ஜோதிகாவின் ’36 வயதினிலே’ படக்கதை!/பாடல்கள் video

கேரளாவில் வெற்றிபெற்றமலையாளப்படங்கள்  தமிழில்  மறுஆக்கம் செய்யப்படும்போது, அவை படுதோல்வி அடைகின்றன என்பது தமிழ் திரையுலகின் சமீபத்திய வரலாறு.
அதுபோல், ஹீரோயினை முதன்மைப்படுத்தும் கதைகளை தமிழர்கள் வீட்டில் அமர்ந்தபடியே தொலைக்காட்சித் தொடர்களாக இலவசமாக பார்ப்பார்களே தவிர, திரையரங்குக்குச் சென்று காசு கொடுத்து பார்ப்பதில்லை என்பதும்கூட தமிழ் திரையுலகின் சமீபத்திய வரலாறுதான்.
இது புரியாமல் தயாரிக்கப்படும் படம் தான் 36 வயதினிலே.
ஆடிய கால்கள் சும்மா இருக்காது என்ற சொலவடைக்கு ஏற்ப, நடிப்புக்கு முழுக்குப் போட்டு, நடிகர் சூர்யாவை மணந்து, 2 குழந்தைகளுக்குத் தாயான ஜோதிகா, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க ஆசைப்பட்டு, இப்படத்தில் நாயகியாக ரீ-எண்ட்ரி ஆகிறார்.
கடந்த வருடம் மே மாதம் கேரளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹவ் ஓல்டு ஆர் யூ என்ற மலையாளப் படம்தான், சிற்சில மாற்றங்களுடன் தமிழில் 36 வயதினிலே படமாக உருவாகி வருகிறது. இத்தமிழ் படத்தின் கதை என்பதாக சமூகவலைத் தளங்களில் சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றின்படி பார்த்தால், இது முழுக்க முழுக்க ஹீரோயின் சப்ஜெக்ட். இதன் கதை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி தொலைக்காட்சித் தொடருக்கான குடும்பக் கதை பகுதி. இரண்டாம் பகுதி எல்லோராலும் போர் என்று கருதப்படும் வயலும் வாழ்வும் தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்ற பகுதி. மூன்றாம் பகுதி மீண்டும் தொலைக்காட்சித் தொடருக்கான கதை பகுதி. இனி இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
36 வயதாகும் ஜோதிகா தாலுகா ஆபீசில் கிளார்க்காக கடுமையாக வேலை பார்க்கிறார். வீட்டில் குடும்பத் தலைவியாக பொறுப்புகளைச் சுமக்கிறார். அவரது கணவர் ரகுமான் மத்திய அரசு ஊழியர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். ரகுமானுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி அங்கு குடும்பத்துடன் செட்டிலாக வேண்டும் என்பது லட்சியம். ரகுமானின் முயற்சியால் அவருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கிறது. குடும்பத்தோடு வெளிநாடு செல்ல திட்டமிடும்போது ஜோதிகாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட ரகுமான், மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார். தனித்து விடப்படும் ஜோதிகா மன உளைச்சலுக்கு ஆளாகிறார். படிக்கிற காலத்தில் கனவுகளோடும், லட்சியங்களோடும் இருந்த ஜோதிகா இப்போது
சுமைதாங்கியாக வாழ்ந்த வாழ்க்கையையும் இழந்து நிற்பது வெறுமையை ஏற்படுத்துகிறது. இது படத்தின் முதல் பகுதி.
வாழ்க்கையில் பிடிப்பை இழந்து நிற்கும் ஜோதிகா தன் வீட்டு மாடியில் போட்டிருந்த காய்கறி தோட்டத்தை அழிக்க நினைக்கிறார். அதனால் அதில் இருந்த காய்கறிகளை பறித்து வேலைக்காரியிடம் கொடுக்கிறார். வேலைக்காரி அந்த காய்கறிகளை இன்னொரு பணக்காரர் வீட்டில் விற்கிறார்இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்ட அந்த காய்கறிகளின் சுவை, அந்த பணக்காரரை ஆச்சரியப்படுத்துகிறது. அவர் ஜோதிகாவை சந்தித்து பேசுகிறார். இதுபோல நிறைய உற்பத்தி செய்து தாருங்கள். நான் விற்பனை செய்து தருகிறேன் என்கிறார். அதற்கு ஜோதிகாவின் பள்ளிக்கால தோழி ஒருவரும் உதவுகிறார். இதனால் ஜோதிகா காய்கறி விவசாயத்தில் பல புதுமைகளை புகுத்தி புகழ் பெறுகிறார். மாநில அரசு அவரை விவசாய ஆலோசகராக நியமிக்கிறது. ஜனாதிபதி விருது கொடுத்து கவுரவிக்கிறார். தன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறி இருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் ஜோதிகா. இது படத்தின் இரண்டாம் பகுதி.
ஜோதிகாவின் வளர்ச்சி பற்றி கேள்விப்பட்ட கணவர் ரகுமான், மகளுடன் இந்தியா திரும்புகிறார். மனைவியின் வளர்ச்சியை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பது படத்தின் மூன்றாவது பகுதி.
கதை எப்படி இருக்கு? தேறுமா?.பொறுத்திருந்து பார்ப்போம்.
பாடல்கள் கேட்க கீழே செல்லுங்கள்-

0 comments:

Post a Comment