தமிழ்நாட்டின் சிறப்புகள் அறிந்து கொள்ள...


தமிழ்நாட்டின் சிறப்புகள் பல உள்ளன. அவற்றில் சில‌.

தமிழ்நாட்டில் பேசப்படும் தமிழ்மொழி உலகில் உள்ள பராம்பரிய மொழிகளில் ஒன்றாகும்.
தமிழ்நாடு பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடம் மகாராஷ்டிரா ஆகும்.
இந்திய தேசியக் கொடியைத் தனது முத்திரையில் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இந்தியாவில் கண்டறியப்பட்ட மொத்த கல்வெட்டுக்களில் 60 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கீழ்கண்ட இடங்கள் யுனெஸ்கோவால் பாராம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
      மகாபலிபுரம்
      தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
      கங்கை கொண்ட சோழபுரம் கோவில்
      தாரகாசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில்
      நீலகிரி மலை ரயில்
         மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
1806-ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் கலகம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் முதல் எதிர்ப்பு நிகழ்வாகும்.
தமிழ்நாடு காவல்துறையில் 12.5 சதவீதப் பெண்கள் பணிபுரிவதால் இந்தியாவில் அதிகப் பெண்களைக் கொண்ட காவல்துறையாக தமிழ்நாடு உள்ளது.
2000 ஆண்டுகள் பழமையான தமிழ் இலக்கியம் உலகில் மிகவும் தொன்மையானது.
இந்தியாவில் வாழை, மஞ்சள், மலர்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
பக்தி இயக்கம் தமிழ்நாட்டில் தோன்றி இந்தியாவின் மற்ற இடங்களுக்குப் பரவியது.
கபடி விளையாட்டு தமிழ்நாட்டில் தோன்றியது.
உடல் உறுப்புகளின் தானத்திலும் தமிழ்நாடு, இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.
சூரிய மின்னாற்றல், காற்று மின்னாற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு, இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் மொத்தம் 60 சதவீதம் தமிழ்நாட்டின் சென்னையில் நடைபெறுகிறது.
இந்தியாவின் பழமையான ஷாப்பிங் மால் சென்னையில் உள்ள ஸ்பென்சர் பிளாஸா ஆகும்.
சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவில் மிகப்பெரியது ஆகும்.
வண்டலூர் உயிரியல் பூங்கா இந்தியாவில் பரப்பரளவில் மிகப்பெரியது மற்றும் முதல் பொது விலங்குப் பூங்காவாகும்.
உலக சுகாதார நிறுவனம் அடையாறு புற்றுநோய் நிறுவனத்தை நாட்டின் உயர்தர நிறுவனமாக அறிவித்துள்ளது.
சென்னையின் கத்திப்பாறா சந்திப்பு ஆசியாவின் மிகப்பெரிய க்ளோவர்லீஃப் ஃப்ளையோவர் பாலம் ஆகும்.
மெரினா கடற்கரை நீளமான இயற்கையான நகர்புற கடற்கரை ஆகும்.
உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிக்கும் அமைப்பு தமிழ்நாட்டின் கமுதியில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு இந்தியாவில் அதிகளவு ஜனாதிபதிகளைக் கொடுத்துள்ளது. சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜேஅப்துல் கலாம்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் பழமையான நீர்பறவைகள் சரணாலயம் ஆகும்.
இந்தியாவில் உள்ள பூக்கும் தாவரங்களில் 24 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய ரோஜாத் தோட்டம் ஊட்டியில் உள்ளது. இங்கு 22000 வகையான பூக்கள் காணப்படுகின்றன.
முதல் மூன்று பாரத ரத்னா விருதுகளைப் பெற்றவர்கள் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். சர்.சி.வி.ராமன், ராஜாஜி, சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்.
உலகின் புகழ்பெற்ற கணிதவியலாளரான சீனிவாச ராமானுஜம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்.
1914-18-ல் நடைபெற்ற முதல் உலகப்போரில் சென்னை நகரம் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய அதிக வெளிநாட்டவர்களால் தாக்கப்பட்டது.
திருக்குறள் உலகில் அதிகளவு மொழி பெயர்க்கப்பட்ட மதசார்பில்லாத நூலாகும். இது உலகப் பொதுமறை என்று வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். மேலும் இது இந்தியாவின் இரண்டாவது பெரிய நீளமான பாலம் ஆகும்.
கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவில் உள்ள பழமையான தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்று. 1794-ல் கணக்கெடுப்பு பள்ளியாக ஆரம்பிக்கப்பட்ட இது 1859-ல் கல்லூரியாக மாற்றப்பட்டது.
சென்னை மாநகராட்சி தொடங்கப்பட்டு 365 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. இது லண்டனுக்கு அடுத்தபடியான உலகிலேயே இரண்டாவது பழமையான மாநகராட்சியாகும்.
சென்னை இந்தியாவின் சுகாதாரத் தலைநகராக விளங்குகிறது. சென்னை மருத்துவமனைகள் ஒவ்வொரு நாளும் 150 வெளிநாட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.
கோயமுத்தூரில் உள்ள சிறுவாணி ஆற்றுநீரானது உலகின் சுவைமிக்க நீராகும். சிறுவாணி என்பது பவானி ஆற்றின் கிளைநதியாகும்.
தமிழ்நாட்டின் சிறப்புகள் பற்றி அறிவோம். மற்றவர்களும் அறியும் வண்ணம் செய்வோம்.

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:26‏




தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

"சுமேரிய கணிதம்":

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.."-குறள்:392





உங்களுக்கு கணிதம் விருப் பம்மா? உங்கள் பதில் என்னவாக இருந்தாலும்,கணிதம் என்பது ஒரு சவால் விடுகிற பாடம்.5000 வருடங்களுக்கு
முன்,மெசொப்பொத்தேமியாவில் நாகரிகம் முளை விடும் போதே,கணிதத்தின் அடிப்படை கோட்பாடு அல்லது கரு வெளிவர தொடங்கிவிட்டது.இன்று நாம் எண்களை ஒரு பொருளின் விலைகளை குறித்து காட்ட,முகவரியை குறிக்க,தொலைபேசி பாவிக்க, மோட்டார் வண்டியை அடையாளப்படுத்த,ஒரு விளை யாட்டுக் குழுவின் வெவ்வேறு ஆட்டக்காரர்களை அறிய
பாவிக்கிறோம்.இன்று உலகம் முழுவதும் பொதுவாக பதின்மக் குறியீட்டு முறை அல்லது தசம எண் முறை [decimal number system] எனும் பத்தின் அடியை கொண்ட அராபிய இலக்கங்கள் பாவிக்கப்பட்டாலும்,பழங் காலத் தில் பல் வேறு எண் முறைகளும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்திய எண்ணுரு முறைமையின் மேற்கு நோக்கிய பரவலே இந்த அராபிய
இலக்கங்கள்/அராபிய எண்ணுரு முறைமை ஆகும். எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்த இலக்கங்களை அல்லது குறி யீடுகளை முதல் பாவித்த வர்களில் சுமேரியர்களும் ஒருவராவார்.சுமேரியர்கள் ஆறு குறியீடுகளை உருவாக்கினார்கள் [படம்:01] . ஆனால் அந்த குறியீடுகளை மிக கவனமாக பார்வை யிட்டால் அங்கு உண்மையில் இரு குறியீடுகள் [தக்கை யும் "U" வட்டமும் "O"] மட்டுமே இருப்பதை அறியலாம். அதாவது அந்த இரு குறியீடுகளும் ஒன்று சேர்க்கப் பட்டும் அதன் அளவை மாற்றியும் மற்ற குறியீடுகள் அமைக்கப்பட்டு உள்ளது தெரியவரும்.

இந்த சுமேரியன் எண் முறை பத்தை அடியாக கொண்ட தாகவும், அறுபதை அடியாக[sexgesimal,or base 60] கொண்ட தாகவும் உள்ளது மேலே காட்டப்பட்ட எண்களை தவிர வேறு எண்களை உண்டாக்க,இந்த குறியீடுகள் அதற்கு ஏற்றவாறு ஒருங்கிணைக்கப் படுகின்றன.உதாரணமாக,73 எண்ணை உருவாக்க, ஒரு பெரிய தக்கையும் ஒரு சிறிய வட்டமும் மூன்று சிறிய தக்கையும் பாவிக்கலாம் [படம்:02].பெரிய அலகு எப்பவும் இடது பக்கம் அமையும்.

இந்த சுமேரியன் எண் முறை முதன்மையாக அறுபதை அடியாகவும் துணையாக பத்தை அடியாகவும் கொண்டு உள்ளது.இது பண்டைய பபிலோனியருக்கு கொடுக்கப் பட்டு-பின் சிறிது மாற்றி அமைக்கப்பட்டு இன்றும் பாவிக்கப்படுகிறது.உதாரணமாக நேரத்தை அளக்க, கோணத்தை அளவிட மேலும் புவியியல் அச்சுத் தூரங் களை குறிப்பிட பாவிக்கப்படுகிறது.உதாரணமாக, நீங்கள் எப்பவாவது ஏன் ஒரு மணித்தியாலம் 60 நிமிடங் களையும் [மணித்துளிகளையும்] .ஏன் ஒரு நிமிடம் 60 வினாடிகளையும் கொண்டு உள்ளது என வியப்படைந்து உள்ளீர்களா? எப்பவாவது ஒரு முழு வட்டம் ஏன் 360 பாகைகளை கொண்டுள்ளது என சிந்தித்து உள்ளீர்களா? உண்மையில் சுமேரியர்களின் எண் முறை இன்னும் எமது நாளாந்த வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பத்தை அடியாக கொண்ட எண்களை மையமாக கொண்ட எங்களது சமுதாயம்,இந்த அறுபதை தேர்ந்து எடுத்ததை ஒரு விந்தையாகவே முதலில் பார்த்திருக்கும். ஆனால் இது உண்மையில் இயல்பானதும் நடை முறைச் சார்ந்ததும் ஆகும்.ஏனென்றால் 60 பல காரணிகளை கொண்டுள்ளது.ஒன்றிலிருந்து,மற்றொன்று உருவாவ தற்கு காரணமான விடயங்கள் அதன் காரணி ஆகும். உதாரணமாக பெருக்கல் கணக்கில்,15 என்ற எண் வருவதற்கு காரணமானது 5ம்,3ம் ஆகும்.எனவே,(5ம்,3ம்), 15 என்ற எண்ணின் காரணிகள் எனப்படும்.இதனால் சுமேரியர்கள் இலகுவாக பல பிரித்தல்களை கையாண் டார்கள்.இந்த 60,12 காரணிகளை கொண்டுள்ளது.அவை 1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, 30, 60 ஆகும் இதில் 2,3,5 பகா எண் ஆகும்.இது பல காரணிகளை கொண்டிருப்பதால் , அறுபதை அடியாக கொண்ட பல எண்களின் பின்னங்கள் எளிதாக்கப்படுகின்றன.அதுமட்டும் அல்ல ஒன்று தொடங்கி ஆறு வரை எல்லா எண்களாலும் பிரிக்கப்படும் மிகக் குறைந்த எண்ணும் 60 ஆகும்.

பின் ஒரு காலத்தில்,கி மு 2000 அளவில், மெசொப்பொத் தேமியா மக்கள் இந்த முறையை சிறிது மாற்றி,இப்ப நாம் பாவிக்கும் முறை போல,அந்த எண் இருக்கும் நிலையை பொறுத்து அதன் பெறுமானம் வரையறுக்கப் பட்டது.எமது தசம முறையில் நாம் எண்களை எழுதும் போது,ஒவ்வொரு குறியும் இருக்கும் இடம் முக்கிய மானது.உதாரணமாக 278 இல் 2 என்ற குறி 200 ஆகும். அது போல 7 என்பது 70 என்ற பெறுமானத்தையும் 8 என்பது, அதையே,அதாவது 8 ஐ குறிக்கிறது இங்கு இருக்கும் நிலையின் பெருமானம் பத்தை அடியாக கொண்டது.ஆகவே 278 இல் 2 இன் பெறுமானம் 2 x 10 x 10 ஆகும்.அப்படியே 7 என்பது 7x 10 ஆகவும் 8 என்பது 8 x 1 ஆகவும் உள்ளது.ஆகவே ஒவ்வொரு நிலைக்கும் எண்குறியீடு இடது பக்கம் ஆக அசையும் போது அது பத்தின் மடங்கால் கூடுகிறது.ஆனால் சுமேரியனும் அவனை தொடர்ந்து பபிலோனியனும் 60 ஐ அடியாக கொண்ட எண் முறையை பாவித்ததால்,அந்த எண் முறையில், எண்குறியீடு இடது பக்கம் ஆக அசையும் போது 60 இன் மடங்காக கூடும்.உதாரணமாக 4892 என்ற தசம முறை எண்,சுமேரியன் முறையில் கீழ் கண்டவாறு குறிக்கப் படும்.

60 x 60 10 x 60 23
= 3600 + 600 + 23
= 4223
[Y < <<YYY]

இது ஆறுக்கு பதிலாக இரண்டே இரண்டு முற்றிலும் வேறான குறியீடுக்கு குறைக்க வழி வகுத்தது."திராட்சை மதுரசக்கண்ணாடிக் குவளை" வடிவ சின்னம்-wine glass-like symbol-[Y] சுமேரியன் ஒன்றையும் கிடைநிலை "A" வடிவ சின்னம்-horizontal A symbol-[<] சுமேரியன் பத்தையும் குறித்தது.மேலும் ஒரு எண்ணில் அவை இருக்கும் நிலை அவைகளின் தொகையை மாற்றியது. உதாரணமாக எங்கள் நவீன முறையில்,"100" இல் இருக்கும் ஒன்றும் "10,000" இல் இருக்கும் ஒன்றும் வேறு வேறானவை.இந்த சுமேரியன் எண் முறையில் எண் ஒன்று, பத்தை அடியாக கொண்டது,அவை Y, YY, YYY, YYYY, ... YYYYYYYYY [1,2,3,4.....9] என இருக்கும். அப்படியே எண் பத்து, ஆறை அடியாக கொண்டது.அவை எண் <, <<, <<<, <<<<, <<<<< [10,20,30,40,50]]என இருக்கும்.இந்த எண் ஒன்றும் [Y] எண் பத்தும் [<],நாம் எப்படி தசம நவீன முறையில் ஒருங்கிணைகிறோமோ அப்படியே இங்கும் இணைக்கப்படுகிறது. உதாரணமாக நவீன முறை 23 ஐ சுமேரியன் முறையில் " <<YYY" இப்படி குறிக்கப்படு கிறது.அதாவது "Y <<YYY" [1 23] என்பது 60+ 23 ஐ அல்லது 83 ஐ குறித்துக்காட்டுகிறது.அதாவது நவீன முறை போன்றே மெசொப்பொத்தேமியா மக்கள் இந்த தங்களது புதிய "எண் இருக்கும் நிலை பொறுத்த"(Positional System) பெறுமான முறையை பாவித்தார்கள். ஆகவே 1, 60, 60 x 60 [3600],... என அதன் இருக்கும் நிலையின் பெறுமானம் இடது பக்கமாக 60 காரணியால் கூடிக்கொண்டு போகும்.எப்படி எமது தசம எண் முறையில் 2 என்பது தாம் இருக்கும் நிலையை பொறுத்து 2 அல்லது 20 அல்லது 200,அல்லது ... என மாறுமோ அப்படியே சுமேரியன் முறையிலும் 2 என்பது தாம் இருக்கும் நிலையை பொறுத்து 2 அல்லது 120(2 x 60) அல்லது 7200[2x60x60] அல்லது....என மாறும். 360 பாகை,ஒரு அடியும் அதன் 12 அங்குலமும்,ஒரு அலகாக டசன் என்ற அளவும் [பன்னிரண்டு கொண்ட அளவு] சுமேரியன் கணிதத்தின் தடம்களே.

அறுபதை அடியாக கொண்ட சுமேரிய/பாபிலோனியா எண் கணிதத்தில்,ஒரு முழுஎண்ணை பிரதி படுத்த,கடைசி இலக்கம் 1 தொடங்கி 59 வரை குறிக்கும் [படம் :03],அதற்கு முன்னையது அறுபதை[60] காரணியாக கொண்டதாக அமையும்,அதாவது,60 × n அங்கு,1 ≤ n ≤ 59 ஆக இருக்கும்,அப்படியே அது இடது பக்கம் அசைய அசைய 60x60xn [ 60^2 = 3600xn],60x60x60xn [60^3 = 216,000xn] ....என பெறுமானம் கூடிக் கொண்டு போகும்.மேலும் ஒன்றினதும் [1],அறுபத்தினதும்[60] குறியீடு ஒரே மாதிரியே இருக்கும். எனினும் பாபிலோனி யனுக்கு இந்த வித்தியாசம் தெரியும்.ஏனென்றால், அறுபது [60] இடது பக்கமும் ஒன்று [1] வலது பக்கமும் அமைவதால் ஆகும் [படம் :04].நாம் இனி இலக்க குறியீடுகளை ஒரு காற்புள்ளி யால் [கமாவால்] வேறுபடுத்தி காட்டுவோம். உதாரணமாக, 1,57,46,40 என்ற அறுபதை அடியாக கொண்ட சுமேரிய/பாபி லோனியா எண், 1 ×60^3 + 57 ×60^2 + 46 × 60 + 40 என்பது தசம எண் முறையில், 424000 குறிக்கும் [படம் :05].அப்படியே,5,220 ,062 என்ற தசம எண்,சுமேரிய எண் கணிதத்தில் /முறையில் ,<<YYYY < Y YY [படம் :06] இப்படி குறிக்கப்படும். அதே போல,4892 என்பது Y < <<YYY [60 x 60 10 x 60 23 = 3600 + 600 + 23 = 4223] என குறிக்கப்படும்.

சுமேரிய/பாபிலோனியா எண்களில் சுழியம் (பூஜ்யம்) இல்லாமல் போயினும்,அதற்கு பதிலாக முதலில் ஒரு காலியான இடம் அல்லது இடைவெளி பாவிக்கப்பட்டது [படம்:07].எனினும் பின்னர் ஒரு சிறப்புக் குறியீடு அவர்களால் பாவிக்கப்பட்டது [படம்:08] .



"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 06



இது வரை பாரம்பரியத்தை பற்றி பொதுவாகவும் மேலோட்டமாகவும் அதன் அறிமுகத்தை, உள்ளடக்கத்தை பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் சில முக்கிய தமிழர்களின் மரபையும் பாரம்பரியத்தையும் நான் சரி என நம்பும் அறிவியல் காரணங்களுடன் தர முயற்சிக்கிறேன். நான் இவ்வற்றை என்னால் முடிந்த அளவில் கவனமாக கையாண்டாலும், சிலவேளை தவிர்க்க முடியாத சில பிழைகள் மற்றும் குறைபாடுகள் [some errors and omissions] ஏற்படலாம். அதற்கு நான் இப்பவே வருத்தம் தெரிவிக்கிறேன். என்றாலும் விபரமாக நான் அவைகளை அலசமுன்பு, இன்னும் ஒன்றையும் சொல்ல வேண்டியுள்ளது. அதாவது பாரம்பரியம் எமக்கு எதை தரவல்லது? இது அதன் கருத்தின் படி, நீண்ட காலமாக ஒரு குறிப்பிட்ட குழு அல்லது குடும்பம் அல்லது சமுதாயம் முதலியன எப்படி சிந்தித்தனை, நடந்து கொண்டன அல்லது ஏதாவது செய்தனர் [a way of thinking, behaving, or doing something] என்பதை குறிக்கிறது எனலாம். அது அன்று அங்கு பரம்பரை பரம்பரையாக வேரூண்டி இருந்தது. ஆனால் இன்று புது வழியில், சிறந்த வழியில் நாம் ஒன்றை செய்யக் கூடியதாக இருக்கையில், அந்த பழம் வழியை ஏன் பின்பற்ற வேண்டும்? எப்படி நாம் இன்னும் பாரம்பரிய வழியில் ஒழுகினால் வளர அல்லது முன்னேற அல்லது அபிவிருத்தி அடைய முடியும்? உலகம் மாற்றம் அடைகிறது என்னவோ உண்மைதான், ஆனால், நாம் மனிதர்களாக இருப்பதற்கான சாரமான -எங்கள்
போராட்டங்கள், எங்கள் அச்சங்கள், எங்கள் தேவைகள் மற்றும் ஆசைகள் [our struggles, our fears, our needs and desires] - ஆகியவை, பெருபாலும்  மனித இயல்பை தீர்மானிக்கும் உள்ளார்ந்த பண்புகளால் [inherent characteristics] அப்படியே மாறாமல் இருக்கின்றன. -பாரம்பரியம் சில பண்புகளை, உதாரணமாக எம் மேலும் மற்றவர்கள் மேலும் ஒரு விழிப்புணர்வை, உடன் இருக்கும் உணர்வை, உறுதிப்பாட்டை [heightening our awareness of self and others, cultivating a sense of belonging and stability] எமக்கு ரகசியமாக நினைவூட்டுவதுடன் அது  நம் வாழ்விலும் சமுதாயத்திலும் ஒரு வழிகாட்டி சக்தியாகவும் இருக்கிறது. எனவே இந்த அர்த்தத்தில் பாரம்பரியம் எப்போதும் மேம்படுகிறது, வளர்கிறது எனலாம். இது எம்மை பார்த்து, என்னை பெறுங்கள், என்னை செம்மைப் படுத்துங்கள், என்னை மனிதத்தன்மையூட்டுங்கள் என்கிறது. ஆகவே இது தன் வளர்ச்சியை, மாற்றத்தை நிறுத்து அல்லது கேள்வி கேட்க வேண்டாம் என்று ஒரு பொழுதும் சொல்லவில்லை .

ஒருமுறை சீன யாத்ரிகர் ஹியூன்-ஸங் [Hiuen -Tsiang] என்பவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் [Harsha, c. 590–647 CE, also known as Harshavardhana] என்ற ஒருவன் பேரரசனாக இருந்தான். அந்த பேரரசன் தனது செல்வத்தை தனது மக்களுடன் பகிர்ந்து மகிழ்ந்து இருக்கும் அந்த மரபை கண்டு அவன் வியந்தான். அது போலவே தஞ்சாவூர் அரசன் வழிப்போக்கர்கள் மற்றும் யாத்திரீகர்கள் இளைப்பாறிச் செல்ல சத்திரம் [shelter] அமைக்கும் மரபில் புகழ் பெற்று திகழ்ந்தான். இது வறியவர்களையும் நோயாளிகளையும், தங்கள் கவனிப்பில் இருந்து இறந்தவர்களையும் கவனித்தது. ஆனால் இந்த மரபு பின்நாளில் ,காலனித்துவத்தின் வருகையால் வழக்கொழிந்து போய்விட்டது. தஞ்சை மாமன்னர் சரபோஜி [Raja Sarfoji],1801 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அளவில் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்களுக்கு ஒரு கடிதம் எழுதினான். அதில் தனது அரசுக்கு என்ன நடந்தாலும், இந்த விருந்தோம்பல் பாரம்பரியம் நிறுத்தப் படக் கூடாது என்று அந்த தமிழரின் பாரம்பரியத்தின் பெருமையை சுட்டிக் காட்டினான். ஆனாலும் வளங்கள் வீணாக பயன்படுகிறது என கூறி நிறுத்தி விட்டார்கள். ஒரு சிறந்த பாரம்பரியம் அங்கு இறந்து விட்டது. அப்படியான ஒரு பாரம்பரிய வாழ்க்கை முறை யாழ்ப்பாணத்திலும் முன்பு இருந்தது. சங்கடப் படலை என ஒரு வகையான வெளி வாசல் வேலியில் அமைக்கப்பட்ட முறை ஒன்று இருந்தது. நடை பயணமாக வரும் வழிப்போக்கர்களுக்குச்
சங்கடங்களை தீர்க்கும் முகமாக அவை அமைக்கப்பட்டதால் அவை சங்கடப் படலை என காரணப் பெயர் பெற்றிருக்கலாம். அதன் அமைப்பு முறை படலைக்கு நிழல் கொடுக்கும் வகையில் ஒரு கூரை அமைப்பு உயரத்திலும் பாதசாரிகள் இருந்தோ கிடந்தோ இளைப்பாறிப் போகும் வகையில் அமைக்கப்பட்ட மேடை கீழேயும் அமைந்திருக்கும். அருகில் மண்பானையில் குடி தண்ணீர் வைக்கப் பட்டு இருக்கும். இப்படி தமிழ் ஒரு காலத்தே தனக்கென தனி அடையாளம் கொண்டிருந்தது என்பது என்னவோ உண்மை தான். ஆனால் புராணங்கள் எனும் தொன்மங்கள் என்ற வடநாட்டு ஆரிய மரபுகள், முக்கியமாக  7 - 8 நூற்றாண்டளவில் தமிழகத்தில் கால் பதித்த பின், தூய தமிழ் மரபு மெல்ல மெல்ல ஒழிந்து கலப்பு மரபு வேரூன்றி விட்டது. சங்க காலத் தமிழகத்தில் மக்களுக்கும் அரசர்களுக்கும் இடையில் மக்களைப் புரிந்துகொண்டு புலவர்கள் பண்பாட்டு மையங்களாக இருந்தனர். அவர்கள் பாடல்களில் பழம் தமிழ்ப் பண்பாடு இன்று எமக்கு தெரிய வருகின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பது ஒரு பாடலின் கருத்து மட்டும் அல்ல, அதைப் பாடிய புலவர் உள்நாட்டு அமைப்பைப் பற்றிக் கூறிய கருத்தாகவும் நாம் எடுக்கலாம். மேலும் புறநானுறு 239  இல், நட்டோரை உயர்பு கூறினன் [நண்பர்களைப் புகழ்ந்து கூறினான்], வலியர் என வழிமொழியலன் [வலிமை யுடையவர்கள் என்பதால் ஒருவரிடம் பணிந்து பேசமாட்டான்], மெலியர் என மீக்கூறலன் [தம்மைவிட வலிமை குறைந்தவர்களிடம் தன்னைப் புகழ்ந்து பேசமாட்டான்], பிறரைத் தான் இரப்பு அறியலன்[பிறரிடம் ஒன்றை ஈயென்று இரப்பதை அறியாதவன்], இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் [தன்னிடம் இரப்பவர்களுக்கு
இல்லையென்று கொடுக்க மறுப்பதை அறியாதவன்], பசி தீர்த்தனன் [அவர்கள் பசியைத் தீர்த்தான், மயக்குடைய மொழி விடுத்தனன் [பிறரை மயக்கும் சொற்களைக் கூறுவதைத் தவிர்த்தான்], போன்ற வரிகள் அன்றைய தமிழர்கள் போற்றி புகழ்ந்த பாரம்பரியத்தை பறைசாற்றுகிறது. அந்த பாடலை முடிக்கும் பொழுது இப்படி அவன் எல்லா பாரம்பரியத்தையும் முழுமையாக செய்ததால், அவனை  புதைத்தாலும் சரி; அல்லது எரித்தாலும் சரி. எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கட்டும் என்று முடிக்கிறது. இனி நாம் சில தமிழரின் பாரம்பரியங்களை ஒன்று ஒன்றாக  விரிவாக பார்ப்போம்.
பகுதி: 07 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை சொடுக்கவும்
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]


ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினைச் சொடுக்கவும்.