தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி-10


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மதுரை ஆதீனத்தின்[ஆதினத்தின்அதிகாரப்பூர்வமான ஆங்கில கணினி இணையத்தில்,ஆதீனத்திற்கு [ஆதினத்திற்குஇன்னும் ஒருமுக்கிய கருத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்.அதுஎமக்கு ஒரு வியப்பையேகொடுக்கிறது.மேலும் Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary யில்,அதீனம் என்பதற்கு: s. [commonly ஆதினம்.] Propriety, the relation which property bears to the owner, right of possession, உரித்து. (p.) 2. Dependence,சார்பு.என்று கொடுக்கப்பட்டுள்ளது அதாவது அதீனம் என்பதைஆதினம் எனவும் பொதுவாக குறிக்கலாம் என பொருள்படுகிறது.இந்த அடிப்படையில் ஆதினம் என்பதை மேலும்ஆதி+இனம் என பிரித்து பார்த்து இந்த கணினி இணையம்  நாகரிகம்முதல் முறையாக குடியேறிய இடம் ஆதினம் என்கிறது.அதாவதுஆதினம் என்னும் சொல் பண்டைய சமூகம் அல்லது குடியேற்றத்தைகுறிக்கிறது என்கிறது.அது மதுரையில் உள்ளது.ஆகவே அந்தபண்டைய குடியேற்றம் முதல் முறையாக அங்கு நடைபெற்றதுஎன்கிறது.அதாவது மதுரை ஆதினம் ஒரு
பண்டைக்காலத்திய புராதன[மூலநாகரிகம்என்கிறது.ஆகவே மதுரை ஆதினம் ஒருமறுக்கமுடியாத மிக பண்டைய மனிதநாகரிகத்தின் குடியேற்றம் என்கிறது.இதன்தோற்றுவாயும் காலமும் பதியப்பட்ட எல்லாசரித்திர காலத்தையும் அதற்கு முந்தியபதியப்படாத காலத்தையும் கடந்தது என்கிறது.அதாவது  இதன்சரித்திரம் இரண்டாக உள்ளது.ஒன்று பதியப்பட்ட வரலாறு .இது கிபி 700 அளவில் திருஞானசம்பந்தருடன் தொடங்குகிறது.மற்றதுஅதற்கு முந்தியது.


நாம் முன்பு எடுத்து காட்டியவாறு,சங்க காலப்பாண்டிய அரசின் தலை நகரமாக இருந்தகொற்கையில் இருந்து 15 கி,மீட்டார் தூரத்தில்அமைந்த ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டஅகழ்வு ஆராச்சியில் குறைந்தது கி மு 2000ஆண்டுகளில் இருந்து அங்கு ஒரு பண்டையதமிழர் நாகரிகம் இருந்ததுஉறுதிப்படுத்தப்பட்டது.மேலும் பாண்டிய என்ற சொல் ஒருபண்டைய அல்லது பழைய நாட்டை குறிப்பதாகஅறிகிறோம்.கலித்தொகை என்ற சங்க பாடல் பாண்டிய சேரமன்னர்கள் 10,000 ஆண்டுகள் ஆண்ட  குமரி கண்டம் என்ற ஒருநிலப்பரப்பை குறிக்கிறது.அது கடலில் மூழ்க,இன்றைய தமிழகத்தில்முதலில் கொற்கையையும் பின்பு மதுரையையும் தலை நகராக 
கொண்டு அவர்கள் குறைந்தது கி மு 600ஆண்டுகளில் இருந்து கி பி 1700 ஆண்டுவரைஆண்டார்கள் என இலக்கிய ஆதாரங்களைமுன் வைத்து ஒரு கருத்தும் பொதுவாகஉண்டு.அது மட்டும் அல்ல பாண்டியமன்னர்களின் ஆதரவுடன் தமிழ் சங்கம் மூன்றுகால கட்டத்தில் செழிப்பாக வளர்ந்தது என அறிகிறோம்முதலாவது[தலைச்சங்கம்பழைய மதுரையிலும்[கடல் கொண்டதென்மதுரையிலும்இரண்டாவது[இடைச்சங்கம்கபாடபுரத்திலும்மூன்றாவது தற்கால மதுரையிலும் இருந்ததாக இலக்கிய குறிப்புகள்உண்டு.ஆனால் மூன்றாவது அல்லது கடைச் சங்கத்திற்கு மட்டுமேவரலாற்று குறிப்புகளும் உண்டு.அதாவது,இதில் முதல் இரண்டும்கடலால் மூழ்கடிக்கப்பட்டது என நம்பப்படும் குமரி கண்டத்தில்இருந்ததாக இலக்கிய குறிப்புகள் மட்டுமே உண்டு.மேலும் இன்னும்ஒரு குறிப்பு சிந்து சம வெளி நாகரிகம் அழிவிற்கு உட்பட்டபோது,அங்கு இருந்த தமிழர்/திராவிடர் அதன் பின் அங்கிருந்து புலம்பெயர்ந்து  தென் இந்தியா வந்து குடியேறியதாக சொல்கிறது .அதுமட்டும் அல்ல இன்னும் ஒரு சாரார்,சுமேரியாவில் இருந்து சிந்து சமவெளிக்கு இடம் பெயர்ந்த சுமேரிய தமிழரே இவர்கள் என்கிறார்கள்.எப்படியாயினும் அவர்கள் அங்கு மதுரையில்  ஆதி காலத்திலேயே3000/4000 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறினவர்கள் என்பதுமட்டும் உண்மைமேலும் மகாவம்ச என்ற பாளி மொழி  தொடர்கதை கி மு 543 அளவில் இலங்கை தீவின் அரசனான விஜயன் தென்மதுரை பாண்டிய மன்னனின் மகளை கல்யாணம் செய்தான் எனவும்அதன் பின் ஒவ்வொரு வருடமும் பாண்டிய மன்னனுக்குஉயர்தரமான பரிசுகள் அனுப்பினான் எனவும் குறிக்கிறதுஅதுமட்டும் அல்ல,கிரேக்கப் பயணியும்புவியியலாளருமானமெகஸ்தெனஸ் (கிமு 350 - கிமு 290) பாண்டிய பேரரசைகுறிப்பிட்டுள்ளார்.

பண்டைய மதுரை நகரத்தின் பெருமையை புகழ் பாடும் 2700-2000ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க பாடல்கள் சில கிழேதரப்பட்டுள்ளன
"வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்;"
[புறநானுறு 32]
வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும்மூங்கில் போன்றதோளும்ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும்பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான்என்கிறார்.

"தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண் குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலை பெற்ற தாங்குஅரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று
[சிறுபாணாற்றுப்படை:62-67]

அலைகடலை எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்குஅரசனாகிய
பாண்டியன்தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும்பாதுகாப்பவன்பாண்டியர்கள் மரபில் வந்தவன்பகைவரை வென்றுஅவர் நாட்டைத் தனதாக்கி முத்துமாலை சூட்டப்பெற்றவெண்கொற்றக் குடையும்கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும்அணிந்தவன்விரைந்து செல்லும் தேர்ப்படையினை உடையவன்.அப்பாண்டிய மன்னனின்தமிழ்மொழி நிலைபெற்றபெருமையினையும்மகிழ்ச்சியான தெருக்களையும் உடையமதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும்,அதாஅன்று – அது மட்டும் இல்லை என்கிறார்.

மழைகொளக் குறையாதுபுனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாதுதரத்தர மிகாது.
[மதுரைக் காஞ்சி/Mathuraikkanci ]


சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார்
மூலம் அறிய முடிகிறதுபகல் நேரக்கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவுநேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் -இரவுஅல்லும் பகலும்பற்றியும்விளக்குகிறார்கடல் நீர் ஆவியாகிமேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை.ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கிவழிவதுமில்லைஅது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களைவாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லைபலஇடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக்கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லைஎன்கிறார்.

பகுதி 11 / 01 வாசிக்க கீழே தரப்படட தலைப்பினை அழுத்தவும்..

Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:01

Theebam.com: தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] பகுதி :11.

🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺🔺

0 comments:

Post a Comment