சிரிக்க..... சில நிமிடம்....

நகைச்சுவை=ஜோக்ஸ்



மாமனார்தானே

கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.

 

மனைவி :– என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்கயாருங்க இது?.

 

கணவன் (கடுப்பை அடக்கியபடி)-: என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்….!!!!!

 🤣🤣🤣🤣🤣


குறியா இருக்கே

ரமணன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன்

 

வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்..!

 🤣🤣🤣🤣🤣

 

டேக் யுவர் சீட்

இண்டர்வியூவில் அதிகாரி : என்னப்பா! நாற்காலியை எடுத்துக்கிட்டுப் போறே?

 

வேலு : நீங்கதானே சார், டேக் யுவர் சீட்னு சொன்னீங்க!

 🤣🤣🤣🤣🤣

 

ஜவுளிக் கடையில…

ரமனன் : சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவி இன்னும் வீடு வரலை ..

 

போலீஸ் : கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலயும் தேடிப் பார்க்கச் சொல்றேன்.

 🤣🤣🤣🤣🤣

 

லுங்கி

ஆசிரியர் : ஷாஜகான் என்ன கட்டினார்?

 

மாணவன் : லுங்கி கட்டினார்.

ஆசிரியர் : !!

 🤣🤣🤣🤣🤣

 

தேவை இல்லாதது..

ஒருவர் : உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.

 

மற்றொருவர் : ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.

 🤣🤣🤣🤣🤣

 

மெய் மறந்துடுவான்

கோபு : உங்க பையன் கோவிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?

 

பாபு : கோவிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்.

 🤣🤣🤣🤣🤣

 

நினைவில் இருக்கும்

மனைவி : நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க.

 

கணவன் : எனக்கு மறந்து போச்சு.

 

மனைவி : இது கூடவா ?

 

கணவன் : நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

 🤣🤣🤣🤣🤣

 

நல்ல சம்பளம்

இன்ஸ்பெக்டர் : கொள்ளைக்கும்பல்ல டிரைவரா நடிச்சு தகவல்களை அனுப்பச் சொன்னா என்ன 6 மாசமா ஒரு தகவலும் உங்கிட்டேர்ந்து வரவே இல்ல?

 

போலிஸ் : இங்க எனக்கு நல்ல சம்பளம் கொடுத்து வீடெல்லாம் குடுத்து பாத்துக்கறாங்க அய்யா.

 🤣🤣🤣🤣🤣

 

 

என்னை மாவாட்ட..

பாக்கி : என் மனைவியோடு ஹொட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. .

 

ரமணன் : என்னாச்சு ?

 

பாக்கி : காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா.

 🤣🤣🤣🤣🤣

 

பட்டிணி

மனைவி : உங்க அம்மாவுக்கு சப்பாத்தி போட்டா பிடிக்கல இட்லி தோசை போட்டா பிடிக்கல உப்புமா போட்டா பிடிக்கல. . .

 

கணவன் : வேற என்னதான் போட்ட?

 

மனைவி : பேசாம பட்டிணி போட்டேன்.

 🤣🤣🤣🤣🤣

 

இனிமே வராதே..

மனைவி : வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?

 

கணவன் : அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?

 

மனைவி : இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

 🤣🤣🤣🤣🤣

 

நாயெல்லாம்…..

ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.

 

முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?

 🤣🤣🤣🤣🤣

 

காளி….காலி…

வேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா..

 

பாக்கி : நீ என்னாவே....?

 

வேலு : காலியாயிருவேன்.

 🤣🤣🤣🤣🤣

 

நல்லவரா…

நிருபர் : உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

 

நடிகை : நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

 🤣🤣🤣🤣🤣

 

முடியலை ….

வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..

 

ரமனன் : ஏன் .. ..

 

வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..

 🤣🤣🤣🤣🤣

 

எந்தத் தொகுதி?

""நம்ம தொகுதி எம்.எல்.. ஒரே கேள்வியிலேயே சட்டமன்றத்தையே திக்குமுக்காட வைச்சுட்டாராம்''

 

 ""அப்படியா? அப்படி என்ன கேட்டார்?''

 

 ""நான் எந்தத் தொகுதி எம்.எல்..ன்னு கேட்டாராம்''

 🤣🤣🤣🤣🤣

 

எதுக்கு கண்டிச்சீங்க?

 வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?

 

 ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!

 🤣🤣🤣🤣🤣

 

போலி டாக்டர்

 ""அவர் போலி டாக்டர்தான்னு எப்பிடிக் கண்டுபிடிச்சே?''

 

 ""கால் பாதத்துல ஆணியிருக்குன்னு அவர்ட்ட போனா... கால் இன்ச் ஆணியா? அரை இன்ச் ஆணியான்னு கேக்கிறார்... அதை வச்சுத்தான்''

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment