிருந்தார். அண்ணன் இறந்ததுக்கு காரணமிருக்கு. அம்மா இறந்தபோது நான் சின்னப் பையன். இன்னும் சில நண்பர்களும் இறந்திருக்காங்க. காந்தியின் இறந்து போனப்ப ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா… சில வியாதிகள் உடம்பிலிருக்கும்போது, அதை வெளிய யாரும் சொல்றதில்லை. வெளிய சொன்னா தொந்தரவா இருக்கும்னு நினைச்சி உள்ளயே வச்சிக்கிட்டு காந்தி அதை யார்கிட்டயும் சொல்லல. திடீர்னு சில தினங்களுக்கு முன் காந்தி மருத்துவமனையில சேர்த்திருக்கிறதா சொன்னாங்க. பத்தாம்தேதி கேட்டப்ப இப்போ பரவால்லன்னாங்க. ஆனா அன்னிக்கு நைட் இறந்து போயிட்டதா செய்தி வந்தது. ஒருவேளை அங்கே உடனே போய் அவனைப் பார்த்து, வேற ஆஸ்பிடலுக்கு ஷிப்ட் பண்ணியிருந்தா காந்தி பொழச்சிருப்பானோ என்ற உறுத்தல் எனக்கு இருந்துகிட்டே இருந்தது. அந்த பெய்ன்ல நான் நேத்து முழுக்க தூங்கவே இல்லை. அந்த சோகத்தை மறக்க முடியாம இருந்தேன். ரசிகர்கள் எத்தனை மணிக்கு வருவாங்கன்னு கேட்டேன். எட்டு ஒன்பது மணிக்கு வருவாங்கன்னு சொன்னாங்க. என் வேதனையை மறக்கடித்த ரசிகர்கள்… ஆனா காலைல 6 மணிக்கே முன்னூறு நானூறு பேர் வந்திட்டிருந்தாங்க. அதுக்கப்புறம் குளிச்சி பூஜை முடிச்சி வெளிய வந்து உங்களையெல்லாம் பாத்தேன். அப்போ என் மனம் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவில்லை. உங்களையெல்லாம் பாத்தாதான் அந்த வலி தீரும்னு ஆண்டவன் முடிவு செஞ்சிருக்கான். அது ஆயிரம் கோடி கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சி.. உங்களைப் பார்த்ததும் கிடைச்சது. அந்த காந்தி என்ற நண்பனின் மரணம் தந்த வலியை உங்களை பார்க்க வைத்து தீர்க்க வச்சது நிச்சயம் ஆண்டவன் செயல்தான். கூட்டம் சேர்க்க முயன்றதில்லை… அதுக்கடுத்த நாள் வெளியில் போகலாம்னு நினைச்சேன். ஆனால் அன்னிக்கு இதுபோல நிகழ்ச்சி இருக்கு, ரசிகர்கள்லாம் உங்களைப் பார்க்க ஆர்வமா காத்துக்கிட்டிருக்காங்கன்னு சொன்னாங்க. அதனால இங்க வந்திருக்கேன். நான் பொதுவா எப்பவுமே கூட்டம் சேர்க்க முயற்சி பண்ணதில்லை. ஏன்னா அதுக்கு எனக்கு அவசியமே இல்லை. கூட்டம் சேர்த்தா மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்கும். என்னால யாருக்கும் எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதுன்னுதான் நான் கூட்டம் சேர்ப்பதில்லை. அதனாலதான் 12-ம் தேதி சென்னையிலேயே இருக்கணும்னு பத்து நாளைக்கு முன்னயே முடிவு பண்ணிட்டாலும் அதை பதினொண்ணாம் தேதி ராத்திரிதான் எல்லோருக்கும் சொன்னேன். நான் முன்கூட்டியே சொன்னா நிறைய பேரு வெளியூர்கள்லருந்து பஸ், லாரி, வேன்னு கிளம்பி வருவாங்க. அப்படி வந்த பிறகு பாதுகாப்பா பத்திரமா திரும்பிப் போகணுமேன்னுதான், 11-ம் தேதி சொன்னேன். மற்றவங்களுக்கு தொந்தரவு கூடாது… ரசிகர்கள் பாதுகாப்பா இருக்கணும் என்பதால்தான் நான் முன்கூட்டி இதைச் சொல்லல. என் ரசிகர்கள் வெறியனுங்க… 100 பேர் ஆயிரம் பேருக்கு சமம்! யாருக்கும் சொல்லலியே… கூட்டம் வரலன்னா என்ன பண்றது, வெளிய மட்டமா பேசுவாங்களேன்னு சொன்னாங்க. பரவால்ல… நூறு பேர் இருந்தா கூட போதும். என் ரசிகர்கள் நூறு பேர் ஆயிரம் பேருக்கு சமம்… அவங்க பிரம்ம ராட்சசர்கள்.. வெறியனுங்க… அரசியல்… இங்க வந்திருப்பவர்கள் அரசியல் பற்றி பேசினார்கள். அரசியல் கடல் மாதிரி. அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இங்கு அ.தி.மு.க கூட்டணியில் உள்ள சரத்குமார், தி.மு.கவில் உள்ள சந்திரசேகர் எல்லாம் வந்திருக்கிறார்கள். போயஸ் கார்டனும் வந்திருக்கிறது. கோபாலபுரமும் இங்கதானிருக்கு. வாகை சந்திரசேகர் டாக்டர் கலைஞரிடம் போய் ஐயா நான் ரஜினி விழாவுக்கு போகணும்னு சொல்லி கேட்டிருந்தா போய் வாங்கன்னு அனுப்பியிருப்பார். அதே போல ஜெயலலிதாகிட்ட சரத்குமாரும் ராதாரவியும் கேட்டிருந்தாலும் அனுப்பியிருப்பார். காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் தமிழ் மக்களைச் சேர்ந்தவன். தமிழ் மக்கள்தான் என்னை வாழ வைத்த தெய்வங்கள். அவர்கள் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும். கோழையாக மட்டும் சாகமாட்டேன்… 1996ல் நடந்த அரசியல் நிகழ்வுகள் பற்றி எல்லாருக்கும் தெரியும். அதற்குப் பிறகு என் பெயரையோ, போட்டோவையோ ரசிகர்கள் பயன்படுத்தக் கூடாது என்று சொன்னேன். அப்போது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய அரசியல் தலைவர்கள், அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை, அவர்கள் எல்லாரும், ‘உங்க ஆதரவு யாருக்கு? நீங்க பிரசாரத்துக்கு கூட வர வேணாம். ஆதரவை மட்டும் தெரிவிச்சா போதும் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் எந்த பதிலும் சொல்லவில்லை. உடனே, நீங்கள் பிரச்சாரத்துக்குக் கூட வரவேண்டாம். ஆனால் இப்போது நீங்கள் உங்கள் நிலையை தெரிவிக்கவில்லை என்றால், உங்களை கோழையாக நினைத்து விடுவார்கள் என்றார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். பிச்சை எடுத்தாலும் எடுப்பேன். கோழையாக வாழ விரும்ப மாட்டேன். அதன் பிறகு ஆட்சியிலிருந்தவர்கள் நல்லது செய்தார்களா, கெட்டது செய்தார்களா என்றெல்லாம் பார்க்காமல், நான் முதலில் ஆதரித்து விட்டேன் என்பதற்காக, 5 வருடங்கள் அவர்களை தொடர்ந்து ஆதரித்தேன். கூட்டணி தர்மத்தை மதித்தேன். அதன் பிறகு நான் யாரையும் ஆதரிக்கவில்லை. என் அருமையான நண்பர் கலைஞர் – அவரை அருமை நண்பர் என்று கூப்பிட எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் அவர் என்னை நண்பர் என்று அழைப்பதால், நானும் அப்படியே குறிப்பிடுகிறேன்- நான் எப்போது சந்தித்தாலும் அரசியல் பேசமாட்டார். நானாக பேசினாலும் கூட, இல்லை தம்பி வேண்டாம் என்று மறுத்துவிடுவார். அதன் பிறகு அவரிடம் நான் அரசியல் பேசவே இல்லை. அதன் பிறகு ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது கூட நம்ம படம் தொடர்பாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது. அவர்களை கீழே தள்ள வேண்டும் என்று எதிர்க்கவில்லை. நாம் கோழைகள் அல்ல என்பதைக் காட்ட. அவர்கள் சொன்ன விஷயம் சரி. ஆனால் சொன்ன விதம் தவறு. அதை எதிர்க்கவே களமிறங்கினேன். அவர்கள் ஒழுங்கா, கரெக்டா, நியாயமா சொல்லலேன்னுதான் எதிர்த்தேன். அன்றைக்கே நான் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன். படங்களில் அன்று விட்ட சிகரெட்டை இன்றுவரை தொடவில்லை. வீம்புக்காக அதை படங்களில் செய்திருக்கலாம். ஆனால் சொன்ன விஷயம் நல்லது. அதனால் அதை மதித்துவிட்டுவிட்டேன். பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்… அரசியல் சாதாரண விஷயம் அல்ல. ரொம்ப ரொம்ப கஷ்டம். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காக, பொய்யான வாக்குறுதியை அளிக்க நான் விரும்பவில்லை. மாநில அரசியல் கட்சி தலைவர்கள் படும் கஷ்டங்களை அருகிலிருந்து பார்க்கிறேன். எந்த அரசியல் கட்சி தலைவரும் சந்தோஷமா.. நிம்மதியா இல்லீங்க. அரசியல் தலைவர்கள் நல்லவர்கள்தான்… அரசியல் தலைவர்கள் யாரும் ஜனங்களுக்கு கெட்டது செய்ய வேண்டும் என்று மனசார ஆசைப்படுவதில்லை. நல்லது செய்யத்தான் விரும்பி வருகிறார்கள். ஆனால் அவர்களால் செய்ய முடியாது. ‘சிஸ்டம் அப்படி இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நடக்கிறது. தயவு செய்து அரசியல் தலைவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். ஒரு கட்சியின் பலமே, அஸ்திவாரமே அதன் தொண்டர்கள்தான். தொண்டர்கள் சரியாக இருக்க வேண்டும். தங்கள் தலைவர்கள் மனநிம்மதியோடு இருந்து, நல்லது செய்ய பாடுபட வேண்டும். நேரம் காலம் கனிஞ்சா… ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் யார் தலைவராக வரவேண்டும் என்பதை நிர்ணயிக்க ஒரு சக்தி இருக்கிறது. நேரம், சூழல் நன்றாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். நேரமும் சூழலும் சந்தர்ப்பங்களும் சரியாக அமைந்தால்தான் அரசியலில் எல்லாம் நடக்கும். ஒருத்தர் வந்து தன்னுடைய அருமை பெருமைகளாலோ, பேச்சாலோ, உழைப்பாலோ ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது நடக்காது. நேரம்தான் அரசியல் மிக முக்கியமான விஷயம். இல்லாவிட்டால், காமராஜர் மாதிரி ஒரு தலைவர் தோற்றிருப்பாரா? யாராவது நினைச்சிப் பாத்திருப்பாங்களா? நேரம்தான் காலம்தான் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கிறது, என்றார் சூப்பர் ஸ்டார்.
‘கடல் படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்
92233b9b-f757-4b8c-991a-7defef6fc067_S_secvpf‘அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஒன்றாக அறிமுகமான பழைய நடிகர் கார்த்திக் மகன் கவுதமும், நடிகை ராதா மகள் துளசியும், மணிரத்னம் இயக்கும் ‘கடல் படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடலோர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்தது.
கவுதம், துளசி படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ரகசியமாக படப்பிடிப்பு நடந்து வந்தது.
 இருவரின் படங்களையும் பத்திரிகைகளில் வெளியிடக்கூடாது என்று மணிரத்னம் கண்டிப்பாக கூறினார். இதனால் இருவரும் போட்டோகிராபர்களிடம் முகத்தை காட்டுவதை தவிர்த்தனர். போனில் மட்டுமே பேட்டி அளித்து வந்தார்கள்.
 இந்த நிலையில் ‘கடல் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 17-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இவ்விழாவில் கவுதம், துளசி பங்கேற்க உள்ளனர். இதையடுத்து இருவரின் படங்களையும் மணிரத்னம் தற்போது முதல் தடவையாக வெளியிட்டு உள்ளார். ‘கடல் படத்தில் அர்ஜுன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இளையராஜாவின் 920-வது படம்!
13-illayaraja-56-300இசைஞானி இளையராஜாவின் 920வது படமாக வருகிறது நீதானே என் பொன்வசந்தம். இந்திய சினிமாவில் யாரும் தொடாத உச்சத்தைத் தொட்ட இசையமைப்பாளர் இளையராஜா. விருதுகளைத் தாண்டிய பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். எண்பதுகளிலேயே ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்த பெருமை அவருக்குண்டு. அவரது முதல்படம் அன்னக்கிளி. 100வது படம் மூடுபணி. 300வது படம் உதயகீதம். 400வது படம் நாயகன்…. இப்போது ஆயிரம் படங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார் இசைஞானி. இப்போது அவரது இசையில் வெளியாகும் நீதானே என் பொன்வசந்தம் அவரது 920வது படமாகும். எண்பதுகளில் ஒரே ஆண்டில் 50 படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த சாதனையை எந்த மொழியிலும் யாராலும் இதுவரை தாண்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் எண்ணிக்கை என்பதைத் தாண்டி, தனது அத்தனைப் படங்களிலும் ஏதாவது ஒரு விதத்தில் தன் முத்திரையைப் பதித்தவர் ராஜா என்றால் மிகையல்ல.