புரோகிதனை அழைத்து திருமணம் செய்து கொண்ட பின் விவாகரத்து வருவது ஏன்?

ஆண்_ பெண் காதல் அதிகரித்து வரும் கால கட்டம் இது. அலுவலகம், கல்லூரிகள் முடிந்தபின் கடற்கரை-யிலும் பூங்காக்களிலும் இணை இணையாக அமர்ந்து உரையாடி மகிழ்கின்றனர்.

திருமணப் பேச்சுகள் அவர்களிடம் முக்கியமாக தலை தூக்கி நிற்கிறது. வீட்டில் எதிர்ப்பு என்பதுதான் முக்கிய-மானதாகவும் இருக்கிறது.

இந்த மனநிலையைப் புரிந்து கொண்ட சில மூதாட்டிகள் இந்த இணையர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு வருகிறார்கள்.

கவலைப்படாதீங்க, உங்க கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். இரண்டு வருஷங்களில் குழந்தையும் பிறக்கும் உங்கள் முகராசி அப்படி! எதற்கும் இந்தக் கயிற்றைக் கையில் கட்டிக் கொள்ளுங்கள் நெனைச்சது நடக்கும் என்று இனிக்க, இனிக்க, வார்த்தைகளைக் கொட்டுகிறார்கள்.

சொல்லுபவரோ மூதாட்டி; சொல்லப்படுவதோ நாக்கில் தேன் தடவுவதுபோன்ற நான்கு நல்ல வார்த்தைகள்.

உச்சி குளிர்ந்து போகிறது. 
பாட்டி சொல்லுவது கண்டிப்பாக நடக்குமா?

நடப்பதாவது... இதுவரை நான் சொன்னது நடக்காமல் போனது கிடையாது என்னைப்பற்றி விசாரித்துப் பாருங்கள்

அவ்வளவுதான். பாட்டி சொல்லும் பணத்தைக் கொடுத்து கயிறுகளையும் வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

ஆமாம், இவர்கள் படித்தவர்கள்தானே - காதல் செய்யும் முன் ஜோதிடம் கேட்டா ஜோடி சேர்ந்தார்கள்?

பாட்டி எதை வைத்து அனுமானிக்கிறார்? அவர்களைப் பற்றி என்னதான் பாட்டிக்குத் தெரியும்? முன்பின் அறிந்தவரா?

அப்படியிருக்கும்போது காதல் ஜோடிகள் என்று யூகித்து அறிந்து அவர்களுக்கு முன் தோன்றி நான்கு வார்த்தைகளை நச்சென்று சொன்னவுடன் பாட்டி விரித்த வலையிலே வீழ்ந்து விடுகிறார்களே!

காதல் முறிவதாகவே வைத்துக் கொள்வோம். அந்தப் பாட்டியை எங்கே சென்று தேடுவது?

பகல் எல்லாம் பிச்சை எடுத்துவிட்டு, மாலை நேரங்களில் கடற்கரைகளில் ஜோடி சேருவோரிடம் தம் கை சரக்கை அவிழ்த்துக் கொட்டிப் பணம் பறிக்கும் இந்தப் படிக்காத பாட்டிகள் இந்தப் படித்த முட்டாள்களைவிட அறிவாளிகள் என்பதை ஒப்புக் கொள்ளத் தானே வேண்டும்!

காதல் செய்யும்போது ஜாதகம் _ கீதகம் எல்லாம் பார்ப்பதில்லை. ஜாதி மாறிக்கூட திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள்.

அந்தக் கல்யாணத்தை எப்படி நடத்துகிறார்கள்? புரோகிதனை அழைத்து நடத்துகிறார்கள்.

ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ள முன்வந்தபோது கோத்திரங்கள், சாத்திரங்கள் முன்னே வந்து நிற்பதில்லை. கல்யாணம் செய்யும்போது மட்டும் பார்ப்பான் வந்து விடுகிறானே அது எப்படி? புரோகிதனை அழைத்து, மந்திரங்களை ஓதித் திருமணம் செய்து கொண்ட பின் விவாகரத்து வருவது ஏன்?

புரோகிதனை அழைத்து மந்திரங்களைச் சொல்லச் செய்துதான் விவாஹ சுபமுகூர்த்தத்தை நடத்திக் கொண்டோம். ஆனாலும் எங்கள் வாழ்வில் முறிவு ஏற்பட்டு விட்டது என்று கூறி, அந்தப் புரோகிதனை நுகர்வோர் நீதிமன்றத்தில் நிறுத்தாதது ஏன்?

கேள்விகள் இருக்கின்றன; பதில் சொல்லத்தான் படித்தவர்களையும் காணோம்.

-- கருஞ்சட்டை "விடுதலை யில் எழுதிய கட்டுரை

உஷ்! பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க..

எந்த விசயத்தையும் யாரிடம் எதற்காக சொல்கிறோம் என்பது இருக்கிறது. காதலிப்பவர்களாகட்டும், திருமணமானவர்களாகட்டும் தங்களுக்குள் எந்த ஒரு ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இருப்பதால் பல பிரச்சனைகள் வரக்கூடும். குடும்ப வாழ்க்கையிலும் சில ஒளிவு மறைவுகள் இருந்தால்தான் சிக்கல்கள் இன்றி இருக்கும். காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் மனைவியானவர் தங்கள் கணவரிடம் சில விசயங்களை மறைக்கத்தான் வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். என்னென்ன விசயங்களை மறைக்கவேண்டும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். படியுங்களேன்.
பேஸ்புக் அக்கவுண்ட்
பேஸ்புக் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அந்த
பேஸ்புக்கின் மூலம் நிறைய பேர் நண்பர்கள் ஆவார்கள். எந்த ஒரு ஆணும் தன் துணைவிக்கு ஆண் நண்பர் இருப்பதையும், ஒரு பெண்ணும் தன் துணைவனுக்கு பெண் நண்பர் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆகவே தனது கணவருக்கு பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்டு மறைப்பதில் தவறில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
மெசேஜ் சாட்டிங்
நண்பர்களுடன் இணையதளத்திலோ, மொபைலிலோ சாட் பண்ணும் போது, அதைப் பற்றி தங்கள் வாழ்க்கைத்துணையிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை. ஏனெனில் இதுவே சில சமயங்களில் கணவரின் மனதில் தவறான எண்ணங்கள் தோன்ற வழிவகுக்கும். பின்னர் அதுவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆபத்தாகிவிடும். ஆகவே அதைப் பற்றி பேசாமல் இருந்தால் நலம்.
நண்பர்களின் போன் நம்பர்
 நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையை நம்பலாம், அதற்காக நண்பர்களின் மெபைல் நம்பர் தருவது சில சமயங்களில் ரொம்ப ரிஸ்க். ஏனென்றால் நண்பர்கள் விளையாட்டாக ஏதாவது பேச, சில சமயம் அது வினையாக மாறிவிடும். நாம எல்லாரையும் நம்பலாம், ஆனா கண்மூடித்தனமா நம்பக் கூடாது. இதுல ரொம்பவே கவனமா இருக்கணும்.
மறைத்த தகவல்கள்
தெரிந்தோ, தெரியாமலோ முதலில் நாம் செய்த தவறை பற்றி கணவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நீங்கள் அவர்களுக்கு உண்மையாக இருந்தால், இதைப் பற்றி சொல்லாமல் இருக்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம். மீறி கூறினால், வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும். ஆகவே இவற்றை பற்றி பகிர்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கையானது இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயங்களை மறைப்பதில் தவறில்லை. ஆகவே, மேலே சொன்ன எல்லாவற்றையும் கணவரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
குறிப்பு:கணவர்களே! அதற்காகப் பெண்களைக் குற்றம் கூறாதீர்கள்.