வசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்

தமிழ் சினிமாவின் முதல் சோம்பி கதையான உலகம் முழுவதும் மிருதன் 1000 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து இப்படம் இதற்கு முன் வந்த அத்தனை ஜெயம் ரவி படங்களின் வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் நாள் ரூ 7.35 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரின் நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கூட இத்தனை வசூலை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜெயம் ரவி தன் திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஏதும் வரவில்லை.
                                                             திரை விமர்சனம்

ஆங்கிலப்பட ரசிகர்களுக்கு சோம்பிகள் ஏற்கனவே அறிமுகமானவர்கள்.
இரண்டு வருடங்கள் முன்பு வெளியான பிராட் பிட்டின் வேர்ல்ட் வார் ஸீ ஒரு அருமையான சோம்பி திரைப்படம்.
உலகம் முழுவதும் படம் பட்டையை கிளப்பியது. என்லும், பெருவாரியான தமிழ் ரசிகர்களுக்கு சோம்பிகள் புதுசு.
இப்படியொரு முயற்சியை மேற்கொண்டதற்காக சக்தி சௌந்தர்ராஜனுக்கு பாராட்டுகள். இந்த அறிமுக பாராட்டே போதும் என்று அவர் நினைத்திருப்பதுதான் மிருதனின் பலவீனம்.

கெமிக்கல் ஏற்றிச் செல்லும் லாரியிலிருந்து கெமிக்கல் வெளியே
கொட்டிவிடுகிறது. அதனை ஒரு நாய் குடிக்க, கெமிக்கல் காரணமாக வெறி பிடிக்கும் அந்நாய் ஒருவரை கடித்துவிடுகிறது. அவர் இன்னொருவரை கடிக்க... இப்படியே கெமிக்கலின் கடுமையான வைரஸ் அந்த பிரதேசத்தையே சோம்பிகளாக்கிவிடுகிறது. தமிழின் புது முயற்சியான சோம்பிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதை காண்பிக்கும் இந்த ஆரம்பக் காட்சி படத்தில் மேலும் எதிர்பார்க்க வைக்கிறது.
சோம்பி பிரச்சனைக்கு தீர்வுகாண முயலும் மருத்துவர் குழுவுக்கு போக்குவரத்துத்துறை எஸ்..யான ஜெயம் ரவி உதவுகிறார். மருத்துவர் குழுவில்தான் அவர் காதலிக்கும் லட்சுமி மேனனும் இருக்கிறார். ..
மருத்துவர்குழு சோம்பிகளை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டு பிடித்ததா? ஜெயம் ரவி தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இந்த கேள்விகளுக்கு ஏராளமான சோம்பிகளையும், துப்பாக்கி குண்டுகளையும் செலவளித்து பதிலளிக்கிறது படம்.


சோம்பி என்பது கிட்டத்தட்ட ஒரு பேய் படம். பேய் எங்கிருந்து எப்படி தாக்கும் என்ற திகில்தான் பேய் படங்களின் ஆதாரம். சோம்பிகளுக்கும் இது பொருந்தும். மிருதனில் அந்த த்ரில் குறைவு. சோம்பிகள் வரிசையாக ஜெயம் ரவியிடம் வந்து அவரது துப்பாக்கிக்குண்டுக்கு பலியாகின்றன. இரண்டாம் பாதி முழுக்க இந்த டமால் டுமீல் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துகிறது.
                                                    

0 comments:

Post a Comment