மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்!!!


இராவணன் என்ற தீயவனிடமிருந்து தனது மனைவியை மீட்க அனைத்து ஆற்றலும் கைவரப்பெற்ற மனிதக் கடவுள் இராமன், ஹனுமான் என்ற குரங்குக்கடவுளிடம் கையேந்தி மனைவிப் பிச்சை கேட்டான்.
குரங்குக் கடவுள் ஹனுமான் மனிதக் கடவுள் இராமனின் மனைவியை மீட்டுத்தரும் மகத்தான சாதனையைச் சாதித்திட இசைகின்றான்.
ஆனால் ஒரு நிபந்தனையை விதிக்கின்றான். தான் மனைவியை மீட்டுத்தரும் இந்தச் சாதனையைத் துவங்குமுன் கடவுள் இராமன், குரங்குக் கடவுள் ஹனுமானின் சகோரதரனை கொலை செய்திட உதவி செய்திட வேண்டும்.
இப்படி சகோதர கொலையை கைமாறாகக் கேட்கின்றான் ஒரு கடவுள் இன்னொரு கடவுளிடம்.
கடலுக்குக் குறுக்கே பாலங்கட்டி கடலைக் கடந்து தனது சொந்த மனைவியை மீட்க கடவுள் இராமணனுக்கு 12 ஆண்டுகள் ஆயின.
ஆனால் இந்தக் கடவுளின் மனைவியை கடத்தி செல்ல தீயவன் இராவணனுக்கு ஒரே நாள் தான் தேவைப்பட்டது.
சொல்லுங்கள் இதில் யார் ஆற்றல் மிக்கவன்? கடவுள் இராமனா? தீயவன் இராவணனா?
ஹனுமான் மலைகளைத் தூக்கிக் கொண்டு பறந்து சென்றிடும் ஆற்றல் நிறைந்தவன் எனப் பேசப்படுகின்றது.
இது உண்மையானால் அவன் இராமனையே தூக்கிக் கொண்டு லங்காபுரத்திற்குப் பறந்திருக்கலாம்.
இதன் மூலம் அவர்கள் சீதையை வெகு சீக்கிரமாகவே மீட்டிருக்கலாம்.
ஹனுமான் இராமனுக்கு உதவி செய்வதற்கு முன்னால் இராமனைக் கொண்டு தனது சசோதரனை கொலை செய்தான்.
பின்னால் இருந்து அம்பெய்துதான் ஹனுமானின் உடன் பிறப்பை வீழ்த்தினான் இராமன்.
இராமன் உண்மையிலேயே கடவுளாக இருந்தால் இந்த அற்பச் செயலைச் செய்திருப்பானா?.நன்றி சுடர் 
----------------------------------பரந்தாமனின் இராமாயணம் ஆய்வு தொடரும்................................

1 comments:

  1. மன்றாடியதுமட்டுமல்ல செய்தது அனைத்தும் ஈனச்செயலே

    ReplyDelete