சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க:


 சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க:
பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மக்கள் பயப்படுகின்றனர். வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்னைகள் வாட்டுகிறது. இது போன்ற சங்கடங்களில் இருந்து காத்துக் கொள்ள ஆலோசனை சொல்கிறார் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.
  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.
உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாட்டு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்னைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம். நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
 பாதுகாப்பு முறை: வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆண்கள் வெளியில் செல்லும் போது முழுக்கை சட்டை, தொப்பி அணியலாம். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம். பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம். வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.

தொழில்நுட்பம்



கொசுக்களை ஒழிக்க வரும் லேசர்!:வாஷிங்டன்: கொசுக்களை லேசர் மூலம் ஒழிக்கும் சாதனத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.

ஃபோடானிக் ஃபென்ஸ் என்றழைக்கப்படும் இந்த சாதனத்தை வாஷிங்டனில் உள்ள இன்டெலக்சுவல் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இதைசுவற்றிலோ அல்லது வேலிகளிலோ பொருத்தி விட்டால் அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள், கொசுக்களை கண்டுபிடித்து 'எரித்துவிடும்'.
இந்த லேசர் சாதனம் கொசுக்களை மட்டுமே அடையாளம் கண்டு அழிக்கும். மற்ற பட்டாம்பூச்சி உள்ளிட்ட மென்மையான பூச்சிகளை தொந்தரவு செய்யாது.
மேலும், இந்த சாதனத்தின் மூலம் கொசுக்களிலேயே ஆண், பெண் இனத்தையும் தனியாக பிரித்து அறியலாம். மனிதர்களை கடிப்பது பெண் கொசுக்கள் என்பதால் அவற்றை மட்டும் குறிவைத்து ஒழிக்கவும் இயலும். (ஒவ்வொரு பூச்சியின் இறக்கை அசைவிலும் உள்ள வி்த்தியாசம் உண்டு. அதிலும் ஆண்-பெண் பூச்சிகளின் இறக்கை அசைவிலும் கூட வேறுபாடு உண்டு. அதை வைத்து பெண் கொசுவை மட்டும் தனியே பிரித்து இந்த லேசர் பாயும் வகையில் வடிவமைத்திருக்கிறார்கள்)
சர்வேதேச அளிவில் மலேரியா நோய் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கொசுக்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் விஞ்ஞானிகள் இந்த புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.

சினிமா:


வைகாசி மாதத்தில் வெளிவந்த திரைப்படங்கள்.
2012-05-14 கலகலப்பு
நடிகர்கள்: - விமல், சிவா, சந்தானம், அஞ்சலி.
கதை: - இழந்த ஹோட்டலை மீட்டு,காதலை கெட்டியாக்கிய ஒரு நாயகனின் கதை. 
கருத்து: - நல்ல காமெடி படம்தான்.
புள்ளிகள்:-55
2012-05-06 வழக்கு எண் 18/9
நடிகர்கள்: - ஸ்ரீ, ஊர்மிளா மஹந்தா, மனிஷா யாதவ்.
கதை: - வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் படத்தின் கரு
கருத்து: - ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி
புள்ளிகள்:-60
2012-04-15 ஒரு கல் ஒரு கண்ணாடி
நடிகர்கள்: - உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா.
கதை: - அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை.
கருத்து: - குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை
புள்ளிகள்:-60


திரையுள்:-
விருது, பாராட்டு மழையில் ‘தூங்கா நகரம்’
நல்ல மனசு, கெட்ட பழக்க வழக்கங்கள்என மதுரையில் வாழும் நான்கு நண்பர்களின் கதையையும், காதலையும் நேர்த்தியாக சொல்லிய படம் தூங்கா நகரம். இப்படத்தில் விமல், பரணி, நிஷாந்த், கௌரவ், அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌரவ்-க்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இப்படத்துக்கு நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைத்தது. மேலும் துபாயிலும் விருதுகள் வாங்கியுள்ளது. இதனால் இயக்குனர் கௌரவ் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
இப்படத்தை பார்த்த வெளிநாட்டினர் உள்ளூர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் தரமான படம் என பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் இவர் அடுத்துசிகரம் தொடுஎன்ற புதிய படத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். தந்தை-மகன் உறவு குறித்து ஆழமாக சொல்லக்கூடிய ஆக்ஷன், திரில்லர் படமாக உருவாகிறது. சத்யஜோதி தியாகராஜன் தயாரிக்கிறார்.
கடல் ஷூட்டிங்கில் குமுறி, குமுறி அழுத கார்த்திக் மகன்
மணிரத்னத்தின் கடல் பட ஹீரோ கௌதம் குமுறி, குமுறி அழுது படக்குழுவை கலங்கடித்துவிட்டாராம்.
மணிரத்னத்தின் கடல் படம் மூலம் ஹீரோவாகிறார் நவரச நாயகன் கார்த்திக் மகன் கௌதம். படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாடு என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
படத்தில் நாயகன் அனாதை ஆனாலும் ஊர் மக்களின் உள்ளங்களில் வாழ்பவன். நாயகனை எடுத்து வளர்த்த பொன்வண்ணன் ஒரு நாள் அவர் அனாதை என்ற உண்மையை உடைக்கிறார். இதைக் கேட்ட நாயகன் குமுறி, குமுறி அழ வேண்டும். காட்சியை நாயகனிடம் மணிரத்னம் விவரிக்க கௌதம் இயக்குனர் எதிர்பார்த்த மாதிரியே அழுது உருகிவிட்டாராம். இதைப் பார்த்த படக்குழுவும் கலங்கிவிட்டதாம்.
புதுமுகமாக இருந்தாலும் அவர் நடிப்பை பார்த்து அசந்த படக்குழுவினர் நாயகனை மனதாரப் பாராட்டினார்களாம். நவரச நாயகனின் மகன் அதுவும் மணிரத்னத்தின் இயக்கத்தில் என்றால் கௌதம் நடிப்பைப் பற்றி சொல்லவா வேண்டும்.
இந்த படத்தில் தெலுங்கில் நம்பர் ஒன்னாக இருக்கும் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். அரவிந்த் சாமி இந்த படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோச்சடையான் படப்பிடிப்பு: ரஜினி ஹாங்காங் பயணம்
ரஜினி நடிக்கும் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு அரங்குகள் அமைத்து ரஜினி நடித்தார். முக்கிய காட்சிகளை படமாக்கினர். ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்கள் இதில் பங்கேற்றனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. ரஜினி, தீபிகா படுகோனே, ஆதி நடித்த காட்சிகளை அங்கு படமாக்கினர். ஒரு பாடலுக்கு ரஜினியும், தீபிகா படுகோனேவும் பரத நாட்டியம் ஆடும் காட்சியையும் அங்கு எடுத்தனர்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பை ஹாங்காங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரஜினி இன்று காலை விமானம் மூலம் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றார். அங்கு ஒரு வாரம் தங்கி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். இதுபோல் தீபிகா படுகோனேயும் ஹாங்காங் செல்கிறார்.
ரஜினி மகள் சவுந்தர்யா இப்படத்தை இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் மேற்பார்வையில் படப்பிடிப்பு நடக்கிறது. கோச்சடையான் படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
தமிழ் நடிகர்களின் முதல் திரைப்படம்
நடிகா்………………………..திரைப்படம்
 பரத் ……………………….போய்ஸ்
 விஷால்……………..செல்லமே
 சிபிராஜ்……………….ஸ்டுடண்ட் நம்பர் 1
 ஸ்ரீகாந்த்………………ரோஜாகூட்டம்
எஸ்.ஜே.சூர்யா………..நியூ
ஜீவன்……………………..யுனிவர்சிட்டி
பிரித்விராஜ்………..கனா கண்டேன்
ஜெய்…………………………..பகவதி
சசிகுமார்……………சுப்ரமணியபுரம்
பிரகாஷ் ராஜ்……….டூயட்
ராஜ்கிரண்………..என் ராசாவின் மனசிலே
கார்த்தி………………….பருத்திவீரன்
எம்.ஜி.ஆர்………….சதிலீலாவதி
சிவாஜி…………………பராசக்தி
ஜெமினிகணேசன்………ஒளவையார்
எஸ்.எஸ்.ஆர்………பராசக்தி
முத்துராமன்……….அரசிளங்குமரி
ஏவி.எம்.ராஜன்…….நானும் ஒரு பெண்
சிவகுமார்………..காக்கும் கரங்கள்
ஜெய்சங்கர்………..இரவும் பகலும்
ரவிச்சந்திரன்………….காதலிக்க நேரமில்லை
விஜயகுமார்……………..ஸ்ரீ வள்ளி
ரஜினிகாந்த்……….அபூர்வ ராகங்கள்
கமலஹாசன்……..களத்தூர் கண்ணம்மா
விஜயகாந்த்…….இனிக்கும் இளமை
சத்யராஜ்……………சட்டம் என் கையில்
பாக்யராஜ்…………………16 வயதினிலே
கார்த்திக்………….அலைகள் ஒய்வதில்லை
பிரபு……………………….சங்கிலி
முரளி………………பூவிலங்கு (தமிழில்)
ராம்கி…………..சின்னப்பூவே மெல்லப்பேசு
பார்த்திபன்………..தாவணிக்கனவுகள்
அர்ஜூன்………………நன்றி
சரத்குமார்……கண் சிமிட்டும் நேரம்
விக்ரம்………..தந்துவிட்டேன் என்னை
பிரசாந்த்……….வைகாசி பொறந்தாச்சி
அஜீத்…………அமராவதி
விஜய்………..நாளைய தீர்ப்பு
பிரபுதேவா……..இதயம்
அரவிந்தசாமி……..தளபதி
அருண்குமார்…..பிரியம்
அப்பாஸ்………காதல் தேசம்
குணால்………காதலர் தினம்
சூர்யா…………நேருக்கு நேர்
ஷாம்……………12பி
மாதவன்……….அலைபாயுதே
தனுஷ்……….துள்ளவதோ இளமை
சிலம்பரசன்…காதல் அழிவதில்லை
பாலா………………அன்பு
ரவி………………..ஜெயம்
நரேஷ்…………….குறும்பு
ஆரியன் ராஜேஸ்…………….ஆல்பம்
வினித்………………ஆவாரம்பூ
விக்னேஷ்………….சின்னத்தாயி
வடிவேலு……………என் ராசாவின் மனசிலே
தங்கவேலு………..சதி லீலாவதி
சுரேஷ்……………………பன்னீர் புஷ்பங்கள்
மோகன்……………நெஞ்சத்தை கிள்ளாதே
ராமாராஜன்……….நம்ம ஊரு நல்ல ஊரு
ராதாரவி…….தண்ணீர் தண்ணீர் தண்ணீர்
காத்தாடி ராமுர்த்தி….பெண்ணே நீ வாழ்க
கரண்……………..அண்ணாமலை
வையாபுரி……………மாணிக்கம்
ஆனந்த பாபு……….உயிருள்ளவரை உஷா
ரஞ்சித்……………………சிந்துநதிப் பூ
நெப்போலியன்………….புது நெல்லு புது நாத்து