கர்மவினை மீது பழி போடாதீர்கள்!!!


என்னிடம் பலர் கேட்கின்ற கேள்வி இது."சற்குரு!விபத்துக்கள்  ஏன்  நிகழ்கின்றன?தொழில்  நுட்ப வளர்ச்சிகாரணமா?அல்லது கர்மவினைகள் காரணமா?அவர்களுக்கு எனது பதில் "மோசமாக ஓட்டும் மனிதர்களேகாரணம்.மோசமான ஓட்டம் மோசமான செயல் தானே!
உடனே அவர்கள் கேட்பார்கள்,"ஆனால் அடிபட்டுஇறந்தவர் நடந்து தானே போய்க் கொண்டு இருந்தார்.
ஆம்.ஆனால் கர்மவினை என்றால் நீங்கள் செய்தசெயலாக மட்டும் இருக்க வேண்டியதில்லை.உங்களைச்சுற்றி நிகழ்வதாகக் கூட இருக்கலாம்.
"நான் எங்கள் வீட்டில்  சரியாகத் தானே இருக்கிறேன்.விதி முறைகளைப்பின்பற்றுகிறேன்."என்று நீங்கள் சொல்லலாம்.
ஆனால் உங்கள் வீட்டில் வசிப்பவர் வேறு  விதமாக வாழ்ந்தால் அந்தப்பாதிப்பு  உங்களுக்கும் வரும் தானே.
உங்களைப் படைத்தவர் அறிவைக் கொடுத்ததன் காரணம்,அதை உறைந்துபோக விடுவதற்காக அல்ல.உரிய நேரத்தில் பயன் படுத்துவதற்காகவே!
மனிதர் தங்கள் மூளையின்   12 % மட்டும் தான் பயன்படுத்துவதாக மருத்துவநிபுணர்கள் சொல்கிறார்கள்.அப்படியானால் மூளையின் பெரும் பகுதியைஉறைய விட்டிருப்பதாக அர்த்தம்.அப்படி உறைய விட்டிருப்பதன்காரணங்களில் ஒன்று வாழ்க்கை குறித்து உங்களுக்கு இருக்கும்மூடத்தனமான அபிப்பிராயங்கள் தான்.அவற்றைப் புறந்தள்ளுவீர்கள்என்றால் உங்கள் அறிவு துடிப்போடும்,விழிபோடும் இயங்கத் தொடங்கும்.
எப்போதும் எல்லாவற்றுக்கும் தயாராக ஏதாவது சில காரணங்கள்வைத்திருப்பதாலேயே உங்கள் மூளையைத்,தூங்கவிட்டு அதன் 88 % அளவைஉறையவிட்டு மனிதனாக பரிணாமம் கொள்வதனை விரயமாக்குகிறீர்கள்.எம் மூளை இந்த நிலைக்கு உருவாக பல இலட்சம் ஆண்டுகள் ஆயின.ஆனால் மனிதன் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.மூடநம்பிக்கைகளால் அதனை சிதைக்காமல் அடுத்து வரும்தலைமுறைகளுக்காக ஆவது உங்கள் மூளையினை பாதுகாத்துவைப்பீர்களா?
                ……………………………………………………………………சற்குரு வாசுதேவ்

0 comments:

Post a Comment